வேலுப்பிள்ளை பிரபாகரன் [[வல்வெட்டித்துறையில்வல்வெட்டித்துறை]]யில் 26 நவம்பர்,1954 ஆண்டு,[[வெள்ளாளர்]] சாதியைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும் வள்ளிப்புரம் பார்வதி அம்மையாருக்கும்,நான்காவது மகனாகப் பிறந்தார். பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது [[1958]] ஆம் ஆண்டில் நடந்த [[இலங்கை இனக் கலவரம், 1958|தமிழர் இன அழிப்பில்]] நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் [[ஈழத்தமிழர்]]கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை [[ஆயுதப் போராட்டம்|ஆயுதப் போராட்டத்தின்]] மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் முடிவு செய்தார்.