இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable |
No edit summary |
||
வரிசை 26:
'''இயேசு''' (''Jesus'', [[கி.மு.]] சுமார் 4 – [[கி.பி.]] சுமார் 30-33) என்பவர் [[கிறிஸ்தவம்|கிறித்தவ]] சமயத்தின் மைய நபர் ஆவார். கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] முன்னுரைக்கப்பட்ட [[மெசியா]] (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர்) என்றும் நம்புகின்றனர்.<ref>{{cite web|url = http://www.esvbible.org/John+4%3A25-26/|title = John 4:25-26|date = |accessdate = |website = |publisher = |last = |first = }}</ref>
இயேசு என்பவர் [[கலிலேயா|கலிலேய]] நாட்டில் வாழ்ந்த ஒரு யூதர் ஆவார்.<ref name="Vermes 1981" />
இயேசுவின் பிறப்பு வருடந்தோறும் டிசம்பர் மாதம் 25ம் நாளன்று [[கிறித்துமசு|கிறிஸ்துமஸ்]] என்ற பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் [[புனித வெள்ளி]]யாக போற்றப்படுகிறது. மேலும் அவர் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் [[உயிர்ப்பு ஞாயிறு|உயிர்ப்புப் பெருவிழாவாகக்]] கொண்டாடப்படுகிறது.
இயேசு [[தூய ஆவி]]யின் மூலம் கருத்தரித்தார், [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியாளின்]] மூலம் பிறந்தார், அற்புதங்களை நிகழ்த்தினார், பாவங்களைப் போக்க சிலுவையில் தன்னை பலியாகக் கொடுத்தார், சாவினின்று உயிர்த்தெழுந்தார், விண்ணேற்றம் அடைந்தார் மற்றும் பூமிக்கு மீண்டும் வருவார்
கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். குறிப்பாக [[இஸ்லாம்|இசுலாம்]] சமயத்தில் இயேசு என்பவர் கடவுள் அனுப்பிய முக்கியமான [[நபி|இறைத்தூதர்களில்]] ஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார். [[இஸ்லாம்|இசுலாமிய]]
== பெயர்களின் சொல்லிலக்கணம் ==
வரிசை 46:
=== விவிலியம் தரும் ஆதாரம் ===
{{Gospel Jesus|expanded=all}}
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை
[[கிறித்தவம்|இயேசுவின் வரலாறு]] பற்றிய செய்திகள் [[விவிலியம்|விவிலியத்திற்கு]] வெளியேயும் உள்ளன. அங்கே [[நற்செய்தி நூல்கள்|நற்செய்தி நூல்களில்]] வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.
தற்போது வழக்கிலுள்ள [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு]] கி.மு., கி.பி. என்று, அதாவது, ''கிறிஸ்துவுக்கு முன்'', ''கிறிஸ்துவுக்குப் பின்'' என்றுள்ளது. ''ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு'' (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கியவர் சிரியாவில் 5-6ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி ஆவார். இவர் கணக்கிட்ட முறையில் ஒரு தவறு நிகழ்ந்ததால் இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள்
இன்றும்கூட, கிறிஸ்து பிறந்த ஆண்டும் நாளும் யாதெனத் துல்லியமாக அறிய இயலவில்லை. இயேசுவின் வாழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவாகத் தருகின்ற [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமாகப் பெற முடியவில்லை. ஆனால் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி தகவல்களைத் தருகின்றன. இந்நால்வரில் [[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயுவும்]] [[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்காவும்]] இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர்.
வரிசை 91:
=== இயேசுவின் பிறப்பு ===
[[படிமம்:Gerard van Honthorst 002.jpg|thumbnail|250px|left|<center>இடையர்கள் குழந்தை இயேசுவை வணங்குகின்றனர். ஓவியர்: கெரார்டு ஃபான் ஃகோன்ட்கோர்ஸ்ட். ஓலாந்து. காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: பிரான்சு.</center>]]
[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் கன்னிமரியாவிடமிருந்து கடவுளின் வல்லமையாகிய தூய ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின்படி கபிரியேல் வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" <sup>(லூக்கா 1:28)</sup> என்று வாழ்த்துக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அச்சமுற்றுக் கலங்கிய மரியாவைப் பார்த்து, கபிரியேல் வானதூதர், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" <sup>லூக்கா 1:26-31)</sup> என்றுரைத்தார். இந்நிகழ்வு ''கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு'' அல்லது ''மங்கள வார்த்தையுரைப்பு'' (Annunciation) என நினைவு கூரப்பட்டு மார்ச்சு மாதம் 25ஆம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இயேசு மரியாவின் வயிற்றில் கருவானார் என்று கணக்கிட்டு ஒன்பது மாதங்கள் கழிந்து, டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு
[[கிறிஸ்து பிறப்புவிழா|இயேசு பிறந்த நிகழ்ச்சியை]] விவரிக்கும் [[நற்செய்தி நூல்கள்]] யோசேப்பும் மரியாவும் அப்போது யூதேயாவை ஆண்ட அகுஸ்து சீசர் என்னும் அரசன் இட்ட கட்டளைக்கு ஏற்ப, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்களைப் பதிவு செய்யச் சென்றார்கள் என்று கூறுகின்றன <small>(காண்க: லூக்கா 2:1-5)</small>. யோசேப்பு தமக்கு மண ஒப்பந்தமான மரியாவைக் கூட்டிக்கொண்டு நாசரேத்திலிருந்து தம் சொந்த ஊரான பெத்லகேமுக்குப் பெயர் பதிவுசெய்யச் சென்றார். அப்போது மரியாவுக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவரும் தம் குழந்தையாகிய இயேசுவை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்து, குழந்தையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார் <small>(காண்க: லூக்கா 2:1-7)</small>.
வரிசை 183:
இயேசு பல உவமைகள் வழியாக இறையாட்சி பற்றிய உண்மைகளை மக்களுக்கு அறிவித்தார்; இறையாட்சியில் பங்குபெற மக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்தார்; இறையாட்சியின் பண்புகளை விளக்கினார். குறிப்பாக, எல்லா மக்களும் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு, கடவுளையும் மனிதரையும் அன்புசெய்து வாழ்ந்திட வேண்டும் என்று இயேசு போதித்தார். பகைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது அவர் வழங்கிய முக்கிய போதனைகளில் ஒன்று. தம்மைத் துன்புறுத்தி, சிலுவையில் அறைந்த பகைவரை அவரே மனதார மன்னித்தார்.
=== பொன்மொழிகள் ===
* "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" <sup>(மத்தேயு 11:28)</sup>.
வரிசை 210:
ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு. அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" <sup>(மத்தேயு 9:11)</sup> என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்<sup> (மத்தேயு 9:12-13)</sup>.
=== சிலுவைப்பாடுகளும் இறப்பும் ===
{{Main|இயேசுவின் சாவு}}
நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் <small>(காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19)</small>. அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் <small>(காண்க: மத்தேயு 21:12-17)</small>.
வரிசை 269:
இயேசு இறந்த நாள் பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாக இருந்ததாலும் அக்கல்லறை அருகின் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் <small>(காண்க: யோவான் 19:42)</small>. கல்லறையின் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனதாக மத்தேயு கூடுதல் தகவல் தருகிறார் <small>(காண்க: மத்தேயு 27:60)</small>. இயேசுவின் அடக்கம் ஆழ்ந்த [[கிறித்தவ இறையியல்|இறையியல்]] பொருள் கொண்டதாக தூய பவுல் விளக்குவார்.
===
{{Main|இயேசுவின் உயிர்த்தெழுதல்}}
[[படிமம்:Grunewald - christ.jpg|thumb|left|200px|<center>''இயேசு உயிர்பெற்றெழுதல்'' <br />16வது நூற்றாண்டு ஓவியம்</center>]]
வரிசை 297:
இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு [[இயேசுவின் விண்ணேற்றம்]] நிகழ்ந்தது.
===
இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்ததும், [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|இயேசு உயிர்பெற்றெழுந்ததும்]] அவர் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசு தம் சீடருக்குப் பல முறை காட்சியளித்ததாக நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் நூலும் தெரிவிக்கின்றன.
வரிசை 312:
'''1) [[ஜொசிஃபஸ்|பிளாவியுசு யோசேஃபசு]] (Flavius Josephus)''': இவர் கி.பி. சுமார் 37ஆம் ஆண்டில் பிறந்தார்; கி.பி. சுமார் 101இல் இறந்தார். இவர் யூத சமயத்தைச் சார்ந்த ஒரு குரு; வரலாற்று ஆசிரியர். யூத மக்கள் தங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய உரோமைப் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த காலத்தில் (கி.பி. 66) இவர் வாழ்ந்தார். அக்கிளர்ச்சியின்போது உரோமையர் இவரைப் பிடித்துச் சிறையில் வைத்தனர். விடுதலை இவர் எழுதிய '''யூத மரபு வரலாறு (Jewish Antiquities)''' என்னும் நூல் சிறப்பு வாய்ந்தது. அதில் இயேசுவுக்குத் [[திருமுழுக்கு யோவான்|திருமுழுக்கு வழங்கிய யோவான்]] பற்றிய குறிப்பு உள்ளது. அந்நூலின் பகுதி 18, அதிகாரம் 5, பத்தி 2இல் யோசேஃபசு கீழ்வருமாறு குறித்துள்ளார்:
"திருமுழுக்கு அளிப்பவர் என்னும் பெயர்கொண்ட யோவான் ஒரு நல்ல மனிதர். அவர் யூத மக்களுக்குப் போதித்தார். தூய்மை பெற்ற உள்ளத்தினராக மக்கள் அவரை அணுகி வந்தால் அவர்களுக்கு அவர் தண்ணீரினால்
'''2) பிளாவியுசு யோசேஃபசு''' இயேசு பற்றிய தகவலும் தருகின்றார். ஆதாரம்: '''யூத மரபு வரலாறு (Jewish Antiquities)''', பகுதி 18, அதிகாரம் 3, பத்தி 3. இப்பகுதியில் யூதராகிய யோசேஃபசு இயேசுவை பெரிய அளவு புகழ்ந்து எழுதியிருப்பாரா என்றும், ஒருவேளை சில வரிகள் கிறித்தவரின் இடைச்செருகலாக இருக்கலாமோ என்றும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் ஐயம் எழுப்புகின்றனர். ஐயத்திற்கு உரிய பகுதிகள் கீழ்வரும் மேற்கோளில் சதுர அடைப்புக்குறிகளுக்குள் இடப்படுகின்றன. யோசேஃபசு கூறுகின்றார்:
வரிசை 318:
"ஏறக்குறைய அச்சமயத்தில் "இயேசு" என்னும் பெயர்கொண்ட ஞானியாகிய ஒரு மனிதர் இருந்தார் [அவரை ''மனிதர்'' என்று அழைக்க எனக்குத் தயக்கமாகவே உள்ளது]. அவர் அதிசய செயல்களை நிகழ்த்தினார்; உண்மையை உள மகிழ்வோடு தேடிய மக்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தார். யூதர், கிரேக்கர் உட்பட பலரும் அவரைப் பின்பற்றினார்கள். [அவரே திருப்பொழிவுபெற்ற மெசியாவாக இருந்தார்]. நம் நடுவே மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் அவர்மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பிலாத்து அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுமாறு தண்டனை விதித்தான். அப்படியிருந்தும் தொடக்கத்திலேயே அவர்மீது மதிப்புக் கொண்டிருந்தவர்கள் அவர்மீது தொடர்ந்து அன்பும் பாசமும் காட்டுவதை விட்டுவிடவில்லை. [மூன்றாம் நாளில் உயிர்பெற்றெழுந்து அவர் அவர்களுக்குக் காட்சியளித்தார். இது நிகழுமென்றும் இதுபோன்று அவர் குறித்த வேறு எண்ணிறந்த அதிசயங்கள் நிகழுமென்றும் இறைவாக்கினர் ஏற்கனவே முன்னுரைத்திருந்தனர்.] அவருடைய பெயரைக் கொண்டு ''கிறித்தவர்'' என்று அழைக்கப்படுகின்ற குழுவினர் இன்றுவரை நீடித்து வாழ்ந்துவருகின்றனர்".<ref>{{cite web|url=http://www.3bible.com/books/The%20Antiquities%20of%20the%20Jews.pdfhttp://www.3bible.com/books/The%20Antiquities%20of%20the%20Jews.pdf|title=இயேசு பற்றி யோசேபசு தரும் வரலாற்று ஆதாரம்|publisher=}}</ref>
'''3)பிளாவியுசு யோசேஃபசு நூலின் அரபி மொழிபெயர்ப்பு''': யோசேஃபசு எழுதிய '''யூத மரபு வரலாறு''' நூலின் அரபி மொழிபெயர்ப்பு
"அச்சமயம் இயேசு என்னும் பெயருடைய ஞானி ஒருவர் இருந்தார். அவர் நன்னடத்தையும் நற்பண்பும் கொண்ட மனிதர். யூதர்களும் பிற நாடுகளைச் சார்ந்தவர்களுமான பல மக்கள் அவருடைய சீடர்களாக மாறினர். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும்படி பிலாத்து அவருக்குத் தீர்ப்பு வழங்கினான். அவருடைய சீடர்களாக மாறியிருந்தவர்கள் அவரைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிடவில்லை. சிலுவையில் அறையுண்டு இறந்தபின் அவர் மீண்டும் உயிர்பெற்றவராக அவர்களுக்குக் காட்சியளித்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, அவரே ஒருவேளை இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட அதிசயம் வாய்ந்த மெசியாவாக இருக்கலாம்."
வரிசை 353:
=== யூதப் பார்வை ===
யூதம் இயேசு கடவுளாக இருப்பதை, கடவுளிடம் மத்தியஸ்தம் செய்பவர் அல்லது
=== இசுலாமியப் பார்வை ===
|