இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 24:
|ethnicity=[[யூதர்]]
}}
'''இயேசு''' (''Jesus'', [[கி.மு.]] சுமார் 4 – [[கி.பி.]] சுமார் 30-33) என்பவர் [[கிறிஸ்தவம்|கிறித்தவ]] சமயத்தின் மைய நபர் ஆவார். இவர் '''நாசரேத்தூர் இயேசு''' மற்றும் '''இயேசு கிறிஸ்து''' என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] முன்னுரைக்கப்பட்ட [[மெசியா]] (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர்) என்றும் நம்புகின்றனர்.<ref>{{cite web|url = http://www.esvbible.org/John+4%3A25-26/|title = John 4:25-26|date = |accessdate = |website = |publisher = |last = |first = }}</ref>
இயேசு
இயேசுவின் பிறப்பு வருடந்தோறும் டிசம்பர் மாதம் 25ம் நாளன்று [[கிறித்துமசு|கிறிஸ்துமஸ்]] என்ற பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் [[புனித வெள்ளி]]யாக போற்றப்படுகிறது. மேலும் அவர் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் [[உயிர்ப்பு ஞாயிறு|உயிர்ப்புப் பெருவிழாவாகக்]] கொண்டாடப்படுகிறது. தற்போது வழக்கிலுள்ள [[அனோ டொமினி]] என்ற ஆண்டு கணிப்பு முறை இயேசு பிறந்த வருடத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதாகும்.
இயேசு [[தூய ஆவி]]யின் மூலம் கருத்தரித்தார், [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியாளின்]] மூலம் பிறந்தார், அற்புதங்களை நிகழ்த்தினார், பாவங்களைப் போக்க சிலுவையில் தன்னை பலியாகக் கொடுத்தார், சாவினின்று உயிர்த்தெழுந்தார், விண்ணேற்றம் அடைந்தார் மற்றும் பூமிக்கு மீண்டும் வருவார் ஆகியன கிறிஸ்தவ கோட்பாட்டில் அடங்கும் நம்பிக்கைகள் ஆகும். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இயேசு மக்களை கடவுளுடன் ஒப்புரவாக்க உதவுவதாக நம்புகின்றனர். இயேசு வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட மீண்டும் வருவார் என்று [[நைசின் விசுவாச அறிக்கை|நைசின் நம்பிக்கை அறிக்கை]] வலியுறுத்துகிறது. இது [[கிறிஸ்துவின் இரண்டாம் வருகை|இயேசுவின் இரண்டாம் வருகையுடன்]] இணைந்த ஒரு நிகழ்வாகும். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் [[திரித்துவம்|திரித்துவத்தில்]] இரண்டாம் நபரான இயேசுவை இறைமகனாக வழிபடுகின்றனர்.
கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். குறிப்பாக [[இஸ்லாம்|இசுலாம்]] சமயத்தில் இயேசு என்பவர் கடவுள் அனுப்பிய முக்கியமான [[நபி|இறைத்தூதர்களில்]] ஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார். [[இஸ்லாம்|இசுலாமிய]] சமயத்தினர் இயேசுவைக் கன்னி மரியாளிடம் பிறந்தார் என்று ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்றும் கடவுளுக்கு நிகரானவர் என்றும் ஏற்பதில்லை.<ref>{{cite web|url=http://islam.uga.edu/jesusdif.html|title=Jesus: A Summary of Where Christianity and Islam Agree and Differ|first=Mahmood|last=Merchant|work=islam.uga.edu}}</ref>
== சொற்பிறப்பு ==
{{Main|இயேசு (பெயர்)}}
'''''இயேசு''''' என்னும் சொல் ''Iesus'' என்று அமைந்த இலத்தீன் வடிவத்திலிருந்தும், அதற்கு மூலமான {{Polytonic|Ἰησοῦς}} (''{{lang|grc-Latn|Iēsoûs}}'') என்னும் கிரேக்க வடிவத்திலிருந்தும்
''
{{Polytonic|Χριστός}} (''{{lang|grc-Latn|Christós}}'') என்னும் கிரேக்கச்
எபிரேய வழக்கப்படி, அரசர் மற்றும் இறைவாக்கினர் மக்களை வழிநடத்துகின்ற தலைமைப் பணியை ஏற்கும்போது அவர்கள் தலையில் எண்ணெய் வார்த்து, அவர்களிடம் அப்பணிப்பொறுப்பு ஒப்படைக்கப்படும். இயேசு கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, கடவுளின் வல்லமையால் மனித குலத்தை மீட்டு அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பைப் பெற்றார் என்னும் அடிப்படையில் ''கிறிஸ்து'' ([[மெசியா]], திருப்பொழிவு பெற்றவர்) என அழைக்கப்படுகிறார். அவரை மெசியா என ஏற்று வணங்குவோர் அவர் பெயரால் ''கிறிஸ்தவர்'' (''கிறித்தவர்'') என அறியப்பெறுகின்றனர் <small>(திருத்தூதர் பணிகள் 11:26)</small>.
வரிசை 46:
=== விவிலியம் தரும் ஆதாரம் ===
{{Gospel Jesus|expanded=all}}
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை [[விவிலியம்|விவிலியத்தின்]] பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] அடங்கியுள்ள [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]], [[மாற்கு நற்செய்தி|மாற்கு]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] மற்றும் [[யோவான் நற்செய்தி|யோவான்]] ஆகிய நான்கு [[நற்செய்தி]] நூல்கள் ஆகும். அதன்படி இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[யூதர்|யூத]] இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்தார் என்றும், இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுந்தார்]] என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று பின்பற்றினார்கள் என்றும் அறிய முடிகிறது.
[[கிறித்தவம்|இயேசுவின் வரலாறு]] பற்றிய செய்திகள் [[விவிலியம்|விவிலியத்திற்கு]] வெளியேயும் உள்ளன. அங்கே [[நற்செய்தி நூல்கள்|நற்செய்தி நூல்களில்]] வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. இவை திருமுறை நற்செய்தி நூல்களுக்கு பிந்தைய காலத்தில் எழுதப்பட்டவை என்பதால் நம்பகத்தன்மை அற்றவை என்று பெரும்பாலான அறிஞர்கள் தீர்மானித்துள்ளனர்.
இன்றும்கூட, கிறிஸ்து பிறந்த ஆண்டும் நாளும் யாதெனத் துல்லியமாக அறிய இயலவில்லை. இயேசுவின் வாழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவாகத் தருகின்ற [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமாகப் பெற முடியவில்லை. ஆனால் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி தகவல்களைத் தருகின்றன. இந்நால்வரில் [[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயுவும்]] [[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்காவும்]] இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர்.
[[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்கா நற்செய்திப்படி]], "சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்ட" காலக்கட்டத்தில் இயேசு பிறந்தார் <small>(காண்க: லூக்கா 2:1-7)</small>. குரேனியு மக்கள்தொகை கணக்கிட்டது கி.மு. 6ஆம் ஆண்டு என்று வரலாற்று ஏடுகளிலிருந்து தெரிகின்றது. எனவே லூக்கா கணிப்புப்படியும் இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
வரிசை 73:
# யூதர் அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் ஆளுநராகவிருந்த பொந்தியு பிலாத்து முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு அவரை விடுவிக்க முயன்றாலும், யூதருக்கும் அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிடுகிறார்.
# இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி வேதனைப்பட்ட இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" <sup>(யோவான் 19:30)</sup> என்று கூறித் தலைசாய்த்து உயிர்விட்டார்.
# கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மூன்று நாள்கள் கழித்து சாவை வென்று [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|
# இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" <sup>(மத்தேயு 28:18-20)</sup> என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.
# இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற [[நற்செய்தி நூல்கள்]] எதற்காக எழுதப்பட்டன என்பதை [[யோவான் நற்செய்தி (நூல்)|யோவான் நற்செய்தியாளர்]] தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" <sup>(யோவான் 20:31)</sup>.
வரிசை 210:
ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு. அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" <sup>(மத்தேயு 9:11)</sup> என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்<sup> (மத்தேயு 9:12-13)</sup>.
=== துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையப்படுதல் ===
{{Main|இயேசுவின் சாவு}}
நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் <small>(காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19)</small>. அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் <small>(காண்க: மத்தேயு 21:12-17)</small>.
வரிசை 288:
2) உயிர்பெற்றெழுந்த இயேசு முதன்முதலில் ''பெண்களுக்கு'' (''ஒரு பெண்ணுக்கு'') காட்சியளித்து, அவர்கள் (அவர்) பேதுரு மற்றும் பிற சீடர்களைச் சந்தித்து, அந்த அதிசயச் செய்தியைப் பறைசாற்றும்படி கட்டளையிட்டார்.
3) இந்நிகழ்வில் [[மகதலா மரியா]]
4) இயேசுவின் கல்லறையை ஒரு கல் மூடியிருந்தது என்னும் செய்தி.
* [[நற்செய்திகள்]] வேறுபடும் இடங்கள் இவை:
சரியாக எந்த நேரத்தில் பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள், எத்தனை பெண்கள் போனார்கள்,
இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு [[இயேசுவின் விண்ணேற்றம்]] நிகழ்ந்தது.
|