முழுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: இரட்டை வழிமாற்றை முழுமதி க்கு நகர்த்துகிறது
அடையாளம்: Redirect target changed
Removed redirect to முழுமதி
வரிசை 1:
[[File:Supermoon Nov-14-2016-minneapolis.jpg|thumb|14 நவம்பர் 2016 அன்று தோன்றிய பெரு நிலவு, பூமியின் நடுப்பகுதியில் இருந்து {{convert|356511|km|mi|abbr=on}} தொலைவில் இருந்தது]]'''முழுமதி''' என்பது பூமியில் இருந்து காணும் போது [[நிலவு]] முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும். இது '''பூர்ணிமா''' என்றும் '''பவுர்ணமி''' என்றும் அழைக்கப்பெறுகிறது. இது [[ஞாயிறு (விண்மீன்)|கதிரவன்]] மற்றும் நிலவிற்கு இடையே பூமி வரும்போது ஏற்படும் நிகழ்வாகும். இந்நாளில் பூமியை நோக்கி இருக்கும் நிலவின் ஒரு துருவம் கதிரவ வெளிச்சத்தால் ஒளிர்ந்து வட்ட வடிவில் காட்சியளிக்கும்.
#வழிமாற்று [[முழுமதி]]
 
==வானியல் நிகழ்வுகள்==
நிலவு பூமியின் நிழலிற்கு கடந்து செல்லும் போது நிலவு மறைப்பு ஏற்படுகிறது. அந்நிகழ்வின் போது நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றுவதால் அது சிவப்பு நிலவு என்றும் இரத்த நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் இரண்டாவதாக வரும் முழு நிலவு ஆங்கிலத்தில் நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது. எனினும் அது நீல நிறத்தில் தோற்றமளிக்காது.
 
நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் போது பெருநிலவு என்றும் வெகு தொலைவில் இருக்கும் போது குறுநிலவு என்றும் அழைக்கப்படுகிறது.
 
==இந்து சமயத்தில்==
 
===தொன்மக் கதை===
இந்து சமயத்தில் சந்திரன் கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தார். அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்தார். பதினைந்து கலைகளில் ஒவ்வொன்றாகக் குறைந்து இறுதியில் ஒன்று மட்டும் மீதமிருக்கும் போது, சிவபெருமானை சந்தமடைந்தார் சந்திரன். சந்திரனை காக்க தனது சடாமுடியில் வைத்துக்கொண்டார், எனினும் தட்சன் சாபம் முழுவதும் தீராது, பதினைந்து நாட்கள் கலைகள் அழிந்தும், பின் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வரும் என்று வரமளித்தார்.
 
===பௌர்ணமி விரதங்கள்===
இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.
 
# சித்ரா பவுர்ணமி - [[சித்ரகுப்தன்|சித்ரகுப்தனின்]] பிறந்தநாள்.
# வைகாசி பவுர்ணமி - [[முருகன்|முருகனின்]] பிறந்தநாள்.
# ஆனிப் பவுர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
# ஆடிப் பவுர்ணமி - திருமால் வழிபாடு
# ஆவணிப் பவுர்ணமி - ஓணம், ரக்சாபந்தனம்
# புரட்டாசி பவுர்ணமி - உமாமகேசுவர பூசை
# ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
# கார்த்திகைப் பவுர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
# மார்கழிப் பவுர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்
# தைப் பவுர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
# மாசிப் பவுர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
# பங்குனிப் பவுர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்
 
[[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. [[பார்வதி|அம்பிகை]] வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. [[சித்திரை]] மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.
 
மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் [[சித்திரகுப்தர்]] அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திரா பௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.
 
==பௌத்தமும் பூரணையும்==
[[இலங்கை]]யில் பௌத்தர்களுக்கும் பூரணை புனிதநாளாக விளங்குகின்றது. பௌத்தர்கள் [[புத்தர்]] பரிநிர்வாணம் அடைந்த தினமாக ஒவ்வொரு பூரணையும் வழிபாடு, தான தர்மங்கள் செய்கின்றனர். இது அரச விடுமுறை தினமாக உள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[அமைவாதை]]
* [[இந்துக் காலக் கணிப்பு முறை]]
* [[பஞ்சாங்கம்]]
* [[திதி]]
 
 
==உசாத்துணை==
*இந்துக்கலைக்களஞ்சியம் - தொகுதி பத்து - இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணக்களம், இலங்கை. 2009. பக் 322
 
{{பஞ்சாங்கம்}}
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:வானியல்]]
 
[[hi:पूर्णिमा]]
[[or:ପୂର୍ଣ୍ଣିମା]]
"https://ta.wikipedia.org/wiki/முழுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது