தி சாங் ஆஃப் ஸ்பாரோஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 25:
== கதைச்சுருக்கம் ==
மூத்த மகள் ஹனீயே பிறப்பு முதலே காது கேளாதவள். அரசு இலவசமாகக் கொடுத்த காது கேட்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துபவள். ஆனாலும் உதட்டசைவை வைத்து பிறரின் பேச்சைப் புரிந்து கொள்ளப் பழகியவள். ஒரு நாள் அவளுடைய காதுக் கருவி அவர்களுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெரிய மழைநீர்த் தொட்டியில் விழுந்துவிடுகிறது. இதைக் கேள்விப்பட்டு கரீம் கோழிப் பண்ணையில் இருந்து விரைவாக வீடு திரும்புகிறார். கரீமின் மகன் ஹுசைன் அக்கம் பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் சேர்ந்து அக்காவின் காதுக் கருவியை - தூர் வாரப்படாத, சகதியான அந்த நீர்த் தேக்கத் தொட்டியில் தேடிக் கொண்டிருக்கின்றான்.
ஒரு நாள் அவரது மூத்த மகள் ஹனீயே கேள்விச்சாதனத்தைத் தொலைத்துவிட்டாள் என்று கேள்விபட்டு பண்ணையில் இருந்து நேரமாக வீடு திரும்புகிறார். வீட்டு பக்கத்தில் உள்ள தூர் வாரப்படாத, சகதியான நீர் தேக்கத் தொட்டி ஒன்றில் அவரது மகன் ஹுசேன் மற்றும் அக்கம் பக்கத்து பிள்ளைகள் பலரும் ஹனீயேவின் செவிச்சாதனத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். தொட்டியில் இறங்கியதற்காகக் கரீம் அவர்களைக் கடிந்து கொண்டபோதும், தானும் தொட்டியில் இறங்கி தேடுகிறார். தேடலுக்கு இடையே ஹுசேனும் அவனது நண்பர்களும் அந்தத் தொட்டியைத் தூர்வாரி, சுத்தம் செய்து, அதில் மீன் வளர்த்து, பெரும் பணக்காரர்கள் ஆகலாம் என்று யோசனை கூறுகிறான்; கரீம் அந்த யோசனையை நிராகரிக்கிறார். ஒரு வழியாக அவர்கள் கேட்கும் கருவியைக் கண்டுபிடிக்கின்றனர்; இருந்தும் அது சரியாக வேலை செய்வதில்லை. அருகில் உள்ள மருத்துவமனையில் இலவச மாற்று கருவி கிடைக்க நான்கு மாதங்கள் ஆகும் என்கின்றனர்; அவசியமானால் தெஹ்ரான் நகருக்குச் சென்றால் விரைவில் கிடைக்கும் என்று தெரிய வருகிறது.▼
▲
சில தினங்களில் கரீம் வேலை செய்யும் பண்ணைக்குப் புதிய தீக்கோழிகளை இறக்கிக் கொண்டிருக்கும்போது, அதில் ஒன்று தப்பி விடுகிறது; அதற்கு கரீமைக் காரணம் காட்டி, அவரை வேலையை விட்டு நீக்குகின்றனர். அதன் பின் ஓரிரு தினங்களில் ஹனீயேவின் கருவியைச் சரிசெய்ய தெஹ்ரானுக்குச் செல்கிறார்; அங்கு கருவியை சரி செய்ய 350000 தோமான்கள் செலவாகும் என்று தெரிய வருகிறது. இதற்கிடையில் அவரை வாடகைக்கு வண்டி (மோட்டார் சைக்கில்) ஓட்டுபவர் என்று ஒருவர் தவறாக புரிந்துகொண்டு சவாரி ஏற, அவர் வாடகைக்கு வாகனம் ஓட்டுவதையே புதிய தொழிலாக்கிக் கொள்கிறார். தொழிலின் நிமித்தமாக அவர் சந்திக்கும் மனிதர்களும், நேரும் அனுபவங்களும் அவரது நேர்மையான பெருந்தன்மையான குணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் அவரது மனைவி, மகளுக்கு வேதனையாக இருக்கிறது. நாளுக்கு நாள் பேராசை பெருக, நகரத்தில் கழித்துவிடப்பட்ட குப்பைப் பொருட்களை வீட்டில் கொண்டு சேர்த்துவைக்கிறார். மகளின் செவிக் கருவி குறித்தும் மறந்து போகிறார். இந்நிலையில் அவருக்கு நெருங்கியவர்கள் அவரது நற்பண்புகளை மீட்க முனைகின்றனர்.▼
தந்தையிடம் பணமில்லை எனத் தெரிவதால் உதட்டசைவால் பேச்சைப் புரிந்துகொள்ளும் மகள் 'கருவி இல்லாமலேயே காது ஓரளவு கேட்கிறது' எனப் பொய் சொல்கிறாள் ஹனீயே. மகளின் நிலையை உணர்ந்து கலங்குகிறார் கரீம்.
▲
ஒரு நாள் வீட்டில் குவித்திருக்கும் குப்பைகளை அடுக்கிக் கொண்டிருக்கும்போது, அவை சரிந்து விழுந்து அவரது கால் முறிந்து, வேறு சில காயங்களும் ஏற்படுகிறது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியாமல் போகவே, அவரது மகன் வேலை செய்யத் துவங்குகிறான். அவன் தன் நண்பர்களோடு சேர்ந்து முன்னர் யோசித்து வைத்திருந்த மீன்களையும் வாங்குகின்றனர். ஒரு நாள் ஒரு பண்ணைக்குச் செடிகளை வழங்க செல்லும்போது அவர்கல் மீன் வாங்கி வைத்திருந்த பீப்பாய் ஒழுகத் தொடங்குகிறது. அதில் மீண்டும் நீர் நிறப்ப எடுத்து வரும்போது அந்த பீப்பாய் உடைந்து மீன்கள் தரையில் சிந்துகின்றன. அவற்றை அப்படியே இறந்து போக விடாமல் ஹுசேன் அவற்றை அருகில் ஓடிக் கொண்டிருக்கும் நீரில் தள்ளி விடுகின்றான். கரீம் இதனைக் கண்டு தன் மகன் மீது பெருமை கொள்கிறார். கரீமின் உடல்நலம் சரியாகிக் கொண்டிருக்கும் போது, அவருடன் மென்பு வேலை செய்தவர் ஒருவர் தொலைந்து போன தீக்கோழி திரும்ப வந்துவிட்டது என்று கூறுகின்றார். அடுத்த காட்சியில், கரீம் பண்ணையில் அந்தத் தீக்கோழியை கண்ணீர் மல்கக் காண்கிறார்..
|