படு கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 25:
'''படு கான்''' ({{lang-mn|Бат хаан, ''பட் ஹான்''}}, {{lang-ru|хан Баты́й, ''கான் படி''}}, {{lang-zh|拔都 ''ப டு''}}, [[தடர மொழி|தாதர்]]:Бату хан, [[இலத்தீன்]]:Baty xan, {{lang-ar|باتو خان}}; c. 1207–1255), மற்றொரு பெயர் '''சைன் கான்''' ({{lang-mn|நல்ல கான்}}, Сайн хаан, ''சைன் ஹான்'') மற்றும் '''திசார் படு''',<ref>{{cite book|last=வெதர்போர்டு|first=சாக்|title=செங்கிஸ் கான் மற்றும் நவீன உலகத்தின் உருவாக்கம்|year=மார்ச் 22, 2005|page=150|url=https://books.google.co.in/books?id=A8Y9B5uHQcAC&printsec=frontcover&dq=genghis+khan&hl=en&sa=X&ved=0ahUKEwjoseTJqaTYAhXJMI8KHbiECbEQ6AEIJjAA#v=onepage&q=genghis%20khan&f=false}}</ref> ஒரு மங்கோலிய ஆட்சியாளர் மற்றும் [[தங்க நாடோடிக் கூட்டம்|தங்க நாடோடிக் கூட்டத்தின்]] (மங்கோலியப் பேரரசின் ஒரு பகுதி) தோற்றுவிப்பாளரும் ஆவார். இவர் [[சூச்சி]]யின் மகனும், [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] பேரனும் ஆவார். கீவிய ருஸ், வோல்கா பல்கேரியா, குமனியா மற்றும் [[காக்கேசியா|காக்கேசியாவை]] சுமார் 250 ஆண்டுகளுக்கு ஆண்ட இவரது ''உளூஸ்'' [[தங்க நாடோடிக் கூட்டம்|தங்க நாடோடிக் கூட்டத்தின்]] தலைமைப் பகுதியாகும்.செங்கிஸ் கானின் மகன்களின் இறப்பிற்குப் பிறகு இவர் மங்கோலியப் பேரரசில் பெரிதும் மதிக்கப்பட்டார். இவர் அகா (அண்ணன்) என்று மங்கோலியப் பேரரசில் அழைக்கப்பட்டார்.
== படு கானின் ஆரம்ப காலங்கள் ==
தனது மகன் சூச்சியின் இறப்பிற்குப் பிறகு செங்கிஸ் கான் சூச்சியின் நிலப்பரப்புகளை அவரது மகன்களுக்குக் கொடுத்தார். ஆனால் படுவைத் தங்க நாடோடிக் கூட்டத்தின் (இது சூச்சியின் உளூஸ் அல்லது கிப்சாக் கானேடு என்று அறியப்படுகிறது) கானாக நியமித்தார். சூச்சியின் மூத்த மகனான ஓர்டா கானும் படு தான் தன் தந்தைக்குப் பிறகு ஆட்சி செய்ய வேண்டும் என்று ஒத்துக்கொண்டார். செங்கிஸ் கானின் கடைசித் தம்பி தெமுகே முடிசூட்டு விழாவில் செங்கிஸ் கானின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.<ref>H. H. Howorth ''The history of the Mongols'', p.II, d.II, p.37</ref> 1227 இல் செங்கிஸ்கான் இறந்த போது அவர் 4000 மங்கோலிய வீரர்களை சூச்சியின் குடும்பத்திற்குக் கொடுத்தார். சூச்சியின் நிலப்பரப்புகள் படுவிற்கும் அவரது அண்ணன் ஓர்டாவிற்கும் இடையே பிரித்துக் கொள்ளப்பட்டன. ஓர்டாவின் அரசு வெள்ளை நாடோடிக் கூட்டம் என்று அழைக்கப்பட்டது. அவரது ஆளும் பகுதியானது தோராயமாக வோல்கா ஆறு மற்றும் பல்காஷ் ஏரிக்கு இடையே அமைந்திருந்தது. அதே நேரத்தில் படுவின் நாடோடிக் கூட்டமானது வோல்காவுக்கு மேற்கில் இருந்த பகுதிகளை ஆண்டது.
1229 இல் ஒகோடி 3 தியுமன் வீரர்களை குக்டே மற்றும் சன்டேயின் தலைமையின் கீழ் உரல் ஆற்றின் கீழ் பகுதிகபகுதிகளில் இருந்த பழங்குடியினரை வெல்ல அனுப்பினார். அபுல்கசி என்பவரது கூற்றுப்படி படு கான் ஒகோடியின் தலைமையில் வடக்கு சீனாவில் நடைபெற்ற சின் வம்ச படையெடுப்பில் கலந்து கொண்டார். அதே நேரத்தில் அவரது தம்பி பஷ்கிர்கள், கியுமன்கள் மற்றும் ஆலன்கள் ஆகியவர்களுடன் மேற்கில் போரிட்டுக் கொண்டிருந்தார். எதிரிகள் எதிர்ப்பைக் காட்டிய போதும் மங்கோலியர்கள் சுரசன்களின் முக்கிய நகரங்களை வென்றனர். பஷ்கிர்களைத் தங்களது கூட்டாளிகளாக ஆக்கினர். 1230களில் ஒகோடி சீனாவின் ஷான்க்ஷியில் உள்ள நிலப்பகுதிகளை படு மற்றும் சூச்சியின் குடும்பத்தினருக்கு பிரித்துக் கொடுத்தார். ஆனால் பாரசீகத்தின் குராசான் பகுதியைப் போலவே தனது அதிகாரிகளை ஒரு ஏகாதிபத்திய ஆளுநரின் கீழ் நியமித்தார்.<ref>Thomas T. Allsen ''Culture and Conquest in Mongol Eurasia'', p.45</ref>
==மேற்கோள்கள்==
|