பாலைவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Désert-du-Thar.jpg|thumb|250px|[[தார் பாலைவனம்|தார் பாலைவனத்தில்]] ஒரு காட்சி]]
[[படிமம்:ValleLuna-002.jpg|thumb|250px|[[அட்டகாமா பாலைவனம்]]]]
[[புவியியல்|புவியியலின்]] படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது '''பாலைவனம்''' எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. [[புவி]]யின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை.
 
==வரையறை==
வரிசை 7:
 
===வகைகள்===
சில வேளைகளில் பாலைவனங்களை '''குளிர்ப் பாலைவனங்கள்''' என்றும் '''சூடான பாலைவனங்கள்''' என்றும் பாகுபடுத்துவர். குளிர்ப் பாலைவனங்கள் உறைபனியால் மூடப்பட்டவையாகும். 1961 இல் பெவெரில் மேக்ஸ் பாலைவனங்களை மழை வீழ்ச்சியின் அடிப்படையில் வகைப்படுத்தினார். தற்போது அங்கீகரிக்கப்படும் பாகுபாடு யாதெனின் வரண்ட வலயம், அரையுலர் வலயம் எனப் பிரிக்கும் பாகுபாடாகும். வரண்ட பாலைவனங்களில் குறைந்தது 12 மாதங்களாவது மழைவீழ்ச்சி அற்றுக் காணப்படுவதோடு அது 250 mm (10 அங்குலங்கள்) விடக் குறைந்ததாகக் காணப்படும். அரையுலர்ப் பாலைவனங்களில் மழை வீழ்ச்சி 250 – 500250–500 mm (10–20 அங்குலங்கள்) வரை இருக்கும்.
 
===சொல்லிலக்கணம்===
வரிசை 16:
[[File:AntarcticaDomeCSnow.jpg|thumb|அன்டார்க்டிக் பாலைவனம்]]
 
புவியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு (33%) பாலைவனங்களாகும். சூடான பாலைவனங்களின் பகல்-இரவு வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும். இவற்றின் குளிர்கால-கோடைகால வெப்பநிலை வேறுபாடும் அதிகமாகக் காணப்படும். சூடான பாலைவனங்களின் கோடைக்கால வெப்பநிலை 45 °C/113 °F வரை உயரும் அதே வேளை குளிர்கால வெப்பநிலை 0 °C/32 °F அல்லது அதை விடக் குறைவடையும். இங்கு ஈரப்பதம் குறைவென்பதால் இதனைச் சுற்றியுள்ள வளி சூரியனால் பகலில் வேகமாக சூடாக்கப்படுவதுடன் இரவு வேளையில் வேகமாகக் குளிர்வடைந்து விடும். எனவே இங்கு பகல்-இரவு வெப்பநிலை வேறுபாடு அதிகமாகும்.
[[File:World largest deserts.jpg|thumb|புவியின் மிகப்பெரிய பத்து பாலைவனங்கள் (அன்டார்க்டிகா காட்டப்படவில்லை)]]
{| class="wikitable sortable"
|+ '''புவியின் மிகப்பெரிய பத்து பாலைவனங்கள்'''
வரிசை 99:
மனிதன் பல நூற்றாண்டுகளாக பாலைவனத்தில் வாழ்ந்து வருகிறான். [[கலஹாரி பாலைவனம்|கலஹாரி பாலைவனப்]] பழங்குடிகள், [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]], வட அமெரிக்க பழங்குடிகள் மற்றும் பலதரப்பட்ட இன மக்கள் பாலைவனத்தில் வாழ்கின்றனர். விலங்குகளின் தடங்களை அறியவும், அதனை வேட்டையாட ஆயுதங்களை உருவாக்கவும், தண்ணீரைத் தேடி அலையவும், உண்ணக் கூடியவைகளை தரம் பிரிக்கவும், அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டனர். இச்செயல்களும் திட்டங்களும் வாய் மொழியாகவே அவர்களுள் பரவியது<ref name=Fagan>{{cite book |title=People of the Earth |last=Fagan |first=Brian M. |year=2004 |publisher=Pearson Prentice Hall |isbn=0205735673 |pages=169–181 }}</ref>. மற்ற கலாச்சாரங்கள் அனைத்தும் ஆடுகள், மாடுகள், கால்நடைகள் ஒட்டகங்கள், காட்டெருதுகள், கலைமான் ஆகியவற்றிலருந்து வளர்த்துக் கொண்டனர். மழைக்காலங்களில் வளரும் தாவரங்களைத் தேடி கூட்டமாக இடம் பெயர ஆரம்பித்தனர். குடிபெயரும் போது தங்களுடன், துணிகள் அல்லது தோல்களால் ஆன கூடாரங்கள், குடிக்க பால் அல்லது இரத்தம், உண்ண இறைச்சி ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர்<ref>{{cite journal |author= Dyson-Hudson, Rada; Dyson-Hudson, Neville |year=1980 |title=Nomadic pastoralism |journal=Annual Review of Anthropology |volume=9 |pages=15–61 |jstor=2155728 }}</ref>.
[[File:Bilma-Salzkarawane1.jpg|thumb|left|upright=1.3<!--width for very low image, to help to equalize image area-->|alt=Salt caravan of heavy laden camels in desert|அஜடேஸ் மற்றும் பில்மா உப்புச் சுரங்கங்களுக்கு இடையில் பயணம் செய்யும் உப்புப் பொதிகள்]]
பாலைவன நாடோடிகளும் வணிகர்களும் இருந்தனர். சஹாரா பாலைவனமானது அட்லாண்டிக் விளிம்பிலிருந்து எகிப்து வரை நீண்டு பரந்த பரப்பளவு கொண்டதாக உள்ளது. சகாராவின் வடக்கில் உள்ள வளமான மத்தியதரைக் கடல் பகுதியுடன் தெற்கில் சஹெலை இணைக்கும் வணிக பாதைகள் வளர்ச்சியடைந்தன இவற்றின் வழியாக, பாலைவத்தில் மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச்செல்ல பெருமளவிலான ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. [[துவாரக்கு மக்கள்|துவாக்கு]] வணிகர்களால் வழக்கமாக பாரம்பரியமாக அடிமைகள், தந்தம், தங்கம் போன்றவற்றை வடக்கு நோக்கி எடுத்துச் சென்றும், தெற்குநோக்கி உப்பை வணிகத்துக்காக கொண்டு சென்றனர். இந்த வணிகர்களால் பல்வேறு பாலைவனச் சோலைகள் மற்றும் கிணறுகளுக்கு இடையில் பயணிக்க ஏதுவாக வழிகாட்டுவதற்கு இப்பகுதியின் நிலவியல் அறிவைக் கொண்ட பெர்பர்கள் பயன்படுத்தப்பட்டனர். <ref>{{cite journal |author=Masonen, Pekka |year=1995 |title=Trans-Saharan trade and the West African discovery of the Mediterranean |journal=Nordic Research on the Middle East |volume=3 |pages=116–142 |url=http://www.smi.uib.no/paj/Masonen.html }}</ref> 8 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சஹாரா முழுவதும் பல மில்லியன் அடிமைகள் வடக்கு நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். <ref>{{cite book |title=The Trans-Saharan Slave Trade |last=Wright |first=John |year=2007 |publisher=Routledge |isbn=978-0-203-96281-7 |page=22 |url=https://books.google.com/books?id=i0beGIgJF8kC&q=million+slaves#v=snippet&q=million%20slaves&f=false }}</ref> மோட்டார் வாகனங்கள், கப்பல் மற்றும் வான் சரக்கு போக்குவரத்து சாதனங்களின் வருகைக்குப்பின் பாரம்பரிய தரைவழிப் போக்குவரத்துகள் குறைந்துவிட்டன, ஆனால் வணிகர்கள் இன்னும் அகடெஸ் மற்றும் பில்மாவிற்கும், பாலைவனத்திற்கு உள்பகுதியில் உள்ள சமூக மக்களுக்கு உப்பு கொண்டு செல்ல திம்புக்டுவிற்கும் டவுடுனிக்கும் இடையில் செல்லும் வழிகளிலும் பயணம் செய்கின்றனர்.<ref>{{cite news |title=Sahara salt trade camel caravans |url=http://news.nationalgeographic.co.uk/news/2003/05/photogalleries/salt/ |newspaper=National Geographic News |date=2010-10-28 |accessdate=2013-09-22}}</ref>
 
பாலைவனப் பகுதி விளிப்புப் பகுதிகள் சிலவற்றில், மழைப்பொழிவு ஏற்பட்டும் பொருத்தமான சூழல்கள் ஏற்படும்போது, சில குழுக்கள் பயிர்களை பயிரிட்டன. கால்நடை மந்தைகள் வறட்ச்சியால் இறந்து இழப்புகளைச் சந்தித்தபோது, மேய்ச்சலுடன் சாகுபடி செய்யவும் நிர்பந்தம் ஏற்பட்டு, இது நடந்தது இருக்கலாம். அவர்கள் பயிரிடப்பட்ட நிலப்பகுதியால், நாடோடி மேய்பர்களுக்கு மேய்சலுக்கான இடப் பகுதி குறைத்து, அதனால் நிலப்பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருந்தது. பாலைவனத்தின் அரை வறண்ட நிலப்பகுதிகள் 1930 களில் அமெரிக்க டஸ்ட் பவுல் பகுதியில் நடந்தது போல, மண் அரிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து நிறைந்த மண் வகைகள் இவையாகும். புற்கள் உள்ள இடத்தின் தரைமண் அரித்துசெல்லப்படுதல், மற்றும் தொடர்ச்சியான வறண்ட ஆண்டுகளில் பயிர் விளைச்சல் தோல்வியடைதல், பிரமாண்ட தூசுப் புயல்களால் மேல் மண் பறத்தல் போன்ற பேரழிவில் பாதி மில்லினுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. <ref>{{cite web | title=First Measured Century: Interview:James Gregory | url=http://www.pbs.org/fmc/interviews/gregory.htm |accessdate=2013-05-25 | publisher=Public Broadcasting Service }}</ref>
வரிசை 124:
{{main|பாலை நிலம்}}
பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர்.
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாலைவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது