அங்கேரியப் புரட்சி, 1956: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Titoduttaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 23:
ஹங்கேரியர்களின் எழுச்சி ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எழுச்சி ஊர்வலமாக தலைநகர் [[புடாபெஸ்ட்]]டின் மையப் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ஆரம்பமானது. தமது கோரிக்கைகளைத் தரவென ஹங்கேரிய வானொலிக் கட்டிடத்தினுள் புகுந்த மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதனை அடுத்து தலைநகரில் கலவரம் மூண்டது.
புரட்சி நாடெங்கும் பரவியதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் இராணுவக் குழுக்களாக ஒன்றிணைந்து காவற்துறையினருடனும் [[சோவியத்]] படைகளுடனும் போரிட்டனர். [[சோவியத்]] சார்பு [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டுகள்]] மற்றும் காவற்துறையினர் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். அரசு கவிழ்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்த பல உள்ளூராட்சி அமைப்புகளைப் புரட்சியாளர்கள் கைப்பற்றி அரசியல் மாற்றத்தைக் கோரினர். புதிய அரசு [[வார்சா உடன்படிக்கை]]யில் இருந்து விலாகுவதாக அறிவித்து சுதந்திரமான தேர்தல்களை நடத்தவிருப்பதாக அறிவித்தது. அக்டோபர் இறுதியில் போர் ஓரளவு ஓய்ந்து நாடு அமைதியானது.
சோவியத் படைகளைத் திரும்ப அழைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக சோவியத் அரசு அறிவித்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு புரட்சியை அடக்குவதற்கு அது முடிவெடுத்தது. இதன்படி, [[நவம்பர் 4]] ஆம் நாள் சோவியத்தின் பெரும் எண்ணிக்கையிலான
▲சோவியத் படைகளைத் திரும்ப அழைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக சோவியத் அரசு அறிவித்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு புரட்சியை அடக்குவதற்கு அது முடிவெடுத்தது. இதன்படி, [[நவம்பர் 4]] ஆம் நாள் சோவியத்தின் பெரும் எண்ணிக்கையிலான 6000 டாங்குகள், 1 லட்சம் காலாட் படையினர் புடாபெஸ் நகரையும் நாட்டின் ஏனைய நகரங்களையும் முற்றுகையிட்டனர். போர் மீண்டும் வெடித்தது. ஹங்கேரியர்களின் எதிர்ப்பு [[நவம்பர் 10]] ஆம் நாள் வரை நீடித்தது. இச்சண்டைகளின் போது 1 லட்சத்திற்கும் அதிகமான ஹங்கேரியர்களும், 2000 சோவியத் படையினரும் கொல்லப்பட்டனர். 200,000 ஹங்கேரியர்கள் அகதிகளாக வெளியேறினர். பெருந்தொகையானோர் அடுத்தடுத்த மாதங்களில் கைது செய்யப்பட்டனர். [[1957]] ஜனவரிக்குள் புதிய சோவியத்-சார்பு அரசு அனைத்து பொது ம்க்கள் எதிர்ப்புகளையும் அடக்கியது.
இப்புரட்சி பற்றிய மக்களின் கருத்துக்கள் அடுத்த 30 ஆண்டு காலத்துக்கு தடை விதிக்கப்பட்டன. [[பனிப்போர்|பனிப்போரின்]] முடிவில் [[1989]] ஆம் ஆண்டில் [[அக்டோபர் 23]] ஆம் நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
|