ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
உறவு முறை அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 3:
== வரலாறு ==
கொண்டை கட்டி மறவர், அதாவது ஆண்கள் தலைமுடியை கொண்டை போடும் வழக்கம் கொண்ட மறவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மறுவி கொண்டையங் கோட்டை மறவர் என்றாகியது.{{cn}} தற்போதுள்ள [[இராமநாதபுரம்]], [[விருதுநகர்]] மாவட்டங்களின் மையப்பகுதி அகப்பைப் போன்ற (அகப்பை என்பது தேங்காயின் மூடியில் ஒரு கைமுழ மூங்கிலை செருகி தயாரிப்பது) அமைப்புள்ள நிலப்பகுதி அகப்பைநாடு, இதுவும் காலப்போக்கில் மறுவி ஆப்பனாடு என்றாகியது. அகப்பைநாடு மற்றும் அப்பகுதி மறவர்கள் இணைந்து ''அகப்பைநாடு கொண்டை கட்டி மறவர்'' என்பது "ஆப்பனாடு கொண்டையங்கோட்டை மறவர்" என்றாயிற்று.
== உறவுமுறைகள் ==
இச்சாதியில் கிளைகள் (branches) எனும் பிரிவு உள்ளது. அதாவது ஒரு கொத்து இரு கிளைகள் கொண்டது. மொத்தம் 9 கொத்தும்
கொண்டையன் கோட்டை மறவரின் கிளைகள் :
1)கற்பக கொத்து
1)மறுவீடு கிளை
2)அகத்தியர் கிளை
2)முந்திரியக் கொத்து
1)வெட்டுவான் கிளை
2)அழகு பாண்டியன் கிளை
3)கமுகங் கொத்து
1)வீனையன் கிளை
2)பேர் பெற்றோன் கிளை
4) மல்லிகைக் கௌத்து
1)சேதரு கிளை
2)வாழ் வீவன் கிளை
5)ஏலக் கொத்து
1)கொடையன் கிளை
2)அரசன் கிளை
6)மிளகுக் கொத்து
1)வீர முடி தாங்கினார் கிளை (வீர மடத்தான் கிளை)
2)ஜெயங்கொண்டார் கிளை
7)தக்காளி கொத்து
1)சங்கரன் கிளை
2)சாத்தாவின் கிளை
8)தென்னங் கொத்து
1)ஔவையார் கிளை
2)சாம்புமன் கிளை
9)சீரகக் கொத்து
1)நாட்டை வென்றார் கிளை
2)தருமர் கிளை
முடிந்தவரை வேற கொத்துக்குள் திருமணம் செய்ய கூடாது.
சகோதர உறவு
நம்பர் 1ல் உள்ள கிளைகஞக்கு இடையே சகோதர உறவாகும். (மருவீடூ கிளை, வெட்டுவான் கிளை, வீனையன் கிளை, வீர மடத்தான் கிளை,,...... இவை அனைத்தும் சகோதர கிளையாகும்) இவர்களுக்கு இடையே திருமணம் உறவு கிடையாது.
இதேபோல
நம்பர் 2ல் உள்ள கிளைகஞக்கு இடையே சகோதர உறவாகும். (அகத்தியர் கிளை, கிளை, அழகு பாண்டியன் கிளை, பேர் பெற்றோன் கிளை,,...... இவை அனைத்தும் சகோதர கிளையாகும்) இவர்களுக்கு இடையே திருமணம் உறவு கிடையாது.
நம்பர் 1ல் உள்ள கிளைகள் நம்பர் 2 ல் உள்ள கிளைகளிடம் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.
இந்த சாதியினரிடையே தமிழகத்தில் பெரும்பான்மையான சாதிகளில் இருக்கும் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. தாய் வழி சமூகம் [1] அமைப்பின் தன்மையை இன்றளவும் அதாவது தாயின் வழியைப் பிள்ளைகளுக்குக் கொண்டுள்ள நன்குடி வேளாளர், இல்லத்துப்பிள்ளைமார் போன்ற சாதியினரைப் போல் இவர்களுக்கு தாயின் கிளையே மகனுக்கும் மகளுக்கும் உள்ளதால் அக்காள் மகள் சகோதர உறவாகும். அதாவது அம்மா, மாமா, ஆகியோர் சகோதரப் பிரிவினராகவும், தந்தை, அத்தை போன்றோர் சம்பந்தப் பிரிவினராகும். இதை பற்றிய முழு தகவல் கிடைக்கவில்லை.
<br />
== பண்பாடு ==
இந்த சாதிப் பெண்கள் காது வளர்த்து (தமிழ் பண்பாட்டுக்கு உட்பட்ட நடப்பு நிகழ்வுகள்) [[தண்டட்டி]] (பாப்படம்) அணியும் வழக்கம் உடையவர்கள். இந்த வழக்கம் [[இராமநாதபுரம் மாவட்டம்]] [[முதுகுளத்தூர்]], [[கமுதி]] வட்டங்களிலும், [[திருநெல்வேலி மாவட்டம்]] [[சங்கரன்கோவில்]], [[வாசுதேவநல்லூர்]] வட்டங்களிலும், [[தூத்துக்குடி மாவட்டம்]] மற்றும் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்திலும்]] தற்போதும் நடைமுறையில் உள்ளது.
|