[[லொரென்ஸ்]] என்பவர் அறுபதுகளில் முதலில் அறிவித்த கோட்பாடு இது. லொரென்ஸின் ஆதார மேற்கோள் ஒன்று விஞ்ஞானிகளை/அறிவாளிகளை மிகவும் சிந்திக்க வைத்து, ஒழுங்கின்மைக் கோட்பாடு என்னும் ஒரு தனி இயலாக வளரும் அளவுக்கு முக்கியமடைந்தது.
பட்டாம்பூச்சி விளைவு(Butterfly Effect):
ஒரே ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு, சூழ்நிலையில் மிகச்சிறிய மாறுதலை ஏற்படுத்துகிறது. சிறிது காலம் பொறுத்து சூழ்நிலையில் நிகழ்வது, நிகழ்ந்திருக்க வேண்டியதுடன் வேறுபடுகிறது. எனவே, ஒரு மாதத்தில் இந்தோனேசிய கடற்கரையை நாசமாக்கவிருந்த சுழற்காற்று நிகழ்வதில்லை.. அல்லது, எதிர்பாராமல் நிகழ்ந்துவிடுகிறது. ஒரு சின்ன நிகழ்வின் தொடர்விளைவு உலகளாவியதாக இருக்கும் என்பதே அந்தக் கோட்பாட்டின் அடிப்படை.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் உலகில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தொடர்புகள் உள்ளதாகக் கொள்ளலாம். அதே சமயம் இந்தத் தியரியின் மூலம் ஒரு மனிதனின் செயல்பாடு ஒரு நிகழ்வின் முடிவை மாற்றிவிடலாம் என்பதும் பெறப்படுகின்றது.