இவர் [[கைலாசம் பாலசந்தர்|கே. பாலச்சந்தரின்]] "மரோ சரித்ரா" (1978 Maro charitra) எனும் படத்தில் துணை கதாபாத்திர வேடமேற்று நடித்தார். இப்படம் இந்தியில் "''[[ஏக் தூஜே கே லியே"]]'' (Ek Duuje Ke Liye , 1981) எனும் பெயரில் மீளுருவானது. இப்படம் 1981ம் ஆண்டு பெரும் வருவாய் வசூலித்த படமாகவும் திகழ்ந்தது. மாதவி இவ்விரு படங்களிலும் [[கமல்ஹாசன்|கமலஹாசனுடன்]] காதல் கொள்ளும் ஒரு செல்வந்தப் பெண்ணாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவருடைய நடிப்பின் தன்மையினால் "பிலிம் பெயர்பேர்" விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான பெயர் பட்டியலில் இடம் பிடித்தார்.<ref>[http://deep750.googlepages.com/FilmfareAwards.pdf 1st Filmfare Awards 1953<!-- Bot generated title -->]</ref> மேலும் இவ்விரு படங்களிலும் இவரது நடிப்பைப் பார்த்து வியந்த கே. பாலச்சந்தர் முதன்முதலில் தமிழ் திரையுலகிற்கு "[[தில்லு முல்லு]]" எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இப்படம் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் [[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]] நடிப்பில் வெளியானமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் மாதவி கமலஹாசனுடன் "ராஜ பார்வை, டிக் டிக் டிக், காக்கி சட்டை, சட்டம், எல்லாம் இன்பமயம் மற்றும் மங்கம்மா சபதம்" ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "கர்ஜனை, தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வடிந்தால் மற்றும் விடுதலை" ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.