'''தமிழ்வாணன்''' தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.
==வாழ்க்கைச் சுருக்கம்==
தமிழ்வாணன் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[தேவகோட்டை|தேவகோட்டையில்]] வாழ்ந்தலெட்சுமணன்பிறந்தார் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக [[1926]] [[மே 5]]ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி.க.]] இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார். <ref name="dinamani">[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil_Mani&artid=334909&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=துணிவைத்_துணை_கொண்ட_தமிழ்வாணன் துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன்], கலைமாமணி விக்கிரமன், [[தினமணி]], நவம்பர் 21, 2010</ref>.