சாபர் இபின் அய்யான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Fixed typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 5:
| name = சாபர் இபின் அய்யான்
| title=
| birth_name = அபு மூசா
| birth_date = c. கிபி 721 [[துஸ்,
| death_date = c. கிபி 815
| Religion = [[இசுலாம்-சுன்னி]]
வரிசை 30:
அபு மூஸா ஜாபிர் இப்னு ஹைய்யான் எனும் பாரசீக விஞ்ஞானி பிறந்தது தற்போதைய இராக் நாட்டின் கொரசான் மாகாணத்தில் உள்ள துஸ் நகரத்தில், அப்போது உமைய்யத் கலிபாக்கள் ஆட்சி நடைபெற்றுவந்தது. பக்தாத்,எமன் மற்றும் கூஃபா நகரங்களில் தம் வாழ்க்கையை தொடர்ந்த அவரது ஆன்மீக குரு சூபி ஞானி ஜாபர் இப்னு முஹம்மது அஸ்' ஸாதீக் ஆவார். இவர் சியாக்களின் ஆறாவது இமாம் ஆவார். சியா பிரிவில் சென்றுவிட்டாலும் இவர் நபிகள் நாயகம் அவர்களின் குரைஷி குலத்தில் பிறந்தவர்கள் தான், இவரது தந்தை முஹம்மது அல் பக்ரு , இமாம் அலியின் நேரடி வாரிசாவார். . ஹனபி மற்றும் மாலிகி இமாம்களின் குருவும் இவர் தான். சூபிய தத்துவத்தை ஏற்றுக்கொண்ட இவருக்கு பல மாணவர்கள் உண்டு அவர்களில் ஒருவர் தான் இப்னு ஹைய்யான்.
இப்னு ஹைய்யான் பல்கலை வல்லுனர் ஆவார். "அரபுலகின் ரசாயன இயலின் தந்தை" என போற்றப்படும் இவர் தான் சல்ஃபயூரிக் அமிலத்தை (அல்ஸாஜ் எண்ணெய் என பெயரிட்டார் - Alzaj oil) கண்டுபிடித்தது. இவரது படைப்புகளை 3,000 பக்கங்கள் கொண்ட தொகுப்பு புத்தகமாக அரபுலகம் பாதுகாத்து வருகிறது. ரசாயனமும் ரசவாதமும் இவரது விருப்பமான துறைகளாக இருந்த போதிலும் வானவியலாளர., கிரகசஞ்சார நிபுணர், பொறியியலாளர், புவியியலாளர், இயற்பியல், மருத்துவம் , மருந்துகள் தயாரிக்கும் வைத்தியர் மற்றும் தத்துவஞானி என பல்துறை வித்தகராக திகழ்ந்தவர்.
மாங்கனீஸ் டை ஆக்சைடு போன்ற சிறிய அளவிலான உலோக ஆக்ஸைடுகளை கண்ணாடி படிமங்களுடன் சேர்த்து புதுவிதமான கலைப்பொருள் மூலக்கூற்றினை தயாரித்தார். கண்ணாடி பொருட்களில் உலோக கலவை கலந்து முதன்முதலில் கலைப்பொருட்களை உருவாக்கினார். கண்ணாடி பொருட்களில் இயற்கையாக தயாரிக்கப்பட்ட பலவகை நிறங்களை பூசி புதுவிதமான நிறங்களுடைய கண்ணாடிகளை தயாரித்தார் , கோபால்ட் நீலம் எனும் ஒருவகை கலர் கண்ணாடிகளை தயாரித்தார் அது அப்போதைய நவீன கண்டுபிடிப்பாக அறியப்பட்டு கோவில்களில், தேவாலயங்களில்,பள்ளிவாசல்களில் வாசல்கள், ஜன்னல்கள் அமைக்க பெரிதும் பயன்பட்டது. நைட்ரிக் ஆசிட் எனும் நிறமற்ற அமிலத்தை கண்டுபிடித்த இப்னு ஹைய்யான் அந்த அமிலத்தை கொண்டு விவசாய உரங்களை தயாரித்தார் வெடி மருந்துகளில் பயன்படும் நைட்ரோகிளிசரினையும் கண்டறிந்தார். பொதுவாக அப்போது நைட்ரிக் அமிலமானது நிறமிகள் தயாரிக்க பெரிதும் பயன்பட்டது. தாம் அறிந்த கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு மூலம் இன்றளவும் வேதியில் கூடங்களில் பயன்படும் சோதனைக்குழாய் முதல் மற்றுள்ள ராட்சத பீக்கர்கள் வரை தயாரித்து வைத்தவர்.
வேதியியலின் தந்தை என போற்றப்படும் -
சூபி ஞானிகள் தங்களது தத்துவ ஞான ஒளி இருளின் பாகத்தில் இருந்து தான் கிடைப்பதாக நம்பினார்கள். எனவே தங்களது ஆராய்ச்சி மற்றும் ரசவாதங்களை கருமை படர்ந்த இருளில் தான் பயின்றார்கள். கிதாப் அல் சபீன் எனும் மற்றுமொரு நூலையும் இயற்றினார். Book of Kingdom, Book of Balance and Book of Eastern Mercury எனும் இயற்பியல் புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது புத்தகங்களை கிபி.988ல் வாழ்ந்த பாரசீக வரலாற்று ஆய்வாளரான இப்னு அல் நதீம் தமது கிதாப் அல் ஃபிஹ்ரிஸ்த்தில் பதிவாக்கியுள்ளார்.
|