[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி [[லலிதா]], இளையவர் [[ராகினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் '''திருவாங்கூர் சகோதரிகள்''' என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு [[மலாயா]]வில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர்.<ref name="PPJan48">{{cite journal | title=திருவாங்கூர் நடன சகோதரிகள் | journal=பேசும் படம் | year=1948 | month=சனவரி | pages=113-117}}</ref> மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி.<ref name="PPJan48"/> திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் [[ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்|அமெரிக்கா]]வில் [[நியூ ஜெர்சி]]யில் குடியேறினார். அங்கு பத்மினி ''ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்'' என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.