கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
 
== உபவேந்தர்கள் ==
இப்பல்கலைக்கழக உபவேந்தராக முனைவர் [[சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்]] முன்னர் பணியாற்றியபோது, [[2006]], [[திசம்பர் 15]] இல் [[கொழும்பு|கொழும்பில்]] இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுப் பல ஆண்டுகளாகியும் இவரது நிலை சரியாகத் தெரியவில்லை<ref>[http://www.thinakkural.com/news%5C2007%5C1%5C5%5Cimportantnews_page18584.htm கடத்தப்பட்ட ரவீந்திரநாத் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை] [[தினக்குரல்]] அணுகப்பட்டது [[3 மார்ச்]], [[2007]] {{த}}</ref><ref name=sg>{{cite web | last = Gardner | first = Simon | title = Abductions, disappearances haunt Lankan civil war | work = Gulf Times | date = 2007-03-07 | url = http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=136482&version=1&template_id=44&parent_id=24 | accessdate = 2007-07-23}}</ref>. இவரைத் தொடர்ந்து முனைவர் நா. பத்மநாதன் உபவேந்தராகப் பணியாற்றினார். இவரும் [[மார்ச் 2010]] இல் மாணவர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து தனது பதவிக்காலம் முடிவடையும் முன்னரே பதவியில் இருந்து விலகினார்<ref>[[n:கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் பதவி விலகினார்|கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் பதவி விலகினார்]], விக்கிசெய்திகள், மார்ச் 11, 2010</ref>. இதனை தொடர்ந்து விவசாய பீடாதிபதி பிரேமகுமார் 2010/11 காலப்பகுதிகளில் பதில் உபவேந்தராக பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இருந்து வந்தார். இக்காலப்பகுதியில் பல்கலைக்கழக மானியங்கள் குழு இப்பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் தொடர்பாக நேரடியாக தலையிட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் கண்காணிப்பாளர் ஒருவரின் கட்டளையின் கீழ் கிழக்குப் பல்கலைக்கழகம் இயங்கி வந்தது. தொடர்ந்தும் பதில் துணைவேந்தராக பிரேமகுமார் பெப்ரவரி 15, 2012 வரையில் இருந்து வந்தார், எனினும் இவருக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. முடிவுகள், தீர்மானங்கள் என்பன பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் கண்காணிப்பாளரின் கையிலேயே இருந்தன. பெப்ரவரி 15, 2012 முதல் கனேடியப் பிரசையான முனைவர் கிட்ணன் கோவிந்தராசாகோபி(வி)ந்தராசா இப்பல்கைல்கழகத்தின் துணைவேந்தராக அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]]வினால் நியமனம் பெற்றார்.
 
கிட்ணன் கோபிந்தராசா அவர்கள் தனது பதவிக்காலத்தில் அவரது பாலியல் வன்முறை நடத்தைகள் தொடர்பான கண்டனங்களுக்கு உள்ளானார். வளாகங்களில் பெளதீக அபிவிருத்தியில் கவனம் செலுத்திய இவர் சில முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்த போதும் - அவரது நடத்தை தொடர்பான கண்டனங்களால் பாரிய சர்சசைகளுக்கு உள்ளானார். முனைவர் கோபிந்தராசாவின் பதவிக்காலம் முடிவடையும் போது, மாணவர் பேரவை மற்றும் பல்கலை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் செல்வாக்குகளை அடிப்படியாக வைத்து முனைவர். தங்கமுத்து ஜெயசிங்கம் புதிய உபவேந்தராக பதவி பெற்றார். 2015 இலிருந்து ஜனவரி 2019 வரையிலான காலப்பகுதியில் ஜெயசிங்கம் அவர்களது நிர்வாகத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றன. அத்துடன் பல்கலை நிதியினை தனது தொடர்ந்த வெளிநாட்டுப் பயணங்களுக்காக இவர் பயன்படுத்தியமையும் பல சர்சசைகளை உருவாக்கியது. ஜனவரி 2019லிருந்து பேராசிரியர் எப். சி. ராகல் அவர்கள் உபவேந்தராக கடமையாற்றி வருகின்றார். இவர் ஒரு சிறந்த ஆய்வாளராகவும் நடுநிலைமை தவறாத கல்விமானாகவும் பரவலாக மதிக்கப்படுபவராவார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குப்_பல்கலைக்கழகம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது