குற்றப் பரம்பரைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
மறவர் கட்டுரையில் ,சீர்மரபினரில் உள்ள அம்பலகாரர் மறவர் பிரிவை சார்ந்தவர் என்றுள்ளது.இங்கு முத்தரைய என்றுள்ளது.உண்மையில் அம்பலகாரர் என்று சாதி சான்றிதல் வாங்குகுறார்கள் என உறுதி செய்து விட்டு இக்கட்டுரையை தொகுக்க கேட்டுக்கொள்கிறேன் ~~~~
அடையாளம்: 2017 source edit
வரிசை 33:
 
===கைரேகைச் சட்டம்===
குற்றப் பரம்பரைப் பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக 16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும். மேற்கண்ட சாதிகளில் குறிப்பாகக் கள்ளர், மறவர், முத்தரைய அம்பலக்காரர், வலையர் போன்ற சில சமூகத்தினர் கைரேகைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டனர். விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.
 
1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் மற்றும் அம்பலக்காரர் தலைமையிலேயே கண்காணிப்பு கிராமங்களாக ‘கள்ளர் மற்றும் அம்பலக்காரர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. உள்ளூரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும். அதிலேயே கைரேகை வைக்கலாம். ஆனாலும் பல நேரங்களில் அவர்கள் காவல் நிலையத்தில் தூங்குமாறும், அருகே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப் பெரியவர் குழுவில் இந்த அடையாளச் சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச் சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச் சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாகக் காவல்நிலையத்தில் கைரேகை வைக்க வலியுறுத்தப்பட்டனர்.<ref name="keetru.com">[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=1790&Itemid=139|அதிஅசுரன், குற்றப் பரம்பரை சட்டம்: சில வரலாற்றுத் தகவல்கள்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/குற்றப்_பரம்பரைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது