யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இன்று நமக்குக் கிடைக்கின்ற [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூல்களிலே மிகவும் பழமையான நூலாகிய [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்திலேயே]] யாப்பிலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அதிலே கூறப்பட்டுள்ளவை பல இன்றும் வழக்கில் இருந்துவருகின்றன. இருந்தாலும், பிற்காலத்தில் புழக்கத்துக்கு வந்த [[பாவினம்|பாவினங்களிற்]] சில அக் காலத்தில் இல்லாதிருந்தமையால் தொல்காப்பியத்தில் இவற்றுக்குரிய இலக்கணங்கள் கூறப்படவில்லை. இதனால் பிற்காலத்தில் ஏற்பட்ட [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கண]] வளர்ச்சிகளையும் உட்படுத்தி எழுந்த [[யாப்பிலக்கண நூல்கள்|யாப்பிலக்கண நூல்களிலே]] '''யாப்பருங்கலக் காரிகை''' சிறப்பானது. இந்நூலே இன்று யாப்பிலக்கணம் பயில்வோரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
==நூற்பெயர்==
 
இந்நூற் பெயருக்குப் பலர் பல விதமாக விளக்கம் கூறுகின்றனர். [[யாப்பு|யாப்பெனும்]] கடலைக் கடக்கும் [[தோணி]] போன்றது எனப் பொருள்படும் "[[யாப்பருங்கலம்]]" என்னும் நூலுக்கு உரைபோல் அமைந்ததன் காரணமாகவே '''யாப்பருங்கலக் காரிகை''' என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். [[சமண சமயம்]] தொடர்பான [[திரமிள சங்கம்|திரமிள சங்கத்தின்]] உட்பிரிவுகளுள் ஒன்றான அருங்கலான்வயம் எனும் பிரிவைச் சேர்ந்த இந் நூலாசிரியர் தானெழுதிய நூல்களுக்கு யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை எனப் பெயரிட்டிருக்கக் கூடுமெனக் கூறுவாரும் உளர்.
 
==நூலாசிரியர்==
 
யாப்பருங்களக் காரிகையை எழுதியவர் [[அமிதசாகரர்]] என்பவராவார். இவர் ஒரு [[சமண முனிவர்]]. இவருடைய பெயரை அமிர்தசாகரர், அமுதசாகரர் என்று பலர் பலவாறாகக் கூறுகின்றனர். யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலை எழுதியவரும் இவரே. இவருடைய பிறப்பு, தாய் தந்தையர், ஊர் என்பன பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
 
==நூலின் காலம்==
 
கி.பி 1070 - 1120 வரையான காலத்தைச் சேர்ந்த [[முதலாம் குலோத்துங்கன்|முதலாம் குலோத்துங்க சோழனுடைய]] கல்வெட்டொன்றையும் பிற ஆதாரங்களையும் வைத்து இந் நூல் எழுதிய காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.
 
==நூல் அமைப்பு==
 
இந்நூல் பின்வருமாறு மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
# உறுப்பியல்
# செய்யுளியல்
# ஒழிபியல்
 
'''உறுப்பியல்''' செய்யுள் உறுப்புக்களான [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்து]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]], [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[தளை (யாப்பிலக்கணம்)|தளை]], [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]] என்பன பற்றிய இலக்கணங்களைக் கையாள்கிறது. '''செய்யுளியல்''' பாவகைகள், பாவினங்கள், அவற்றுக்குரிய ஓசைகள் முதலானவற்றின் இலக்கணங்களைக் கூறுகின்றது. மூன்றாவது இயலான '''ஒழிபியலில்''' முதலிரு இயல்களில் கூறப்படாத யாப்பிலக்கண விடயங்கள் கூறப்படுகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[தமிழ் இலக்கணம்]]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலக்_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது