தகடூர் யாத்திரை (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''தகடூர் யாத்திரை''' என்பது, சேரமன்னன் அகம்படியான் ஒருவனுக்கும் தகடூரை ஆண்ட [[அதியமான்]] மரபைச் சேர்ந்த குறுநில மன்னன் ஒருவனுக்கும் நிகழ்ந்த போர் பற்றிக் கூறும் ஒரு சங்ககால நூல் ஆகும். இது புறப்பொருள் சார்ந்தது. இது ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்களின் பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூலாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. [[அரிசில் கிழார்]], [[பொன்முடியார்]] ஆகிய சங்கப் புலவர்கள் சேர மன்னனைச் சார்ந்து நின்றவர்கள். சேரன் படையெடுத்துச் சென்றபோது அவனுடன் சென்று நேரடியாக நிகழ்வுகளைக் கண்டு கூறுவது போலவே பாடல்கள் அமைந்திருப்பதாகவே தெரிகிறது. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. [[உ. வே. சாமிநாதையர்]], [[என் சரித்திரம் (நூல்)|என் சரித்திரம்]] என்னும் தனது [[தன்வரலாறு|தன்வரலாற்று]] நூலில் எழுதியுள்ள குறிப்புக்களில் இருந்து தகடூர் யாத்திரை நூல் அவர் காலத்துக்குச் சற்றும் முன்னர்வரை இருந்தது தெரியவருகிறது.
 
பல்வேறு மூலங்களில் இருந்தும் இதுவரை 48 பாடல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. பல நூல்களிலிருந்தும் எடுத்துத் தொகுத்த பாடல்களைக் கொண்ட நூலாகிய "புறத்திரட்டு" என்னும் தொகுப்பில் இருந்து தகடூர் யாத்திரைப் பாடல்கள் சில கிடைத்தன. இது தவிர "நீதித் திரட்டு என்னும் இன்னொரு நூலிலிருந்தும் சில பாடல்களைப் பெற முடிந்தது. [[நச்சினார்க்கினியர்]], [[பேராசிரியர்]], [[தக்கயாகப் பரணி]] உரையாசிரியர் ஆகியோர் தமது உரைகளில் தகடூர் யாத்திரையில் இருந்து பாடல்களை மேற்கோளாகக் கொடுத்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/தகடூர்_யாத்திரை_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது