ஆட்சித் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
நாடாளுமன்றம் உரிய சட்ட ஏற்பாடு செய்யும் வரை உயர்நீதிமன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று பிரிவு 348 கூறுகிறது.
 
இதற்கு விலக்கும் தரப்படுகிறது. ஒரு மாநில [[ஆளுநர்]] [[குடியரசுத் தலைவர்|குடியரசுத்தலைவரி]]ன் முன் அனுமதி பெற்று அந்த மாநில உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்த மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பிற மொழி எதையும் பயன்படுத்தலாம். இதன்படி ஒரு மாநிலம் அந்த மாநில மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயன் படுத்திக்கொள்ளலாம்.இதன்படியே [[மத்திய பிரதேசம்|மத்திய பிரதேச]] அரசுத்தீர்மானம் நிறைவேற்றி மத்திய பிரதேச . மாநில உயர்நீதிமன்றத்தில் இந்தி ஆட்சி மொழியாகியுள்ளது. [[உத்தரப்பிரதேசம்]], [[பீகார்]], மத்திய பிரதேசம், [[இராஜஸ்தான்]] உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியான இந்திதான் நீதிமன்ற மொழி என்பதற்கு மத்தியஒன்றிய அரசு இசைவு தெரிவித்துள்ளது.
 
இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 348(2) தமிழ்மொழிக்கும் பொருந்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் இருக்க முடியும். வழக்குரைஞர்களின் தமிழ் மன்றம் 2001ல் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இதை நீதிபதிகள் பி.சுபாஷன் ரெட்டி, கே.பி.சிவசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. . உயர்நீதிமன்ற மொழி குறித்து ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு மட் டும்தான் உண்டு.
அவர்தான் ஆணை பிறப் பிக்கவேண்டுமே தவிர நீதிமன்றத்தில் வாதாடி பயன் இல்லை என்று நீதி பேராணை தள்ளுபடி செய்யப்பட்டது. 6-12-2006ல் தமிழக சட்டமன்றம் ஒருதீர்மானம் நிறைவேற்றியது. தமிழகத்தில் தமிழில்அனைத்து நிர்வாகநடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவேண்டும் என்ற கொள்கை அடிப் படையில் இந்திய அரசியல் சட்டம் பிரிவு-348(2) உடன் இணைந்து 1963 ஆட்சி மொழிச்சட்டப்பிரிவு (7)ன்படி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புஅனைத்தையும் தமிழில் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீர்மானித்தது. இதற்கு குடியரசுத்தலைவரின் அனுமதி தேவை. மத்தியஒன்றிய அரசு மூலம் குடியரசுத் தலைவர் அனுமதி பெற வேண்டும். இந்தத் தீர்மானம் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அனுப்பப்பட்டது. அவரும் இதுகுறித்து உறுதியளித்திருந்தார். இந்நிலையில் மத்தியஅரசின் சட்டம் மற்றும்நிதி அமைச்சகம் தமிழக அரசுக்கு27-2-2007ல் ஒரு கடிதம் அனுப்பியது.<ref name = ' நீதிமன்றத்தில் தமிழ்'></ref>
 
உச்சநீதிமன்றத்தில் இது குறித்து கலந்துபரிசீலிக்கப்பட்டது என்றும் உயர்நீதிமன்ற உத்தரவு ஆணை மற்றும் இதர நடவடிக்கைகளில் மாநில மொழியை தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று தலைமை நீதிபதி கருதுவதாக கூறப்பட்டது. 2010 ஜூனில் நடைபெற்ற கோவைச்செம்மொழி மாநாட்டில் நீதிமன்ற மொழி குறித்து இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 2.1.2013ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் முன்பு தமிழில் வாதாட ஒரு வழக் குரைஞர் அனுமதி கோரினார்.நீதிபதிஅனுமதி மறுத்துவிட்டார். <ref>{{cite news | title = Lawyer seeks to argue in Tamil, judge says no way | newspaper = Times of India | date = January 3, 2013 | url = http://articles.timesofindia.indiatimes.com/2013-01-03/chennai/36129925_1_tamil-high-court-advocates-and-litigants | accessdate = 24 அக்டோபர் 2013 }}</ref> <ref name = ' நீதிமன்றத்தில் தமிழ்'></ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆட்சித்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது