அம்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: mr:अंबा
No edit summary
வரிசை 1:
'''அம்பா''' இந்திய இதிகாசங்களுள் ஒன்றான [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[கதை மாந்தர்]]களுள் ஒருத்தி. இவள் காசி அரசனின் மூத்த மகளாவாள். [[அம்பிகா]], [[அம்பாலிகா]] என்போர் இவளது தங்கைகள் ஆவர். இவர்களுக்குச் சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த [[மன்னர்]]களையும், [இளவரசர்]]களையும் தோற்கடித்து, இம் மூன்று பெண்களையும், [[பீஷ்மர்]] அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்து]] மன்னனான [[விசித்திரவீரியன்|விசித்திரவீரியனுக்கு]] மணமுடித்துக் கொடுப்பதற்காக [[சத்தியவதிசத்யவதி]]யிடம் ஒப்படைத்தார்.
 
அம்பா வேறொருவனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததால் விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது [[தங்கை]]கள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பியவனை நாடிச் சென்றாள். அவளைப் பீஷ்மர் கூட்டிச் சென்றதனால் அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். பீஷ்மரிடம் திரும்பி வந்த அம்பா, தன்னை மணந்து கொள்ளூமாறு பீஷ்மரை வற்புறுத்தினாள். மணமுடிப்பதில்லை என விரதம் பூண்டிருந்த பீஷ்மரும் அவளை மணம்செய்ய மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட அம்பா, அடுத்த பிறவியிலாவது பீஷ்மரைக் கொல்வது எனச் சபதம் செய்து இறந்துவிட்டாள். அவள் அடுத்த பிறவியில் [[துருபதன்|துருபதனுக்கு]] மகனாகப் பிறந்தாள் என மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர் [[சிகண்டி]] என்பதாகும். மகாபாரதப் போரில் பீஷ்மர் இறந்ததில் முக்கிய பங்கு வகித்தவன் இவனாவான்.
"https://ta.wikipedia.org/wiki/அம்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது