கண்டராதித்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கூடுதல் செய்தி மேற்கோளுடன் இணைப்பு
வரிசை 3:
'''கண்டராதித்தர்''' இடைக்காலச் சோழ மன்னர்களில் [[முதலாம் பராந்தக சோழன்|முதலாம் பராந்தகனுக்குப்]] பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே [[இராஷ்டிரகூடர்]]கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். [[சோழர்]]கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.
 
==மறைவு==
கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான [[அரிஞ்சய சோழன்]] பட்டத்துக்கு வந்தார்.
 
==இவரைப் பற்றிய நூல்கள்==
[[கண்டன் கோவை]], [[கண்டன் அலங்காரம்]] என்னும் நூல்களைப் பாடி [[ஒட்டக்கூத்தர்]] இவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.<ref>[[மு. அருணாசலம்|அருணாசலம், மு.]], ''தமிழ் இலக்கிய வரலாறு'', பன்னிரண்டாம் நூற்றாண்டு, பதிப்பு 2005</ref>
 
==திருப்பணி==
இவர் பல சிவன் கோயில்களுக்குத் திருப்பணி செய்துள்ளார். புறச் சமயத்தினரையும் நன்கு மதித்தார். கல்வெட்டுகளில் இவர் சிவஞான கண்டராதித்தர் என்று குறிப்பிடப்படுகிறார். <ref> உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை </ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கண்டராதித்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது