முத்துவிஜயரகுநாத சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''முத்துவிஜயரகுநாத சேதுபதி''' அல்லது '''திருவுடையாத் தேவர்''' (ஆட்சிக் காலம் 1713-1725) என்பவர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம் சமஸ்தான]] மன்னராவார். இவர் [[முத்து வயிரவநாத சேதுபதி]]க்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவராவார். இவர் முத்துவயிரவநாத சேதுபதியின் தம்பி ஆவார்.
 
==பதவி ஏற்பு ==
திருவுடையாத் தேவர் என்னும் இயற்பெயரை உடைய இவர் கி.பி.1713ல் முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் சேதுபதி மன்னரானார். திருவுடையாத் தேவர்இவர் இராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி திங்களில் நடைபெறும் [[விஜயதசமி]] (தசரா விழா) விழா அன்று முடிசூட்டிக் கொண்டதால் இவர் முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற பெயரை ஏற்றார். முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற பட்டப் பெயரானது இவருக்கு முன் ஆண்டவர்களான [[இரகுநாத கிழவன்|ரெகுநாத கிழவன் சேதுபதிக்கும்]], ரெகுநாத திருமலை சேதுபதிக்கும் இருந்ததுள்ளன.
== நிவாகம் ==
முத்துவிஜயரகுநாத சேதுபதி அன்றைய சேதுநாட்டை 72 இராணுவப் பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு சேர்வைக்காரரை நியமித்தார். அந்தப்அந்தந்தப் பிரிவுகளுக்குள் அதில் அடங்கியுள்ள கிராமங்களின் வருவாய் கணக்குகளைப் பராமரிப்பதற்காக மதுரைச் சீமைகளிலிருந்து பட்டோலை பிடித்து எழுதும் வேளாண் குடிமக்களை வரவழைத்து அவர்களை நாட்டுக்கணக்கு என்ற பணியில் அமர்த்தினார். அடுத்ததாக அரசின் வலிமையை நிலைநிறுத்தி வெளிப்புற எதிரிகளிடமிருந்து சேதுநாட்டைக் காப்பதற்காக மூன்று புதிய கோட்டைகளை முறையே ராஜசிங்கமங்கலம், பாம்பன், கமுதி ஆகிய ஊர்களில் புதிதாக அமைத்தார். கமுதிக்கோட்டை புதுமையான முறையில் வட்டவடிவில் மூன்று சுற்று மதில்களுடன் அமைக்கப்பட்டது. இதனை அமைத்தவர்கள் பிரெஞ்சு நாட்டு பொறியியல் வல்லுநர்கள் என கருதப்படுகிறது.<ref>{{cite book | title
=சேதுபதி மன்னர் வரலாறு | publisher=சர்மிளா பதிப்பகம்இறப்பு | author=டாக்டர். எஸ். எம். கமால் | authorlink= முத்து வயிரவநாத சேதுபதி | year=2003 | location=இராமநாதபுரம் | pages=51}}</ref>
[[இரகுநாத கிழவன்]] சேதுபதியின் மகனாக இருந்தும் செம்பிநாட்டு மறவர் குல பெண்மணிக்குப் பிறக்காத காரணத்தால் சேதுபதி பட்டம் மறுக்கப்பட்ட [[பவானி சங்கர சேதுபதி|பவானி சங்கரத் தேவர்]] [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை]], [[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சை மன்னர்களது]] உதவியுடன் இராமநாதபுரம் கோட்டையைப் பிடிப்பதற்கு முற்பட்டார். இவரை சேதுநாட்டின் வடக்கு எல்லையில் சந்தித்துப் பொருதுவதற்காக சென்ற பொழுது முத்து விஜயரகுநாத சேதுபதி வழியில் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் திரும்பியதும் கி.பி.1725இல் மரணம் அடைந்தார்.<ref>{{cite book | title=சேதுபதி மன்னர் வரலாறு | publisher=சர்மிளா பதிப்பகம் | author=டாக்டர். எஸ். எம். கமால் | authorlink= முத்து வயிரவநாத சேதுபதி | year=2003 | location=இராமநாதபுரம் | pages=51}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முத்துவிஜயரகுநாத_சேதுபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது