கௌரி பார்வதி பாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு
வரிசை 30:
மகாராணி கெளரி பார்வதி பாயி திருவாங்கூர் அரச குடும்பத்தின் அட்டிங்கல்லின் மூத்த ராணியான பரணி திருநாள் என்பவருக்குப் பிறந்தார். 1815ஆம் ஆண்டில் அவரது மூத்த சகோதரி மகாராணி கவுரி லட்சுமி பாயி இறந்தபோது, கெளரி பார்வதி பாயிக்கு பதின்மூன்று வயதே இருந்தது. குடும்பத்தில் ஒரே பெண்மணியாக, கெளரி பார்வதி பாயி அவரது மருமகனும், ஆட்சியின் வாரிசுமான, மகாராஜா [[சுவாதித் திருநாள் ராம வர்மா|சுவாதி திருநாள் ராம வர்மா]] சார்பில் தனது மைத்துனர் சங்கனாச்சேரி குடும்பத்தைச் சேர்ந்த ராஜ ராஜ வர்மாவுடன் சேர்ந்து ஆட்சி செய்தார். அவருடைய கணவர், ராகவா வர்மா [[கிளிமானூர்|கிளிமன்னூர்]] அரச குடும்பத்தை சேர்ந்தவராவார்.
== அமைச்சரவை மாற்றங்கள் ==
மகாராணியின் முதல் நடவடிக்கையானது, புதிய [[திவான் (பிரதம அமைச்சர்)|திவான்]] என்கிற பிரதம மந்திரியை நியமிப்பதே ஆகும். ஏனென்றால் திவான் பத்மநாபன் இறந்துவிட்டார், அவருடைய துணைப் பொறுப்பாளரான பப்பு ராவ் மாநில விவகாரங்களை கவனித்து வந்தார். 1815 ஆம் ஆண்டில் பிராமணரான சங்கு அன்னாவி பிள்ளை என்பவர் திவானாக நியமிக்கப்பட்டார்.<ref>https://pazhayathu.blogspot.com/2014/06/dewans-of-travancore-arumukham-pillai.html</ref> ஆனால் அவரால் கடினமான நிர்வாகத்தை கையாள முடியாததால் இரண்டு மாதங்களுக்குள் அகற்றப்பட்டார். பின்னர் [[திருவிதாங்கூர்|திருவாங்கூர்]] மாவட்ட நீதிபதி ராமன் மேனன், என்பவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், திவான் ராமன் மேனனுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன, எனவே ராமன் மேனன் 1817 ஆம் ஆண்டில் ஒரு கீழமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார், மேலும் அவர் அப்பணியிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற விரும்பினார். 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்திய இராஜதந்திரியும், வேங்கலில் குடும்பத்தின் மூதாதையுருமான [[வே. கி. கிருஷ்ண மேனன்|கிருஷ்ண மேனனின்]] பெரிய தாத்தாவாக இருந்தவர் திவான் ராமன் மேனன். 1817 செப்டம்பரில் அவர் பிரிட்டிஷாருடன் நெருக்கமாக இருந்தபோது, ரெட்டி ராவ் என்ற துணைத் தூதர் திவானாக நியமிக்கப்பட்டார்.<ref name="manualp464">[[#Nagam Aiya|Nagam Aiya]], Pg 464</ref>
 
== முக்கிய நடவடிக்கைகள் ==
மகாராணி கௌரி பார்வதி பாயி தனது மருமகனின் சார்பில் ஆட்சி செய்த போது தனது மாநிலத்தில் பல சீர்திருத்தங்களை நிறுவினார். முக்கிய சீர்திருத்தங்களில் ஒரு சில:
 
* 1817 ஆம் ஆண்டில் ராணி கௌரி பார்வதி பாயி நவீன கல்வியை கற்பிக்க முன்னேற்பாடுகளை செய்தார்.
 
* 1817 ஆம் ஆண்டில் ராணி கௌரி பார்வதி பாயி நவீன கல்வியை கற்பிக்க முன்னேற்பாடுகளை செய்தார்.
* [[இந்து|இந்து மத]] விழாக்களுடன் தொடர்புடைய [[கிறிஸ்தவர்|கிறிஸ்தவ]] சபைகளை விடுவித்தார். அவர்கள் மதச் சடங்குகளுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்கு வருவதிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
* தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை அணிவதிலிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இதை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று தங்களை அலங்கரித்து கொண்டனர். [[நாயர்]] போன்ற உயர் சாதியினர் தங்க ஆபரணங்களை பயன்படுத்துவதற்காக ''அதியார பணத்தை'' செலுத்திய பின்னர் பெற்றுக் கொள்வது அகற்றப்பட்டது.<ref>https://keralapscadda.blogspot.com/2017/05/important-travancore-kings-kerala.html</ref>
 
* மகாராணி தனது இராச்சியத்திலுள்ள அனைவரையும் தங்கள் வீடுகளின் மேல் ஓடுகள் வேய்வதற்கு அனுமதித்தார். [[கேரளம்|கேரளாவின்]] சூழலில் இது ஒரு முக்கியமான அறிவிப்பாக இருந்தது. [[கோழிக்கோடு நாடு|சோமரைன்]] போன்ற சக்திவாய்ந்த அரசர், மற்றும் [[கொச்சி இராச்சியம்|கொச்சி இராச்சியத்தின்]] அரசர் போன்ற பேரரசர்கள கூட தங்கள் அரண்மனையில் இதை அனுமதிக்கவில்லை.
* சில வகையான வீடுகளை பயன்படுத்துவதிலிருந்த அடிப்படை கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. அது வரை [[நாயர்]] என அழைக்கப்படுபவர்களே தங்கள் குடியிருப்புக்களை நாலுகெட்டு கொண்ட வீட்டினை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கான வரிகள் முற்றிலும் அகற்றப்பட்டு, அனைத்து சமுதாயத்தினரும் இந்தவகை கட்டிடங்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், யானைகளிலும், யானை, வண்டிகளிலும் பயணம் செய்ய உரிமை தரப்பட்டது.
வரி 45 ⟶ 43:
* அவரது சகோதரி மகாராணி கவுரி லட்சுமி பாயியின் ஆட்சி முடிவில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது, இது அவருக்கு ஒரு பெரிய சாதனையாகும்.
* [[திருவிதாங்கூர்|திருவாங்கூரில்]] கிருத்துவ திருச்சபையை மகாராணி அனுமதித்தார், மேலும் அவருடைய மாநிலத்தில் தேவாலயங்களை கட்டியெழுப்பவும் அனுமதிதார்.<ref>https://pazhayathu.blogspot.com/2013/10/maharani-gowri-parvati-bayi.html</ref>
* [[வேலுத்தம்பி தளவாய்|வேலு தம்பி தளவாயின்]]<ref>http://m2sp.blogspot.com/2007/06/velu-thambi-dalava.html</ref> கிளர்ச்சியைத் தொடர்ந்து, திருவாங்கூர் படையைச் சேர்ந்த ஏழு நூறு வீரர்கள் அரண்மனையைக் காப்பாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது
 
== ஆட்சியின் முடிவு ==
1829 ஆம் ஆண்டு மகாராஜா [[சுவாதித் திருநாள் ராம வர்மா|சுவாதி திருநாள்]] பதினாறு வயதை அடைந்தபோது அவரது அத்தையான, மகாராணி, ஆட்சியை கைவிட்டு, முழு அதிகாரத்துடன் அவருக்கு ஆட்சியதிகாரம் அளிக்க முடிவு செய்தார். அதன்படி, 1829 ஆம் ஆண்டில் மகாராஜா [[சுவாதித் திருநாள் ராம வர்மா|சுவாதி திருநாள்]] முடிசூட்டிக் கொண்டார்.
 
== முழுப் பட்டம் ==
வரி 59 ⟶ 57:
{{Reflist}}
* {{cite book|title=Travancore State Manual, Volume I|author=V. Nagam Aiya|authorlink=V. Nagam Aiya|ref=Nagam Aiya}}
 
[[பகுப்பு:திருவனந்தபுரம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரச குடும்பப் பெண்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கௌரி_பார்வதி_பாயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது