கம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2495842 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
'''கம்பர்''' (கி.பி. 1180-1250) என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய [[கம்பராமாயணம்]] நூலானது புகழ் பெற்றதாகும். கம்பராமாயணத்தினை படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள். கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]] கம்ப இராமாயணமே மிகப்பெரிய [[இதிகாசம்]] என கருதப்படுகிறது.
==பெயர்க்காரணம்==
வரிசை 5:
==வரலாறு==
கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[குத்தாலம்]] வட்டம் [[திருவழுந்தூர்]] என்றழைக்கப்படும் [[தேரழுந்தூர்]] என்னும் ஊரில் பிறந்தவர்.
கம்பரை சடையப்ப வள்ளல் என்பவர் ஆதரித்து வந்துள்ளார். இவர் திரிகார்த்த சிற்றரசனாவார். இவரே கம்பரை இளமைக் காலத்தில் பேணிக்காத்தவர் என்றும்<ref>Classified catalogue of Tamil printed books By John Murdoch</ref>, பின்பே சோழ மன்னன் கம்பரை ஆதரித்து வந்ததாகவும் கூறுகின்றனர். சோழ மன்னன் கம்பநாடு என்ற பகுதியைக் கம்பருக்கு தந்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டமும் சோழன் தந்தது என்று கூறுகின்றனர்.
|