மாத்திரை (தமிழ் இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1404756 Raj.the.tora (talk) உடையது. (மின்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
தமிழ் இலக்கணத்தில் '''மாத்திரை''' எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் நெடித்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை. <ref>
<poem>கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. - தொல்காப்பியம் நூன்மரபு 7</poem></ref>
<ref>''"இயல்பெழு மாந்தர்தம் இமைநொடி மாத்திரை"'' - [[நன்னூல்]]</ref> <ref>பிற்காலத்தவர் இதனைக் கைந்நொடி எனக் கூறுவது பொருந்தாது.</ref> <ref>
;குறிப்பு
'''எண்ணுவோம்''' ஒருவர் படித்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குத் தெரியாமலேயே அவர் இமை நொடிக்கிறது. அதாவது மூடித் திறக்கிறது. இதுதான் இமைநொடி. இயல்தாக எழும் இமைநொடி. மாந்தர் இமைநொடி. பிற உயிரினங்களின் இமைநொடி அன்று. 'அன்பு அரவணைக்கும்' என்று ஒருவர் சொல்வதாக வைத்துக்கொள்வோம். இந்தத் தொடரில் 'அன்பு' என்பதை ஒலிக்க இரண்டரை மாத்திரை. இதுவே குற்றியலுகரமாக ஒலிக்கப்படும்போது இரண்டு மாத்திரை. அடுத்த சொல் வரும்போது விட்டிசை. பின்னர் 'அரவணைக்கும்' என்று வரும் சொல்லை ஒலிக்கும்போது ஏழு மாத்திரை. இத்தொடரை இயல்பாக மொழிய 10 மாத்திரையாவது வேண்டும். இப்போது எண்ணுவோம். 'கைந்நொடி'யை மாத்திரை எனல் தகுமா? எடுத்தல் கால், இணைத்தல் அரை, இறுக்கல் முக்கால், முடித்தல் ஒன்று - என்றெல்லாம் நம் முன்னோர்களில் சிலர் கூறியிருப்பதை விட்டுவிடலாம் எனபதை இவ்விடத்தில் முன்வைப்பதே நல்லது. நன்னூலாரும் இதனைக் கூறவில்லை என்பதை ஆய்ந்து உணர்ந்துகொள்வோம்.</ref>
வரிசை 11:
* [[ஔகாரக் குறுக்கம்]], [[ஐகாரக் குறுக்கம்]] என்பன ஒன்றரை அல்லது ஒரு மாத்திரையளவு ஒலிக்கும்.
* [[மகரக் குறுக்கம்]], [[ஆய்தக்குறுக்கம்]] என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும்.
 
 
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[Categoryபகுப்பு:எழுத்திலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/மாத்திரை_(தமிழ்_இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது