காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''காஞ்சிபுரம்''' ([[ஆங்கிலம்]]:Kancheepuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.[[பாலாறு|பாலாற்றின்]] கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும்.
 
[[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]] ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. [[ஆயிரம் கோயில்களின் நகரமான]] காஞ்சியில், [[காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம்|காமாட்சியம்மன் கோயில்]], [[ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்|ஏகாம்பரநாதர் கோயில்]], [[வரதராஜபெருமாள் கோயில், காஞ்சிபுரம்|வரதராஜபெருமாள் கோயில்]], [[கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்|கைலாசநாதர் கோயில்]] ஆகிய கோயில்கள் முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் [[அறிஞர் அண்ணா]] பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
== வரலாறு ==
காஞ்சி நகரம் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் [[தொண்டைமான்]] [[இளந்திரையன்]] காஞ்சி நகரத்தை ஆண்டதை [[பரிபாடல்]] மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை [[பல்லவர்|பல்லவர்களின்]] தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், [[கலை]], மற்றும் [[தமிழ்]], [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]] மற்றும் [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய [[தொண்டை நாடு|தொண்டை மண்டலத்தின்]] தலைநகராக விளங்கியது. [[பல்லவர்கள்]] ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது.
 
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் [[யுவான் சுவாங்]] இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு [[கௌதம புத்தர்]] வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.
 
புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவனது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், [[பரமேஸ்வர விண்ணகரம்]] என்னும் [[விஷ்ணு]] ஆலயத்தைக் கட்டினான். அதே மன்னனே, தற்காலிகமாக [[சமணம்|சமண]] சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமண பாரம்பரியம் காஞ்சியில் வளர பங்காற்றினான். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.
 
பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த [[விஜயநகரம்|விஜயநகர]] ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, [[கிருஷ்ணதேவ ராயர்]] கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.
 
ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்ட போரில் [[இராபர்ட் கிளைவ்]], ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறான்.
வரிசை 50:
 
ஆழ்வார்களான [[திருமங்கை ஆழ்வார்]], [[பூதத்தாழ்வார்]], [[பேயாழ்வார்]] [[நம்மாழ்வார் (ஆழ்வார்)|நம்மாழ்வார்]] மற்றும் [[திருமழிசை ஆழ்வார்]] ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள் கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்) , அஷ்டபுஜகரம், ஊரகம்-நீரகம்-காரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் கோயில், வைகுந்தநாத பெருமாள் கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் கோயில், பாண்டவதூதர் பெருமாள் கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.
 
[[அருணகிரிநாதர்]] தமது திருப்புகழ் பாடலில்கள் காஞ்சியின் [[குமரக்கோட்டம்|குமரக்கோட்ட]]த்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். [[கந்தபுராணம்]] இயற்றிய [[கச்சியப்ப சிவாச்சாரியர்]] குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர்.
 
[[கர்நாடக இசை]]யின் மும்மூர்த்திகளான [[தியாகராஜர்]], [[சியாமா சாஸ்திரிகள்]] மற்றும் [[முத்துசாமி தீட்சிதர்]] ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் [[பாபநாசம் சிவன்]] அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
 
<gallery caption="காஞ்சிபுரம்" widths="180px" heights="180px" perrow="4">
Image:Kanchipuram engraving 1811.jpg
Image:Kailasanathar Temple.jpg|[[காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்|காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்.]]
Image:Kanchipuram.in_Kamakshi-Amman_Temple_-_panoramio_-_SINHA_(cropped).jpg|[[காஞ்சிபுரம்_காமாட்சியம்மன்_கோயில்|காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்|காஞ்சிபுரம் காமாக்ஷி (காமாட்சி) அம்மன் கோவில்.]]
Image:Weaver in India.jpg
Image:Art-Deco construction, Pallava style (24871055).jpg
வரி 74 ⟶ 73:
* [http://123.63.242.116/kancheepuram/abus_municip.htm காஞ்சிபுரம் நகராட்சியின் இணையதளம்]
* [http://www.tamilpayani.com/tn/kancheepuram காஞ்சிபுரம் பற்றிய வலைப்பக்கம்]
 
 
 
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
 
 
 
 
[[பகுப்பு:சிறப்பு நிலை நகராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது