சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{சைவ சமயம்}}
 
'''சைவ சமயம்''', '''சிவநெறி''' என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, [[சிவன்|சிவபெருமானை]] முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும்.<ref name="tamilvu.org">http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref> இன்றைய [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து மதத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது. <ref>{{cite book | title=Olasky, M. (2004). The Religions Next Door: What We Need to Know about Judaism, Hinduism, Buddhism, and Islam--and what Reporters are Missing. B&H Publishing Group.}}</ref> இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று சொல்கின்றது.<ref>{{cite book | title=Todd M. Johnson and Brian J. Grim. (2013) “The World’s Religions in Figures: An Introduction to International Religious Demography”, First Edition, John Wiley & Sons Ltd., pp. 1 – 27}}</ref>
 
 
[[கைலாயம்|திருக்கயிலையில்]] [[நந்தி தேவர்]] பணிவிடை செய்ய, [[பிள்ளையார்|பிள்ளையாரும்]] [[முருகன்|முருகனும்]] அருகிருக்க [[பார்வதி]] துணையிருக்க வீற்றிருக்கும் [[சிவன்|சிவபிரானே]] சைவர்களின் [[பரம்பொருள்|பரம்பொருளாக]] விளங்குகின்றார். பொ.பி 12ஆம் நூற்றாண்டில் தன் உச்சத்தை அடைந்திருந்த சைவநெறி, [[ஆப்கானிஸ்தான்]] முதல் [[கம்போடியா]] வரையான தெற்காசியா - தென்கிழக்காசியா
வரி 11 ⟶ 10:
{{main|சைவ சமய வரலாறு}}
===பழங்குடித் தொடர்ச்சி===
[[இமய மலை]]ச் சாரலில் வாழ்ந்த மலைக்குடி வேடுவர்களின் நீத்தார் வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்திருக்கின்றது என்று நம்பப்படுகின்றது.<ref>{{cite book | title=Tiwari, S. K. (2002). Tribal roots of Hinduism. Sarup & Sons.}}</ref> இமயம் [[இமயமலை#நிலவியல்|காலத்தால் பிந்தியது]] என்பதால், தென்னகத்தே எழுந்த இன்னொரு மலைத்தெய்வ வழிபாடே சிவவழிபாடாக வளர்ந்து, மக்கள் குடிப்பெயர்ச்சியால் இமயம் வரை நகர்ந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது.<ref>{{cite book | title=Sen, S. N. (1999). Ancient Indian history and civilization. New Age International.}}</ref> சிவனை உருவகிப்பதில் [[திருநீறு|சாம்பல் பூசுதல்]], புலித்தோலாடை தரித்தல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், பன்றிக்கொம்பு, எலும்புகளை அணிதல் போன்ற பழங்குடி அம்சங்கள் முக்கிய பங்கு வகிப்பதால், பல இனக்குழுக்களின் கலப்பின் விளைவாகப் பிறந்த பெருந்தெய்வமே சிவன் எனலாம். [[நாகர்]] பழைமை வாய்ந்த தனி இனம் என்று வாதிடுவோர், சிவனின் ஆபரணங்களாக நாகங்கள் காணப்படுவதைக் கொண்டு, சிவன் நாகரின் தெய்வம் என்பர்.<ref>{{cite book | title=Lochtefeld, J. G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism: AM (Vol. 1). The Rosen Publishing Group. p.454}}</ref> சிவ இலிங்க வழிபாட்டுக்கு அடிப்படையாக [[நடுகல்]] வழிபாடே அமைந்திருக்கலாம் என்ற கருதுகோளும் உண்டு. இத்தகைய சான்றாவணங்களால், சிவ வழிபாடு மிகத்தொன்மையானது என்றும், மானுடர்களின் மிகப்பழைய தெய்வங்களில் ஒருவன் ஈசன் என்றும் அறியமுடிகின்றது.
 
===சிந்துவெளி நாகரிகச் சான்றுகள்===
[[File:Shiva Pashupati.jpg|thumb|சிந்துவெளியில் கிடைத்த "பசுபதி ஈசன்" முத்திரை]]
பொ.மு 2500 முதல் 2000 வரை நிலவியதாகக் கருதப்படும்<ref name = flood>>{{cite book | title=Flood, Gavin (1996). An Introduction to Hinduism. Cambridge: Cambridge University Press. ப.20-28. {{ISBN|0-521-43878-0}}.}}</ref> சிந்துவெளி நாகரிகக் களவெளிகளில் கிடைத்த சில ஆதாரங்கள், அக்காலத்தே கூட, சிவ வழிபாடு நிலவியிருக்கக்கூடும் என்ற ஊகத்தை வலுப்படுத்துவனவாக இருக்கின்றன. [[மொகெஞ்சதாரோ]], [[ஹரப்பா]] பகுதிகளில் சிவலிங்கத்தை ஒத்த பல கற்கள் கிடைத்துள்ளன. இருகொம்புகளுடன் விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் மனித உருவ முத்திரை, ஈசனின் "பசுபதித்" தோற்றத்தைக் குறிக்கின்றது என்றும் அதுவே மிகப்பழைய முந்து-சிவன் சிற்பம் என்றும் சிந்துவெளி ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருந்தனர்.<ref>{{cite book | title=Michaels, Axel (2004). Hinduism: Past and Present. Princeton, New Jersey: Princeton University Press.ப.312 {{ISBN|0-691-08953-1}}.}}</ref> அதைக் கூர்ந்து ஆராய்ந்த பலர், அது சிவவடிவம் என உறுதியாகச் சொல்லமுடியாதென்றும், எனினும் அமர்ந்திருக்கும் நிலை, தெளிவற்றுத் தெரியும் மூன்று முகங்கள், பிறைநிலா எனக் கொள்ளக்கூடிய இரு கொம்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, இது சிவன் எனும் பெருந்தெய்வம் எழுவதற்கு முந்திய வடிவமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.<ref name = flood/>
 
 
===வேதகாலச் சைவம்===
வரி 24 ⟶ 22:
===தென்னகச் சைவம்===
சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்படும் போதும், அவை கிறிஸ்துவுக்குப் பிந்தியவை என்பது பொதுவான கருத்தாக காணப்படுகின்றது. எனினும் தமிழக மற்றும் இலங்கையில் பொறிக்கப்பட்ட கிறிஸ்துவுக்கு முந்திய [[பிராமி]]ச் சாசனங்களிலும் நாணயங்களிலும் காணப்படும் "சிவ" என்ற பெயரும், நந்தி, திரிசூலம், பிறைநிலா முதலான சிவசின்னங்களும், தென்னகத்தில் பல்லாண்டுகளாகவே சைவம் நிலவிவந்ததற்குச் சான்று கூறும்.<ref>{{cite book | title=இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் | publisher=இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் | author=பத்மநாதன்.சி | year=2013 | pages=1 - 20}}</ref>
 
 
===சைவத்தின் எழுச்சி===
{{முதன்மை|ஆதிமார்க்கம்}}
தெளிவான அடையாளங்களுடன், சைவமானது முழுமையான ஒரு மதமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டது, பொ.மு 3 முதல் பொ.பி 2ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் என்று சொல்லப்படுகின்றது. <ref>{{cite book | title=Flood, Gavin (1996). An Introduction to Hinduism. Cambridge: Cambridge University Press. ப.204 - 205 {{ISBN|0-521-43878-0}}.}}</ref> பொ.மு 6 - 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே தொகுக்கப்பட்ட [[சுவேதாசுவதர உபநிடதம்|சுவேதாசுவதரமே]] மிகப்பழைமையான சைவ நூலாகக் கொள்ளப்ப்படுகின்றது.<ref>{{cite book | title=Chakravarti, Mahadev (1994), The Concept of Rudra-Śiva Through The Ages (Second Revised ed.), Delhi: Motilal Banarsidass, ப.9 {{ISBN|81-208-0053-2}}}}</ref> உலக இன்பங்களைத் துறந்து கடுநோன்புகள் புரிந்து [[தாந்திரீகம்|தாந்திரீக]] நெறியில் ஈசனை வழிபடும் வழக்கம், கிறிஸ்து காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இவர்கள் "[[பாசுபதம்|பாசுபதர்]]" என்று அறியப்பட்டனர். பாணினியின் [[அட்டாத்தியாயி|அஷ்டாத்யயி]] எனும் சங்கத இலக்கண நூலுக்கு [[பதஞ்சலி]] முனிவர் எழுதிய மாபாடிய உரையில் (பொ.மு 2ஆம் நூற்றாண்டு) , பாசுபதர் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது. பாசுபதரில் தலைசிறந்தவரான [[இலகுலீசர்]] இக்காலத்திலேயே (பொ.மு 2 முதல் பொ.பி 2ஆம் நூற்றாண்டு) தோன்றி, பாசுபத நெறியை வளப்படுத்தியதாகத் தெரிகின்றது.
[[File:Harihara_Majapahit_1.JPG|thumb|சங்கரநாரணன் வடிவில் இந்தோனேசியாவில் ஈசன்.]]
இலகுலீசருக்குப் பின் அவர் ஏற்படுத்திய புரட்சி, பாசுபதத்திலிருந்து, [[காளாமுகம்]], [[காபாலிகர்|காபாலிகம்]] எனும் இரு கிளைச்சைவங்களை அடுத்தடுத்து உருவாக்கியது. இவை மூன்றும் [[ஆதிமார்க்கம்]] என்றே அறியப்பட்டதுடன், துறவிகளுக்கு, குறிப்பாக [[அந்தணர்|அந்தணராகப்]] பிறந்து சைவ சன்னியாசிகளாக மாறியோரால் மாத்திரமே கடைப்பிடிக்கப்பட்டது. வைணவம், பௌத்தம், சமணம் முதலான நெறிகளுடன் இவைகொண்ட உரையாடல்கள், சைவத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சென்றதுடன், பொ.பி 5ஆம் நூற்றாண்டுக்குப் பின் சைவம் மாபெரும் சமயமாக எழுச்சிபெறுவதற்கான உறுதியான கால்கோள்களாக விளங்கின.
வரி 34 ⟶ 31:
===சைவத்தின் உன்னதகாலம்===
 
பொ.பி 600 முதல் 1200 வரையான காலம், சைவத்தின் பேரெழுச்சிக் காலமாக அறியப்படுகின்றது. ஆதிமார்க்கத்துக்குப் பின் உருவான [[சைவ சித்தாந்தம்|சித்தாந்தமும்]], [[வாம சைவம்|வாமம்]], [[தட்சிண சைவம்|தட்சிணம்]] முதலான [[புறச்சித்தாந்த சைவம்|புறச்சித்தாந்த]] நெறிகளும் [[மந்திரமார்க்கம்]] எனும் பிரிவை சைவத்தில் தோற்றுவித்தன. இவை துறவிகளுக்கு மாத்திரமன்றி, இல்லறத்தாருக்கும் உலகியல் இன்பங்களுக்கும் உரிய முன்னுரிமை கொடுத்ததால், தீவிரமாக மக்கள் மத்தியில் பரவலாயிற்று. சமணம், பௌத்தம் என்பவற்றுக்கு எதிராக, [[அப்பர்]], [[சம்பந்தர்]] முதலான [[நாயன்மார்]], பக்தி இயக்கத்தை ஏற்படுத்தி, சமூக மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தனர். வடநாட்டில் இதேகாலத்தில் உருவான [[புராணங்கள்]] மக்கள் மத்தியில் சைவத்தை எடுத்துச்செல்லலாயின.
 
இக்காலத்தில் சைவம், இந்திய உபகண்டத்தில் மாத்திரமன்றி, [[தென்கிழக்காசியா]] வரை கூட மிகச்சிறப்புடன் திகழ ஆரம்பித்தது. [[பாதாமி]] [[சாளுக்கியர்|சாளுக்கிய மன்னன்]] விக்கிரமாதித்தன் (660 கி.பி), [[கீழைக் கங்கர்|கீழைக்கங்கன்]] தேவேந்திரவர்மன் (682/683), [[காஞ்சி]]யின் [[இரண்டாம் நரசிம்ம பல்லவன்]] (680 - 728) போன்றோர், சைவ ஆச்சாரியர்களிடம் மகுடாபிஷேகம் பெற்றே பட்டம்சூடிக்கொண்டதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. [[கம்போடியா]]வின் [[அங்கோர்]] வம்சத்து முதல் மன்னன் ஈசானவர்மனும் சைவத்துறவியிடமே இராஜ்யாபிஷேகம் பெற்றுக்கொண்டதும், சாவகத்து [[மயாபாகித்துப் பேரரசு]] மன்னன் விஜயன், சைவ மகுடாபிஷேகம் பெற்று நாட்டை ஆண்டதும், தென்கிழக்காசிய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite book | title=White, D. G. (2001). Tantra in practice (Vol. 8).p.133. Motilal Banarsidass Publ..}}</ref> இவ்வாறு, துறவிகளின் மதமாக இருந்த சைவம், அரச ஆதரவைப் பெற ஆரம்பித்ததுடன், அதற்கு முன் அரச ஆதரவைப் பெற்றிருந்த சமணம், பௌத்தம் என்பவற்றைத் தன் தத்துவச்செழிப்பால் தோற்கடித்து தன்னை வலுப்படுத்திக்கொண்டது.
 
இக்காலத்தில் சைவம், இந்திய உபகண்டத்தில் மாத்திரமன்றி, [[தென்கிழக்காசியா]] வரை கூட மிகச்சிறப்புடன் திகழ ஆரம்பித்தது. [[பாதாமி]] [[சாளுக்கியர்|சாளுக்கிய மன்னன்]] விக்கிரமாதித்தன் (660 கி.பி), [[கீழைக் கங்கர்|கீழைக்கங்கன்]] தேவேந்திரவர்மன் (682/683), [[காஞ்சி]]யின் [[இரண்டாம் நரசிம்ம பல்லவன்]] (680 - 728) போன்றோர், சைவ ஆச்சாரியர்களிடம் மகுடாபிஷேகம் பெற்றே பட்டம்சூடிக்கொண்டதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. [[கம்போடியா]]வின் [[அங்கோர்]] வம்சத்து முதல் மன்னன் ஈசானவர்மனும் சைவத்துறவியிடமே இராஜ்யாபிஷேகம் பெற்றுக்கொண்டதும், சாவகத்து [[மயாபாகித்துப் பேரரசு]] மன்னன் விஜயன், சைவ மகுடாபிஷேகம் பெற்று நாட்டை ஆண்டதும், தென்கிழக்காசிய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite book | title=White, D. G. (2001). Tantra in practice (Vol. 8).p.133. Motilal Banarsidass Publ..}}</ref> இவ்வாறு, துறவிகளின் மதமாக இருந்த சைவம், அரச ஆதரவைப் பெற ஆரம்பித்ததுடன், அதற்கு முன் அரச ஆதரவைப் பெற்றிருந்த சமணம், பௌத்தம் என்பவற்றைத் தன் தத்துவச்செழிப்பால் தோற்கடித்து தன்னை வலுப்படுத்திக்கொண்டது.
 
===பிற்காலம்===
[[காஷ்மீர்|காஷ்மீரில்]] பல்கிப்பெருகிய சைவநெறி, தொடர்ச்சியான முகலாயப் படையெடுப்பால் தென்னகம் நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே சைவம் செழித்திருந்த தென்னகம், சைவத்தை மேலும் வரவேற்றதுடன், காஷ்மீரில் தோன்றி வளர்ந்துகொண்டிருந்த சித்தாந்த மந்திரமார்க்கத்தை மேலும் வலுப்படுத்தி, [[இந்திய மெய்யியல்]] வரலாற்றிலேயே முதன்முறையாக, சமஸ்கிருதம் அல்லாத வேற்றுமொழியொன்றில் - தமிழில் - சைவ மெய்யியலொன்றைத் தோற்றுவித்துச் சரித்திரம் படைத்தது. அதேகாலத்தில் பிராமண எதிர்ப்புடன் கன்னட தேசத்தில் தோன்றிய [[வீர சைவம்]] சாதிமத வேறுபாடின்றி, சகலரிடமும் சைவத்தைக் கொண்டு சேர்த்தது. இவ்வாறு, தமிழகம், காஷ்மீர், கன்னடம் ஆகிய மூன்று பகுதிகளும், சைவ சமயத்தின் தவிர்க்கமுடியாத - இன்றியமையாத பாகங்களாக மாறிப்போயின.
 
 
==சைவக் கிளைநெறிகள்==
{{முதன்மை|சைவ சமய பிரிவுகள்}}
[[File:Saivismsects.jpg|thumb|500 px| சைவம் - அதன் கிளைநெறிகளின் தோற்றமும் வளர்ச்சியும்]]
 
ஊர்த்தசைவம், அனாதி சைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேத சைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாதசைவம், சுத்தசைவம் என்று '''பதினாறு''' வகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிபடுஞ் சமயம், '''சைவம்''' ஆகும். <ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.5:1:4173.tamillex சென்னைப் பேரகரமுதலி - சைவ வகைகள்]</ref>
# [[காஷ்மீர சைவம்|காசுமீர சைவம்]]
# [[வீர சைவம்]]
வரி 55 ⟶ 50:
# [[காளாமுகம்]]
இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம், [[இந்தியா]]வில் மட்டுமன்றி [[நேபாளம்]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.
 
 
 
== சைவ மெய்யியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சைவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது