எஜமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 26:
==கதைக்கரு==
வானவராயன் ([[ரஜினிகாந்த்]]) ஊருக்கு எஜமான் (ஊர்த்தலைவர்), மக்களின் அன்பைப் பெற்றவர். தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருடைய ஆலோசனைப்படி, ஊர்மக்கள் பொதுத்தேர்தலைப் புறக்கணிக்கின்றனர், அதனால் இவருடைய பங்காளியான வல்லவராயனின் (நெப்போலியன்) பகையைப் பெறுகிறார். வானவராயன், இருவருக்கும் [[முறைப்பெண்]] ஆன வைதீஸ்வரியை (மீனா) மணப்பதால் இப்பகை மேலும் வலுப்பெறுகிறது. இதன் காரணமாக வைதீஸ்வரிக்கு நச்சு கலந்து கொடுக்க, அவருடைய [[கருப்பை]] பாதிப்புக்குள்ளாகி [[மலட்டுத்தன்மை]] உருவாகின்றது.
வானவராயனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தான் கர்ப்பமாக இருப்பதாக [[பொய்]] கூறி நடிக்கும் வைதீஸ்வரி, ஒரு கட்டத்திற்குமேல் நஞ்சு உண்டு [[தற்கொலை]] செய்து கொள்கிறார். இறக்கும்போது பொன்னியை (ஐஸ்வர்யா) திருமணம் செய்துகொள்ளுமாறு [[வாக்குறுதி]] வாங்கிக்கொண்டு உயிரிழக்கிறார். அதன்பிறகு வல்லவராயனை எவ்வாறு எதிர்கொள்கிறார், மக்களின் மனதில் திரும்பவும் எஜமானனாக எவ்வாறு திகழ்கிறார் என்பதை காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
வானவராயன் பொன்னியை மணந்து கொள்வது போலவும், அவர்களுக்கு பிறக்கும் மகளுக்கு வைதீஸ்வரி என்று பெயர் வைப்பதாகவும், டிவிடி குறுந்தட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
== நடிப்பு ==
வரிசை 90:
{{ஆர். வி. உதயகுமார்}}
[[பகுப்பு:1993 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]]
|