திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றையாக்கம்
சி பராமரிப்பு using AWB
வரிசை 35:
| 11 || [[துருக்கி]] || நவம்பர் 28-30 || 2014 || 2014, நவம்பர் 28-30இல் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி நாட்டுப் பயணம் நிகழ்த்தினார். முதலில் அவர் துருக்கி நாட்டுத் தலைநகரான [[அங்காரா]] சென்று சேர்ந்து அங்கு துருக்கி நாட்டு அதிபராலும், முதலமைச்சராலும் பிற அதிகாரிகளாலும் வரவேற்கப்பட்டார். நவம்பர் 28ஆம் நாள் வெள்ளிக் கிழமை அவர் சமய நல்லிணக்கம் பற்றி உரையாற்றினார். நாட்டு அதிபர் ரெசெப் தயீப் எர்தோகான் அரண்மனையில் பேசிய அவர் கூறியது: “சமயங்களின் பெயரால் தீவிர வாதத்தையும் அடிப்படை வாதத்தையும் அர்த்தமற்ற அச்சங்களையும் புரிதலின்மைகளையும் வேறுபடுத்தி ஒதுக்குதலையும் கடைப்பிடிப்பது முறையற்றது. சமய நபர்கள் சமய நல்லிணக்கத்திற்கான உரையாடலிலும் நட்புறவை வளர்ப்பதிலும் ஈடுபட வேண்டும். தீவிர வாதத்தையும் அடிப்படை வாதத்தையும் இராணுவ நடவடிக்கையால் மட்டுமே முறியடித்துவிட முடியாது. மாறாக, சமய நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.”
 
[[இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு]] என்ற பெயரில் இசுலாமிய ஆட்சியைத் திணிக்க முயல்கின்ற தீவிரவாதக் குழு மேற்கொண்டுள்ள போர்ச்செயல்களின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் அகதிகளாக துருக்கிநாட்டு எல்லையில் குவிந்துள்ளனர். இவ்வாறு அடைக்கலம் தேடிவந்துள்ள 1.6 மில்லியன் குர்து இன [[யசீதி மக்கள்]], கிறித்தவர்கள் போன்றவர்களை ஏற்று அவர்களுக்கு உதவி செய்ததற்காகத் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி நாட்டைப் பாராட்டினார். மேலும் இந்த அகதிகளுக்கு மேலதிக உதவிசெய்திட பன்னாட்டு அரசுகள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சமய நம்பிக்கை கொண்ட எல்லா மக்களும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் ஈடுபட வேண்டும்.
 
இசுலாம் சமயத்தைக் கண்டு அஞ்சுவதும் அதை வெறுப்பதும் மேற்கு நாடுகளில் ஆங்காங்கே உள்ளது என்று சுட்டிக்காட்டிய துருக்கி அதிபர் எர்தோகான், சமய நல்லிணக்க உரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
வரிசை 41:
திருத்தந்தை பிரான்சிசு, நவீன துருக்கி நாட்டின் தந்தையாகக் கருதப்படுகின்ற [[முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்]] என்பவரின் நினைவிடம் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 
நவம்பர் 28ஆம் நாள் சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிசு [[இசுதான்புல்]] நகருக்குச் சென்றார். [[காண்ஸ்டாண்டிநோபுள்]] என்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இந்நகரத்தில் கிறித்தவ சமயமும் கலாச்சாரமும் ஆழ வேரூன்றி இருந்தன. இன்று அந்நகரத்தில் இசுலாமியக் கலாச்சாரம் பரவலாக உள்ளது. அந்நகரில் உள்ள [[ஹேகியா சோபியா]] என்ற எழில்மிகு கலைக்கூடத்திற்கு அவர் சென்றார். இன்று கலைக்கூடமாக உள்ள இந்தக் கட்டடம் வரலாற்றுப்புகழ் மிக்கது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் கிறித்தவப் பெருங்கோவிலாகக் கட்டப்பட்ட இந்த வழிபாட்டிடம் 1453 வரை கீழை மரபுக் கிறித்தவத்தின் மையமாகவும் கிறித்தவக் கலாச்சாரத்தின் உச்சமாகவும் விளங்கியது. ”கடவுளின் புனித ஞானம்” என்று பெயர்பெற்ற இப்பெருங்கோவிலை சுல்தான் இரண்டாம் மெகமத் என்பவரின் தலைமையில் துருக்கியர் 1453இல் கைப்பற்றி அதை இசுலாமியத் தொழுகையிடமான மசூதியாக மாற்றினார்கள். 1935இல் இது ஒரு கலைக்கூடமாக மாற்றப்பட்டது. இவ்வாறு வரலாற்றுச் சின்னங்கள் பலவற்றை உள்ளடக்கிய இவ்விடத்தைத் திருத்தந்தை பிரான்சிசு சந்தித்தார். அங்கு பொன்னேட்டில் பிரான்சிசு முதலில் “கடவுளின் புனித ஞானம்” என்று கிரேக்க மொழியில் (“Αγία Σοφία του Θεού”) எழுதினார். அதன் கீழே ”ஆண்டவரே, உமது உறைவிடம் எத்துணை அருமையானது” என்ற விவிலிய வசனத்தை எழுதினார் (திருப்பாடல்கள் 84:1). கீழே கையெழுத்திட்டார். <ref>[http://www.news.va/en/news/pope-francis-in-turkey-day-2-morning-highlights ”கடவுளின் புனித ஞானம்” பெருங்கோவில் சந்திப்பு]</ref>
 
அதற்கு முன்னர் திருத்தந்தை பிரான்சிசு ”நீல மசூதி” என்றும் ”சுல்தான் அகமத் மசூதி” (Sultan Ahmed Mosque) என்றும் அழைக்கப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இசுலாமிய வழிபாட்டிடம் சென்றார். மசூதியின் பகுதிகளைப் பார்வையிட துருக்கிய இசுலாமியப் பெருந்தலைவர் (Grand Mufti) ராமி யாரான் பிரான்சிசோடு சென்றார். பின்னர் இசுலாமிய வழிபாட்டின்போது அங்கு நின்று ராமி யாரானோடு நின்றுகொண்டு, மெக்கா திசை நோக்கி, திருத்தந்தை பிரான்சிசு தலைகுனிந்து, கைகளை இணைத்து அமைதியாக இறைவேண்டலில் தியானம் செய்தார். இரு நிமிடங்கள் இவ்வாறு தொழுததும் ராமி யாரான், “இறைவன் இந்த வேண்டுதலை ஏற்பாராக” என்று கூறி முடித்தார். <ref>[http://www.aljazeera.com/news/middleeast/2014/11/pope-francis-prays-istanbul-blue-mosque-20141129122643736106.html மசூதியில் தொழுகை]</ref>
 
சுமார் 75 மில்லியன் மக்கள் தொகை கொண்ட துருக்கி நாட்டில் 98% பேர் இசுலாமியர். எஞ்சியோரில் கத்தோலிக்கரும், மரபுவழிக் கிறித்தவர்களும், புரட்டஸ்டாண்டு கிறித்தவர்களும் உட்பட 120,000 பேர் மட்டுமே கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள் (0.2%). இலத்தீன் கத்தோலிக்கர் 35,000 பேர். இவ்வாறு மிகச் சிறிய கிறித்தவக் குழுவே உள்ள துருக்கி நாட்டில் திருத்தந்தை பிரான்சிசு தூய ஆவி பெருங்கோவிலில் நவம்பர் 29ஆம் நாள் சனிக்கிழமை கீழைத் திருச்சபைகளால் பெரிதும் போற்றப்படுகின்ற புனித அந்திரேயா திருவிழாவை முன்னிட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்.
 
மரபுவழிக் கீழைத் திருச்சபைகளின் தலைவரான மறைமுதுவரான முதலாம் பர்த்தலமேயுவோடு சேர்ந்து, திருத்தந்தை பிரான்சிசு “கிறித்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில்” கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி இசுதான்புல் நகரில் உள்ள மரபுவழிக் கிறித்தவப் பெருங்கோவிலான புனித ஜோர்ஜ் ஆலயத்தில் நிகழ்ந்தது. அங்குதான் மறைமுதுவரின் ஆட்சிப்பீடம் உள்ளது. கிறித்தவ ஒன்றிப்பு நிகழ்ச்சியின்போது திருத்தந்தை பிரான்சிசு மறைமுதல்வரை அணுகி, அவருக்குமுன் தலைகுனிந்து நின்று தம்மையும் உரோமைத் திருச்சபையையும் ஆசிர்வதிக்க கேட்டார். மறைமுதல்வரும் பிரான்சிசின் தலையில் முத்தமிட்டு இறை ஆசியை வேண்டினார். உலகெங்கிலும் உள்ள சுமார் 1.2 பில்லியன் கத்தோலிக்க கிறித்தவர்களுக்குத் தலைவரான திருத்தந்தை பிரான்சிசு, சுமார் 300 மில்லியன் மரபுவழிக் கிறித்தவர்களுக்குத் தலைவரான மறைமுதல்வர் பர்த்தலமேயுவை சந்தித்த நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இரு சபைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இச்சந்திப்பு உதவும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். <ref>[http://ncronline.org/news/global/francis-decries-forced-uniformity-prays-mosque-turkey கிறித்தவ ஒன்றிப்பு முயற்சியில் பிரான்சிசும் பர்த்தலமேயுவும்]</ref>
 
உலகத்தில் நிலவுகின்ற இரு பெரும் கிறித்தவத் திருச்சபைகளின் தலைவர்களான திருத்தந்தை பிரான்சிசும் (கத்தோலிக்க கிறித்தவ சபை), முதலாம் பர்த்தலமேயு (கீழை மரபுவழி திருச்சபை) இணைந்து முக்கியமானதோர் கூட்டறிக்கை விடுத்தனர். அந்த அறிக்கையில் கூறப்படும் சில கருத்துக்கள்: 1) உலகத்தில் பல பிரிவுகளாகப் பிளவுபட்டுக் கிடக்கின்ற கிறித்தவ சபைகள் ஒற்றுமை கொணர உழைக்க வேண்டும். குறிப்பாக, கத்தோலிக்க கிறித்தவ சபையும், மரபுவழி சபையும் இந்த ஒற்றுமை முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். 2) நடு ஆசியாவில், குறிப்பாக ஈராக், சிரியா நாடுகளில் நிலவுகின்ற வன்முறைகள் ஒழிய வேண்டும். அங்கு 2000 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த கிறித்தவ சமூகங்களைத் துன்புறுத்தி வெளியேற்றுகின்ற செயல்பாடு நிறுத்தப்பட வேண்டும். 3) எல்லா சமயத்தவரும் நல்லிணக்கத்தோடு வாழ்கின்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும். 4) இசுலாம் பெயரால் வன்முறையில் ஈடுபடுகின்ற ISIS போன்ற அமைப்புகளைத் தடுத்துநிறுத்துவது தேவை. அதே நேரத்தில் அவற்றோடு உரையாடலில் ஈடுபடுவதும் முக்கியம். உலகளாவிய இசுலாமியத் தலைவர்கள் தீவிரவாத இயக்கங்களைக் கண்டிக்க வேண்டும்.<ref>[http://www.news.va/en/news/pope-francis-patriarch-bartholomew-sign-joint-decl திருத்தந்தை பிரான்சிசும் மறைமுதல்வர் பர்த்தலமேயுவும் விடுத்த கூட்டறிக்கை]</ref>
 
துருக்கி நாட்டுக்கு இதுவரை நான்கு திருத்தந்தையர்கள் பயணமாகச் சென்றுள்ளனர். 1967இல் [[திருத்தந்தை ஆறாம் பவுல்]], 1979இல் [[திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]], 2006இல் [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]], 2014இல் [[திருத்தந்தை பிரான்சிசு]] ஆகியோர் துருக்கி சென்றுள்ளனர். <ref>[http://www.voanews.com/content/pope-francis-wraps-up-visit-to-turkey/2539874.html திருத்தந்தை பிரான்சிசின் துருக்கிப் பயணம் நிறைவு]</ref>
|-
| 12 || [[இலங்கை]] || சனவரி 13-15 || 2015 || பயண நிகழ்வுகள்: சனவரி 12 மாலை: உரோமையிலிருந்து புறப்படுகிறார். சனவரி 13: காலையில் கொழும்பு பன்னாட்டு விமான நிலையம் வந்தடைகிறார். வரவேற்பு நிகழ்ச்சி, உரை. பிற்பகல்: இலங்கையின் கத்தோலிக்க ஆயர்களுக்கு உரையாற்றுகிறார். மாலை: இலங்கை அதிபரை சந்தித்தல்; பல்சமய நல்லிணக்கக் கூட்டத்தில் கலந்து உரையாற்றுகிறார். சனவரி 14: [[கொழும்பு]] நகரில் அருளாளர் [[யோசப் வாசு|யோசேப்பு வாஸ்]] என்பவருக்குத் திருத்தந்தை பிரான்சிசு புனிதர் பட்டம் வழங்குகிறார்; மறையுரை ஆற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு உலங்கு வானூர்தியில் கொழும்பிலிருந்து புறப்பட்டு இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள புகழ்மிக்க [[மடு மரியாள் ஆலயம்|மடு அன்னை மரியா]] திருத்தலத்திற்குச் சென்று அங்கே 3:30 மணியளவில் மரியன்னையின் மன்றாட்டினை நிகழ்த்துகிறார். உரையாற்றுகிறார். பின்னர் உலங்கு வானூர்தியில் கொழும்பு வருகிறார். சனவரி 15: பொலவலானாவில் இலங்கையின் அரசி என்று போற்றப்படுகின்ற அன்னை மரியாவின் திருத்தலத்திற்குச் சென்று வேண்டுதல் நிகழ்த்துகிறார். கொழும்பிலிருந்து புறப்பட்டு பிலிப்பீன்சு நாடு செல்கிறார்.
வரிசை 62:
செப்டம்பர் 20, ஞாயிறு - காலை 9 மணி - அவானா நகரின் புரட்சி வளாகத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுகிறார். மூவேளை மன்றாட்டு நிகழ்த்துகிறார். மாலை 4 மணி - திருத்தந்தை கியூபாவின் அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை புரட்சி மாளிகையில் அலுவல் முறையில் சந்திக்கிறார். மாலை 5:15 மணி - திருத்தந்தை பிரான்சிசு, கியூபா நாட்டு குருக்கள், துறவியர், குருமாணவர் ஆகியோரோடு அவானா மறைமாவட்டப் பேராலயத்தில் மாலை வழிபாடு நிகழ்த்துகிறார். மறையுரை ஆற்றுகிறார். மாலை 6:30 மணி - திருத்தந்தை பிரான்சிசு கியூபாவின் இளையோரை அவானாவில் சந்தித்து உரையாற்றுகிறார்.
 
செப்டம்பர் 21, திங்கள்: திருத்தந்தை பிரான்சிசு, கியூபாவின் ஓல்கின் நகர் சென்று, திருப்பலி நிகழ்த்தி, மறையுரை ஆற்றுகிறார். நகருக்கு ஆசி வழங்கியபின் சந்தியாகு நகருக்குப் பயணமாகிறார். கியூபாவின் சந்தியாகு நகரில் திருத்தந்தை, கியூபாவின் ஆயர்களை சந்தித்துப் பேசுகிறார். கியூபா நாட்டின் பாதுகாவலரான அன்பின் அன்னை மரியா கோவிலில் அன்னையின் திருவுருவத்தின் முன் வேண்டுதல் நிகழ்த்துகிறார்.
 
செப்டம்பர் 22, செவ்வாய் - அன்பின் அன்னை மரியா கோவிலில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிகழ்த்துகிறார். சந்தியாகு நகரில் குடும்பங்களை சந்திக்கிறார். நண்பகலில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகரான வாசிங்டனுக்குப் புறப்படுகிறார்.
வரிசை 72:
செப்டம்பர் 23, புதன் - காலை 9:15 மணி - திருத்தந்தை பிரான்சிசு அமெரிக்க அதிபர் ஒபாமை வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார்.
காலை 11:30 மணி - வாசிங்டன் நகர் புனித மத்தேயு பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிசு அமெரிக்க ஆயர்களை சந்தித்துப் பேசுகிறார்.
மாலை 4:15 மணி - வாசிங்டன் நகரில் அமைந்துள்ள தேசிய திருத்தலமான அமலோற்பவ அன்னை பெருங்கோவிலில் அருளாளர் ஜுனீப்பெரோ செர்ரா என்பவருக்குப் புனிதர் பட்டம் வழங்கல். திருப்பலி. ஜுனீப்பெரோ செர்ரா என்பவர் எசுப்பானிய நாட்டிலிருந்து அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிக்கு வந்து, அங்கு அமெரிக்க முதற்குடி மக்களிடையே பணிபுரிந்து அவர்களுள் பலரை கத்தோலிக்க மதத்தில் சேர்த்தார். அவர் ஏற்படுத்திய மறைத்தளங்கள் அம்மக்களுக்குப் புகலிடமாகவும், அவர்கள் தொழில் புரியும் தளங்களாகவும் செயல்பட்டன.
 
செப்டம்பர் 24, வியாழன்: காலை 9:20 - அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவைகளின் கூட்டு அமர்வின்போது திருத்தந்தை பிரான்சிசு உரையாற்றுகின்றார். இவ்வாறு கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான திருத்தந்தை ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினருக்கு உரையாற்றுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. காலை 11:15 மணி - வாசிங்டன் மறைமாவட்ட கத்தோலிக்க சமூக அன்புச் சேவை நிறுவனம் நடத்துகின்ற சேவைத் தளத்திற்குத் திருத்தந்தை பிரான்சிசு செல்கிறார். அங்கு ஏழை மக்களை சந்திக்கிறார். மாலை 4 மணிக்கு வாசிங்டனிலிருந்து புறப்பட்டு, 5 மணிக்கு நியூயார்க் ஜான் எப். கென்னடி விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார் திருத்தந்தை பிரான்சிசு. மாலை 6:45 - திருத்தந்தை பிரான்சிசு நியூயார்க் மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலான புனித பாட்ரிக் கோவிலில் மாலை வழிபாடு நிகழ்த்துகிறார்.
வரிசை 78:
செப்டம்பர் 25, வெள்ளி: காலை 8:30 மணி - திருத்தந்தை பிரான்சிசு ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையில் பேருரை ஆற்றுகின்றார். ஐக்கிய நாடுகளின் 70ஆம் ஆண்டு நிகழ்வு. இந்த உரையின்போது, உலக நாடுகள் சுற்றுச்சூழல் மாசுறாமல் பாதுகாப்பதிலும், புவி வெப்பம் ஏற்பட்டு கடல் நீர் உயர்ந்து நாடுகள் அழிவுறாமல் தவிர்ப்பதிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தி, உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11:30 மணி - நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் சென்று, அங்குள்ள நினைவு காட்சியகத்தில் பல்சமய வழிபாடு நிகழ்த்துகிறார் திருத்தந்தை பிரான்சிசு. இத்தளத்தில் தான் 2001, செப்டம்பர் 11ஆம் நாள் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். மாலை 4 மணி: நியூயார்க்கின் ஹார்லம் பகுதிக்குச் சென்று அங்கு வானதூதரின் அன்னை மரியா கல்விக்கூடத்தைச் சந்திக்கிறார். கடந்த 120 ஆண்டுகளாகச் செயல்படுகின்ற அப்பள்ளிக் கூடத்தின் பெரும்பான்மை மாணவர்கள் எசுப்பானிய, மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்க பின்னணியைச் சார்ந்தவர்கள். மாலை 5 மணி: திருத்தந்தை பிரான்சிசு, நியூயார்க் நகரின் முக்கிய பூங்காவான “மத்திய பூங்கா” (Central Park) பகுதியில் ஊர்தியில் செல்கிறார். அங்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அவரை வரவேற்பர். மாலை 6 மணி: நியூயார்க்கின் மாடிசன் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிகழ்த்துகிறார். அப்போது சுமார் 20,000 மக்கள் பங்கேற்பர்.
 
செப்டம்பர் 26, சனி: காலை 8:40 மணி - திருத்தந்தை பிரான்சிசு, ஜான் எப். கென்னடி வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்டு பிலடெல்பியா நகர் செல்கிறார். காலை 9:30 - திருத்தந்தை பிரான்சிசு, பிலடெல்பியா நகர் வந்தடைகிறார். காலை 10:30 - பிலடெல்பியா மறைமாவட்டப் பேராலயமான தூய பேதுரு மற்றும் பவுல் கோவிலில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிகழ்த்துகிறார். மாலை 4:45 மணி - திருத்தந்தை பிரான்சிசு, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிறப்பிட்மாகக் கருதப்படுகின்ற பிலடெல்பியாவின் “சுதந்திர வளாகம்” (Independence Mall) பகுதிக்குச் செல்கிறார். இங்குதான் அமெரிக்காவின் சுதந்திர அறிக்கையும், அரசியல் சாசனமும் கையெழுத்திடப் பட்டன. மேலும் “விடுதலை மணி” ((Liberty Bell) என்னும் கீறலுற்ற மணியும் இங்குதான் உள்ளது. அங்கு, ஆபிரகாம் லிங்கன் “கெட்டிஸ்பெர்க் உரை” என்னும் பேருரையை வழங்கிய உரை மேடை உள்ளது. அந்த மேடையிலிருந்து திருத்தந்தை பிரான்சிசு சுமார் 50,000 மக்கள் அடங்கிய பெருங்கூட்டத்தினருக்கு உரையாற்றுகிறார். அகதிகளுக்கும் இடம்பெயர்ந்து சென்று குடியேறுவோருக்கும் எதிரான சட்டங்களை அகற்றிவிட்டு, அவர்களை வரவேற்றுக் குடியமர்த்த வேண்டும் என்று திருத்தந்தை வேண்டுகோள் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 7:30 மணி - திருத்தந்தை பிரான்சிசு, குடும்பங்களின் விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். உரையாற்றுகிறார். இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்.
 
செப்டம்பர் 27, ஞாயிறு: காலை 9:15 மணி - பிலடெல்பியாவின் புனித சார்லசு பொரோமெயோ குருத்துவக் கல்லூரியின் புனித மார்ட்டின் ஆலயத்தில், திருத்தந்தை பிரான்சிசு, குடும்பங்களின் உலக மாநாடு தொடர்பான ஆயர்களை சந்தித்து உரையாற்றுகிறார். காலை 11 மணி - திருத்தந்தை பிரான்சிசு, பிலடெல்பியாவின் சிறைக்கூடங்களில் ஒன்றாகிய கரன்-ப்ரம்கோல்ட் சிறைக்கூடத்திற்குச் சென்று, அங்கு சிறைக் கைதிகள் சிலரையும், அவர்களுடைய குடும்பத்தாரையும், சிறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகிறார். மாலை 4 மணி - திருத்தந்தை பிரான்சிசு, குடும்பங்களின் உலக மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திருப்பலி நிறைவேற்றி, மறையுரை ஆற்றுகிறார். மாலை 7 மணி - பிலடெல்பியாவின் வானூர்தி நிலையத்தில் குடும்பங்களின் உலக மாநாடு தொடர்பான நன்கொடையாளர்கள், பணி ஆர்வலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போன்றோரை சந்தித்து உரையாற்றுகிறார். மாலை 8 மணி - கியூபா நாட்டிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் தமது 9 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரியாவிடை பெற்று, திருத்தந்தை பிரான்சிசு உரோமை நகருக்குப் பயணமாகிறார் (மேலதிகத் தகவல்கள் கீழே)
வரிசை 89:
பிற்பகலில் திருத்தந்தை குருக்கள், ஆண் துறவியர், பெண் துறவியர், குருமாணவர்கள் ஆகியோரை சந்தித்து உரையாற்றினார்.
 
மாலையில் திருத்தந்தை நைரோபியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பிரதேச அலுவலகலத்தில் உரையாற்றினார்.
 
நவம்பர் 27, வெள்ளி: திருத்தந்தை பிரான்சிசு நைரோபி நகரின் ஏழைமக்கள் குடியிருப்பான “கங்கேமி” என்ற பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்திக்கிறார்.
வரிசை 101:
நவம்பர் 28, சனி: உகாண்டா நாட்டின் நமுகோங்கோ நகரில் அமைந்துள்ள “உகாண்டா ஆங்கிலிக்கன் மறைசாட்சியர் திருத்தலம்” சென்று சந்திக்கிறார். பின்னர் “உகாண்டா கத்தோலிக்க மறைசாட்சியர் திருத்தலம்” செல்கிறார். அங்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றுகிறார்.
 
இளையோரை சந்திக்கிறார். அன்பு இல்லம் செல்கிறார். உகாண்டா நாட்டு ஆயர்களைப் பேராயர் இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார். மறைமாவட்டப் பேராலயத்தில் குருக்கள், துறவியர், குருமாணவர்கள் ஆகியோரை சந்தித்து உரையாற்றுகிறார்.
 
நவம்பர் 29, ஞாயிறு: உகாண்டா நகரின் எண்டேபே விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிசுக்குப் பிரியாவிடை வழங்கப்படுகிறது. திருத்தந்தை, [[மத்திய ஆப்பிரிக்க குடியரசு|மத்திய ஆப்பிரிக்க குடியரசின்]] தலைநகரான பாங்குயி நகர் விமான நிலையத்தில் வந்து சேர்கிறார். நாட்டுத் தலைவர்களை சந்திக்கிறார். நற்செய்திசார் சபையினரை சந்திக்கிறார். கத்தோலிக்க குருக்கள், துறவியர், மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இளையோரை சந்தித்து உரையாற்றுகிறார். ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கேற்கிறார்.
வரிசை 111:
மெக்சிகோ நாட்டில் திருத்தந்தை பிரான்சிசின் பயண நிகழ்ச்சிகள்:<ref>[http://www.news.va/en/news/full-schedule-for-pope-francis-trip-to-mexico-in-f திருத்தந்தை பிரான்சிசின் மெக்சிகோ பயண நிகழ்ச்சிகள்]</ref>
 
2016 பெப்ருவரி 12, வெள்ளி - திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டுக்குத் திருப்பயணமாகச் செல்கின்ற வழியில், கியூபா நாட்டுத் தலைநகர் அவானா விமானத் தளத்தில், கிறித்தவ ஒன்றிப்பை வலுப்படுத்தும் வகையில், உருசிய மரபுவழி திருச்சபையின் பெருந்தலைவர் மறைமுதுவர் கிரில் என்பவரை சந்தித்து உரையாடினார். சுமார் ஆயிரம் ஆண்டளவாகத் தொடர்பின்றி இருந்த இரு சபைகளும் (கத்தோலிக்கம், உருசிய மரபுவழி சபை) இணைந்து செயல்படுவதற்கான நல்ல தருணம் பிறந்துள்ளது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். அந்த உறவு குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அறிக்கையையும் வெளியிட்டனர். <ref>[http://en.radiovaticana.va/news/2016/02/12/joint_declaration_of_pope_francis_and_patriarch_kirill/1208117 திருத்தந்தை பிரான்சிசு – மறைமுதுவர் கிரில் பொது அறிக்கை]</ref>
 
2016 பெப்ருவரி 12, வெள்ளி – உரோமையிலிருந்து புறப்பட்டு விமானத்தில் மெக்சிகோ நகர் வந்திறங்கினார். விமானத்தளத்தில் திருத்தந்தையை மெக்சிகோ நாட்டு அதிபர் என்றிக்கே பேஞா நியேட்டோ, அவர்தம் துணைவியார் அன்யேலிகா ரிவியேரா, திருச்சபைத் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் இசை, நடன ஆட்டங்களோடு வரவேற்றனர். மெக்சிகோ நாட்டு இசையான மரியாச்சி இனிமையாக ஒலித்தது.
வரிசை 117:
பெப்ருவரி 13, சனி – மெக்சிகோ நாட்டு அதிபர் இல்லத்தில் வரவேற்பு; அரசியல் தூதர்களுக்கு உரையாற்றினார். அப்போது, “ மெக்சிகோ நாட்டில் ஒருசில வலிமைமிக்கோர் வளர்ந்துகொண்டே போகின்றனர், எண்ணிறந்த மக்கள் வறுமையில் வாடுகின்றனர். போதைப் பொருள் கடத்தல் மலிந்துபோய் இளையோர் வாழ்க்கை சீரழிகின்றது. வன்முறை கோலோச்சுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்க நாட்டுத் தலைவர்கள் அயராது உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதுபோலவே, மெக்சிகோ நாட்டின் ஆயர்களை மறைமாவட்ட பெருங்கோவிலில் சந்தித்து உரையாற்றிய போதும், திருத்தந்தை பிரான்சிசு ஆயர்களின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தி, சமூகத் தீங்குகளைக் கண்டிக்க அவர்கள் துணிச்சலோடு முன்வரவேண்டும் என்று கூறினார். பின்னர் மெக்சிகோவின் பாதுகாவலும், அமெரிக்க கண்டங்களின் பாதுகாவலுமான குவாதலுப்பே அன்னைப் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார். குவாதலுப்பே அன்னை மரியாவின் சிறப்புமிகு ஒவியத்தின் முன் சுமார் அரைமணிநேரம் தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரோடு ஆயர்கள், குருக்கள், பொதுமக்கள் அமைதிகாத்து இறைவேண்டல் செய்தனர்.<ref>[https://www.washingtonpost.com/world/pope-francis-begins-mexico-tour-that-will-likely-address-immigration-and-violence/2016/02/13/663f54ee-cc6d-11e5-b9ab-26591104bb19_story.html மெக்சிகோவில் திருத்தந்தை - முதல்நாள்]</ref>
 
பெப்ருவரி 14, ஞாயிறு – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நகரின் புறப்பகுதிகளுள் ஒன்றான எக்காட்டெப்பெக் (Ecatepec) பகுதிக்குச் சென்று வெளி மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் மூன்று இலட்சத்திற்கு மேலான மக்கள் கலந்துகொண்டு இறைவேண்டல் நிகழ்த்தினர். ஏழை மக்கள் நிறைந்த அந்த சேரிப்பகுதிக்குச் சென்று அவர்களுக்கு நம்பிக்கை மிக்கதொரு செய்தியை வழங்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு முடிவுசெய்தார். மேலும், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோரைத் தேடிச் செல்வது திருச்சபையின் பொறுப்பு என்ற அடிப்படையில் திருத்தந்தை பிரான்சிசு கருத்தாழம் மிக்கதொரு மறையுரை நிகழ்த்தினார். அப்போது, மெக்சிகோவின் சாபக் கேடாக விளங்குகின்ற போதைப் பொருள் வியாபாரம், கொலை கொள்ளை, ஆட்களைக் கடத்தல், ஊழல் சமுதாயம் போன்ற சீர்கேடுகளுக்கு வழியாகிறது என்றும், ஏழை மக்கள் இந்த அநீதிகளால் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் பிரான்சிசு கூறினார். நலமானதொரு சமுதாயத்தை உருவாக்கினால் மெக்சிகோ மக்கள் வேலை தேடி புலம்பெயர வேண்டிய தேவை எழாது என்றும், சமத்துவ சமுதாயம் உருவாக்க மெக்சிகோ அரசும் மக்களும் முனைந்து உழைக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி, இவ்வாறு உண்மையிலேயே கடவுள் விரும்புகின்ற நீதிமிக்க சமுதாயம் ஏற்பட வழியாகும் என்றும் கூறினார். <ref>[http://www.bbc.com/news/world-latin-america-35575820 சமுதாய சீர்திருத்தம் தேவை – திருத்தந்தை பிரான்சிசு உரை]</ref>
 
மாலையில் மெக்சிகோ நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவ மனைக்கு திருத்தந்தை பிரான்சிசு சென்று, அங்கு நோயுற்ற குழந்தைகளையும் அவர்களுடைய பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு ஆசி வழங்கினார். குழந்தைகள், திருத்தந்தை பிரான்சிசுக்கு தாங்கள் வரைந்த படங்கள் கடிதங்கள் போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்தனர். ஒரு சிறுமி “ஆவே மரியா” என்ற இலத்தீன் பாடலை சூபெர்ட் (Schubert) இசையமைப்பில் இனிமையாகப் பாடி, திருத்தந்தை பிரான்சிசுக்கு மரியாதை செலுத்தினார்.
 
பெப்ருவரி 15, வெள்ளி – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் உள்ள சாப்பாசு பிரதேசம் சென்றார். அங்கு மெக்சிகோவின் முதல்குடி மக்கள் பெருமளவில் உள்ளனர். அவர்கள் செல்ட்டால் (Tzeltal), சோட்சில் (Tzotzil) போன்ற பழங்கால மொழிகளைப் பேசுகின்றனர். பொருளாதார வளர்ச்சியோ கலாச்சார வளர்ச்சியோ மிகக் குறைவு. போதைப் பொருள் பரிமாற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், குண்டர்கள் நடமாட்டம் போன்ற பல சமூகத் தீமைகள் அப்பகுதியில் நிறைந்துள்ளதால் பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
 
திருத்தந்தை பிரான்சிசு இத்தகைய பகுதிக்குச் சென்று, முதல்குடி மக்களின் கலாச்சாரத்தை உயர்த்திப் பேசினார். அவர் சான் கிறிஸ்தோபார் தெலாஸ் காசாஸ் என்ற நகரில், நகரவை விளையாட்டரங்கில் திருப்பலி நிறைவேற்றினார். முதல்குடி மக்கள் பெருமளவில் பங்கேற்ற அத்திருப்பலியின்போது முதல்குடி மக்களின் இசை அவர்களது நடனங்கள் இடம்பெற்றன. மக்கள் தங்களது பாரம்பரிய முறை உடைகளை அணிந்துவந்திருந்தனர். சுமார் 25 ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக முதல்குடி மக்களின் மொழிகளாகிய செல்ட்டால், சோட்சில் ஆகிய இரு மொழிகளிலும் பெயர்க்கப்பட்ட விவிலிய நூல் படிகள் திருத்தந்தைக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டன.
 
முதல்குடி மக்களின் தலைவர்களோடு திருத்தந்தை உணவு அருந்தினார். பின்னர் மறைமாவட்டப் பெருங்கோவிலுக்குச் சென்று அங்கு முன்னாள் ஆயர் சாமுவேல் ரூயிசு என்பவரின் கல்லறையை சந்தித்து வேண்டல் நிகழ்த்தினார். ஆயர் ரூயிசு, முதல்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அயராது உழைத்தவர். 1994இல் முதல்குடி மக்களின் உரிமைகளைக் கோரி நடந்த “சப்பாட்டா போராட்டம்” (Zapatista Rebellion) தொடர்பாக அரசு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆயர் ரூயிசு சிறந்த பணியாற்றினார். ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாக்க திருச்சபையும் அரசும் முன்வர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் திருத்தந்தை பிரான்சிசு, ஆயர் ரூயிசின் கல்லறைக்குச் சென்று வேண்டியது, ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.<ref>[http://www.latimes.com/world/mexico-americas/la-na-pope-mexico-20160215-story.html மெக்சிகோவின் சாப்பாசு பகுதியில் திருத்தந்தை பிரான்சிசு]</ref>
பெப்ருவரி 15, வெள்ளி – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் உள்ள சாப்பாசு பிரதேசம் சென்றார். அங்கு மெக்சிகோவின் முதல்குடி மக்கள் பெருமளவில் உள்ளனர். அவர்கள் செல்ட்டால் (Tzeltal), சோட்சில் (Tzotzil) போன்ற பழங்கால மொழிகளைப் பேசுகின்றனர். பொருளாதார வளர்ச்சியோ கலாச்சார வளர்ச்சியோ மிகக் குறைவு. போதைப் பொருள் பரிமாற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், குண்டர்கள் நடமாட்டம் போன்ற பல சமூகத் தீமைகள் அப்பகுதியில் நிறைந்துள்ளதால் பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
 
திருத்தந்தை பிரான்சிசு இத்தகைய பகுதிக்குச் சென்று, முதல்குடி மக்களின் கலாச்சாரத்தை உயர்த்திப் பேசினார். அவர் சான் கிறிஸ்தோபார் தெலாஸ் காசாஸ் என்ற நகரில், நகரவை விளையாட்டரங்கில் திருப்பலி நிறைவேற்றினார். முதல்குடி மக்கள் பெருமளவில் பங்கேற்ற அத்திருப்பலியின்போது முதல்குடி மக்களின் இசை அவர்களது நடனங்கள் இடம்பெற்றன. மக்கள் தங்களது பாரம்பரிய முறை உடைகளை அணிந்துவந்திருந்தனர். சுமார் 25 ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக முதல்குடி மக்களின் மொழிகளாகிய செல்ட்டால், சோட்சில் ஆகிய இரு மொழிகளிலும் பெயர்க்கப்பட்ட விவிலிய நூல் படிகள் திருத்தந்தைக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டன.
 
முதல்குடி மக்களின் தலைவர்களோடு திருத்தந்தை உணவு அருந்தினார். பின்னர் மறைமாவட்டப் பெருங்கோவிலுக்குச் சென்று அங்கு முன்னாள் ஆயர் சாமுவேல் ரூயிசு என்பவரின் கல்லறையை சந்தித்து வேண்டல் நிகழ்த்தினார். ஆயர் ரூயிசு, முதல்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அயராது உழைத்தவர். 1994இல் முதல்குடி மக்களின் உரிமைகளைக் கோரி நடந்த “சப்பாட்டா போராட்டம்” (Zapatista Rebellion) தொடர்பாக அரசு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆயர் ரூயிசு சிறந்த பணியாற்றினார். ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாக்க திருச்சபையும் அரசும் முன்வர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் திருத்தந்தை பிரான்சிசு, ஆயர் ரூயிசின் கல்லறைக்குச் சென்று வேண்டியது, ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.<ref>[http://www.latimes.com/world/mexico-americas/la-na-pope-mexico-20160215-story.html மெக்சிகோவின் சாப்பாசு பகுதியில் திருத்தந்தை பிரான்சிசு]</ref>
 
பிற்பகலில் திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டுக் குடும்பங்களை சந்தித்து உரையாடி, உரையாற்றினார். ஊனமுற்றோரை சந்தித்து, பரிவோடு அரவணைத்தார்.<ref>[http://en.radiovaticana.va/news/2016/02/15/pope_francis_meets_with_mexican_families/1208919 திருத்தந்தை மெக்சிகோ குடும்பங்களோடு உரையாடல்]</ref>
 
பெப்ருவரி 16, செவ்வாய் – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டின் மிச்சோக்கான் பிரதேசத்திற்குச் சென்றார். இப்பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரம் அதிகம். போதைப்பொருள் கடத்தல் வழியாகவும் ஆயுத விற்பனை மூலமாகவும் பணம் சம்பாதிக்க முனைகின்ற குண்டர்கள் குழுக்களின் வன்முறையால் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர். போதைப்பொருள் வியாபாரத்தைக் கண்டித்த குருக்கள் கொலைசெய்யப்படுவது சாதாரண நிகழ்வு. மிச்சோக்கான் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களது முன்னேற்றத்தில் அரசு அக்கறை காட்டத் தயங்குவதோடு, காவல்துறையும் ஆட்சித்துறையும் குண்டர்களோடு கூட்டு சேர்ந்து ஊழலில் ஈடுபடுவதும் நிலவுகிறது. இப்பின்னணியில் திருத்தந்தை பிரான்சிசு இப்பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது. வன்முறைக்கும், ஊழலுக்கும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோரில் ஒருவர் மொரேலியா நகர் ஆயர் சுவாரசு இண்டா என்பவர். அவரைத் திருத்தந்தை பிரான்சிசு கர்தினால் 2015இல் நிலைக்கு உயர்த்தினார்
 
பெப்ருவரி 16, செவ்வாய் – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டின் மிச்சோக்கான் பிரதேசத்திற்குச் சென்றார். இப்பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரம் அதிகம். போதைப்பொருள் கடத்தல் வழியாகவும் ஆயுத விற்பனை மூலமாகவும் பணம் சம்பாதிக்க முனைகின்ற குண்டர்கள் குழுக்களின் வன்முறையால் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர். போதைப்பொருள் வியாபாரத்தைக் கண்டித்த குருக்கள் கொலைசெய்யப்படுவது சாதாரண நிகழ்வு. மிச்சோக்கான் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களது முன்னேற்றத்தில் அரசு அக்கறை காட்டத் தயங்குவதோடு, காவல்துறையும் ஆட்சித்துறையும் குண்டர்களோடு கூட்டு சேர்ந்து ஊழலில் ஈடுபடுவதும் நிலவுகிறது. இப்பின்னணியில் திருத்தந்தை பிரான்சிசு இப்பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது. வன்முறைக்கும், ஊழலுக்கும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோரில் ஒருவர் மொரேலியா நகர் ஆயர் சுவாரசு இண்டா என்பவர். அவரைத் திருத்தந்தை பிரான்சிசு கர்தினால் 2015இல் நிலைக்கு உயர்த்தினார்
 
மொரேலியா நகரில் திருத்தந்தை குருக்கள், துறவியர், அர்ப்பணிக்கப்பட்டோர், குருமாணவர்கள் ஆகியோருக்குத் திருப்பலி நிறைவேற்றி உரையாற்றினார். மறையுரையின் போது அவர் சமூக அநீதிகளை எதிர்த்து நின்று, மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க திருச்சபைத் தலைவர்கள் துணிச்சலோடு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், அநீதியான சூழ்நிலைகளை மாற்றுவது கடினம் என்று கருதி, செயலிழந்த நிலைக்கு அடிமைகளாகி விடல் ஆகாது என்று வலியுறுத்தினார்.<ref>[http://abc7.com/religion/pope-urges-mexican-priests-not-to-resign-to-status-quo/1202545/ சமூக அநீதிகளை எதிர்க்க அறைகூவல்]</ref>
பின்னர் மறைமாவட்டப் பெருங்கோவில் மக்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து மெக்சிகோவின் இளையோரை சந்தித்து உரையாற்றினார். இளையோர் சொகுசு வாழ்க்கை அமைவதற்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க எண்ணுதல் தவறு என்றும், போதைப்பொருள் வியாபரம், கள்ளக்கடத்தல் போன்ற வழிகளில் செல்லாமல் நேர்மையாக உழைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.<ref>[http://www.reuters.com/article/us-pope-mexico-idUSKCN0VP1TJ இளையோருக்கு அறிவுரை]</ref>
 
 
பெப்ருவரி 17, புதன் – குவாரெஸ் நகர் செல்கிறார். அங்கு ஒரு சிறைச்சாலைக்குச் சென்று சந்திப்பு நிகழ்த்துகிறார். தொழிலாளர்களோடு சந்திப்பு. திருப்பலி. உரோமைக்குத் திரும்புகிறார். ((திருத்தந்தையின் மெக்சிகோ பயணம் குறித்த மேலதிகத் தகவல்கள் கீழே)
வரி 146 ⟶ 142:
1915ஆம் ஆண்டு, ஒட்டமான் பேரரசும் அதன் பகுதியாக இருந்த துருக்கியும் பல்லாயிரக் கணக்கான அர்மீனிய மக்களைக் கொன்று குவித்தனர். இது இருபதாம் நூற்றாண்டின் “முதல் இனப் படுகொலை” என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் படுகொலையில் உயிரிழந்தோரின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவகத்திற்கு திருத்தந்தை பிரான்சிசு சென்று, இறைவேண்டல் நிகழ்த்தினார்.
படுகொலை நிகழ்ந்த காலத்தில் அர்மீனியாவிலிருந்து தப்பியோடியவர்களுக்கு அக்காலத் திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட் வத்திக்கானில் புகலிடம் அளித்துப் பாதுகாத்தார்.
 
அர்மீனியா நாடுதான் வரலாற்றில் முதன்முறையாக, கி.பி. 301ஆம் ஆண்டில் கிறித்தவ சமயத்தைத் தன் அதிகாரப்பூர்வமான சமயமாக ஏற்றது. இன்று அர்மீனிய மக்கள் பெரும்பான்மையினர் “அர்மீனிய மறைத்தூது திருச்சபை” உறுப்பினராக உள்ளனர். திருத்தந்தை பிரான்சிசு அர்மீனிய திருச்சபையின் தலைவரை சந்தித்து அவரோடு இணைந்து கிறித்தவ ஒன்றிப்பு வழிபாட்டினை நிகழ்த்தினார்.
 
கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிசு வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் உரை நிகழ்த்தினார். “அர்மீனிய நாட்டு மக்களும் துருக்கி நாட்டு மக்களும் தங்கள் வேறுபாடுகளை மறந்துவிட்டு நல்லிணக்க உணர்வுகளை வளர்க்க வேண்டும். இளையோரே, நீங்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து நலமானவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். நட்பும் உறவும் நிறைந்த வருங்காலத்தை உருவாக்க வேண்டும்.”
வரி 156 ⟶ 152:
| 19|| [[எகிப்து]]||ஏப்பிரல் 28-29|| 2017 ||திருத்தந்தை பிரான்சிசு எகிப்து நாட்டுக்கு வருகை தரவேண்டும் என்ற அழைப்பினை 2014இல் முதலில் அனுப்பியவர் எகிப்து நாட்டு அதிபர் ஆவார். அந்த அழைப்பினை ஏற்று, திருத்தந்தை பிரான்சிசு எகிப்து நாட்டுக்கு 2017, ஏப்பிரல் 28-29 நாள்களில் செல்லவிருப்பதாக அறிவித்தார்.
ஏப்பிரல் 28, 2017, வெள்ளி நிகழ்ச்சிகள்:
 
உரோமை நகரிலிருந்து எகிப்தின் கெய்ரோ நகருக்கு விமானத்தில் செல்கிறார்.
வரி 163 ⟶ 159:
கெய்ரோவின் பழம்பெரும் அல்-அசார் இசுலாமியப் பல்கலைக்கழகத்தில் இசுலாமியப் பேரறிஞர் இமாம் ஷேக் அகமத் அல்-தயப் என்பவரை சந்திக்கிறார்.
 
திருத்தந்தை பிரான்சிசு எகிப்தின் அரசியல் மற்றும் குடிமை சமூக அதிகாரிகளை சந்தித்து உரையாடுகிறார்.
 
திருத்தந்தை பிரான்சிசு, எகிப்தின் கோப்து மரபுவழித் திருச்சபையின் பெருந்தலைவரான திருத்தந்தை இரண்டாம் தவாத்ரோசு என்பவரை சந்தித்து உரையாடுகிறார்.
வரி 172 ⟶ 168:
==திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணம் (சனவரி 13-15, 2015) பற்றி சில தகவல்கள்==
2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார். உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையின் மக்களை நேரில் சந்தித்து உரையாட அவர் பல பயணங்களை மேற்கொண்டார். 2013-2014 ஆண்டுகளில் அவர் பன்னாட்டுப் பயணம் சென்ற நாடுகளுள் கீழ்வருவன அடங்கும்: பிரேசில், நடு ஆசியா (இசுரயேல், யோர்தான், பாலத்தீனம்), தென் கொரியா, அல்பேனியா, பிரான்சு, துருக்கி.
 
2015ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட முதல் பன்னாட்டுப் பயணம் இலங்கை, பிலிப்பீன்சு ஆகிய இரு ஆசிய நாடுகளுக்கு ஆகும். இந்த ஆசியப் பயணத்தில் இலங்கையும் உள்ளடங்கியிருப்பது சிறப்பு.
வரி 184 ⟶ 180:
 
===விமான நிலையத்தில் வரவேற்பு===
திருத்தந்தை பிரான்சிசுக்கு கொழும்பு பன்னாட்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் மகிந்த ராஜபக்சே ஆட்சி முடிவுற்று புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பதவியேற்ற சில நாள்களில் திருத்தந்தையின் வருகை நிகழ்ந்ததால் அவரை வரவேற்க புதிய அதிபர் சிறீசேனா விமான நிலையம் வந்திருந்தார். மேள தாளம் முழங்க, நடனக்காரர்கள் அசைய, வண்ணங்கள் நிறைந்த கம்பளிகளால் அலங்கரிக்கப்பட்ட 40 யானைகள் எழிலுற அணிவகுத்து நிற்க, திருத்தந்தை பிரான்சிசுகு வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர்கள் பாடல் குழு ஆங்கிலம், இத்தாலியம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வரவேற்புப் பாடல் எழுப்பியது. இராணுவ மரியாதை அளிக்கும் வகையில் 21 வேட்டுகள் வெடிக்கப்பட்டன.
 
===ஊர்வலம்===
வரி 217 ⟶ 213:
திருத்தந்தை பிரான்சிசு அருளாளர் [[யோசேப்பு வாஸ்|யோசேப்பு வாசு]]க்குப் புனிதர் பட்டம் அளித்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சிக்காக காலிமுகத் திடலில் கூடியிருந்தனர். திருத்தந்தை பிரான்சிசு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குத் திறந்த ஊர்தியில் வந்தார். வழியில் அவ்வப்போது குழந்தைகளை ஆசிர்வதித்தார். ஊர்தியிலிருந்து கீழே இறங்கி, சக்கர வண்டிகளில் இருந்த ஊனமுற்றோரைத் தொட்டு ஆசிர்வதித்தார். ஒரு வயதுமுதிர்ந்த பெண்மணி அவருடைய கையில் ஒரு சிறிய தாளைத் திணித்தார். அதைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை அதைத் தம் துணைவர் ஒருவரிடம் கொடுத்தார்.
 
திருத்தந்தை வருகைதந்த வேளையில் வரவேற்புப் பாடலும் நடனமும் தமிழிலும் சிங்களத்திலும் நிகழ்ந்தது. பின்னர் திருப்பலி தொடங்கியது. திருத்தந்தை ஆங்கிலத்திலும் இலத்தீனிலுமாக திருப்பலி செபங்களை மொழிந்தார். அவருடைய மறையுரை ஆங்கிலத்தில் வழங்கப்பட்டாலும், அதன் மொழிபெயர்ப்பு சிங்களத்திலும் தமிழிலும் வழங்கப்பட்டன.
 
திருப்பலியின் தொடக்கத்தில் ”தூய ஆவியே எழுந்தருளி வாரும்” என்ற பாடலும், தொடர்ந்து புனிதர் பிரார்த்தனையில் இலத்தீன் மொழியில் பாடப்பட்டன. பின் திருத்தந்தை பிரான்சிசு, யோசேப் வாஸ் அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தி, புனிதர் வரிசையில் சேர்ப்பதாக அறிவித்தார். உடனே கோவில் மணிகள் முழங்கின. “என்னையே முழுவதும் உன்னிடம் தருகின்றேன்” என்ற தமிழ்ப் பாடல் காணிக்கைப் பாடலாக, பல்லிசை அமைப்பில் இசைக்கப்பட்டது.
வரி 240 ⟶ 236:
 
===சமய சுதந்திரம் பற்றிய வரலாற்று ஏடு===
திருப்பலியின் இறுதியில், கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் எழுபதாயிரம் டாலரை, திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கென அவரிடம் கொடுத்தார். எங்கள் நாடு ஏழை நாடு, ஆயினும் திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கு உதவ விரும்புகிறோம் என்று சொல்லி, அந்த அன்பளிப்பை வழங்கினார்.
 
திருத்தந்தையும், 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கே, இலங்கைத் திருச்சபைக்கு வழங்கிய ஆவணத்தின் பிரதியை இலங்கைத் தலத்திருச்சபைக்குப் பரிசாகக் கொடுத்தார். பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் கிறிஸ்தவர்களாக விரும்புவர்களுக்கு அனுமதி அளிக்கும் அந்த ஆவணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.<ref>[http://blogs.wsj.com/indiarealtime/2015/01/14/popes-daring-gift-to-sri-lankan-bishops/ சமய சுதந்திர ஆவணம்]</ref>
===திருத்தந்தை பிரான்சிசு மடுமாதா கோவிலைச் சந்தித்தல்===
திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணத்தின் ஒரு முக்கிய கட்டம் அவர் மன்னார் மறைமாவட்டத்தில், காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புகழ்மிக்க மடுமாதா கோவிலுக்குச் சென்று, மக்களை சந்தித்து அன்னை மரியாவிடம் வேண்டுதல் நடத்திய நிகழ்ச்சி ஆகும்.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150114_pope_mannarvisit மடுமாதா கோவிலில் பிரான்சிசு]</ref>
 
2015, சனவரி 14ஆம் நாள் பிற்பகுதியில் திருத்தந்தை பிரான்சிசு மடு நகரில் தூய செபமாலை அன்னை ஆலயத்திற்குப் பவனியாக வந்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த அந்தப் பவனியின்போது அவர் திறந்த ஊர்தியில் வந்துகொண்டிருக்க, மேள தாளம் ஒலிக்க, நாதசுரம் தமிழ்ப் பாணியில் இசைக்கப்பட்டது. சக்கர வண்டியில் அமர்ந்திருந்தோரை சந்தித்தார். வழியில் மக்களோடு கலந்து நடந்தார். கோவில் படிகளை வந்தடைந்ததும் அவர் குத்துவிளக்கு ஏற்றினார். அமைதியின் அடையாளமாக ஒரு புறாவைப் பறக்கவிட்டார். மன்னார் மறைமாவட்ட ஆயர் யோசேப்பு இராயப்பு, திருத்தந்தையை வரவேற்று உரை ஆற்றினார். அதன் தமிழாக்கம்:
வரி 270 ⟶ 266:
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, நாம் ஒருவர், ஒருவருக்காக மன்றாடுவோம். இந்தத் திருத்தலமானது, செபத்தின் இல்லமாக, அமைதியின் இருப்பிடமாகத் திகழ வேண்டுவோம். மருதமடு அன்னையின் பரிந்துரையால், ஒப்புரவு, நீதி, சமாதானம் நிறைந்த எதிர்காலம் இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதாக. ஆமென்.”<ref>[http://ta.radiovaticana.va/news/2015/01/14/மடுத்திருத்தலத்தில்_திருத்தந்தையின்_உரை/1118237 மடுத்திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிசின் உரை]</ref>
 
பொது மன்றாட்டு தமிழில் இசையமைப்பிலும், சிங்களத்திலும் எடுத்துரைக்கப்பட்டன. இலங்கையில் நீதி, அமைதி, சம உரிமை நிலவிட மன்றாட்டுகள் எழுப்பப்பட்டன. திருத்தந்தை சிறப்பு ஆசி வழங்கியபோது மக்கள் செபமாலை, சிறு சுரூபங்கள் மற்றும் படங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தனர். “சர்வேசுரா சுவாமி, இரக்கமாக எங்களைப் பாரும். கன்னி மரியாயே, மருதமடுமாதாவே, எங்களுக்காக இயேசுவை மன்றாடும்” ஆகிய மன்றாட்டுகளை மக்கள் எல்லாரும் சேர்ந்து பாடினார்கள். மடுமாதா சுருபத்தைக் கைகளில் வாங்கிக்கொண்டு, அதைக்கொண்டு மக்களுக்குத் திருத்தந்தை ஆசி வழங்கினார். திருத்தந்தைக்கு மரத்தில் செதுக்கப்பட்ட மடு அன்னையின் சுரூபம் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அதைப் பெற்று முத்தம் அளித்த பிரான்சிசு, அதை இறுதிவரைத் தம் கைகளில் தாங்கிக்கொண்டிருந்தார். அப்போது “எங்கள் ஞானத் தந்தையர்க்கு இறைவனே ஆசி அளித்திடுவீர்” என்ற கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரான்சிசு மடுமாதா சுரூபத்திற்கு ஒரு செபமாலையை அணியாகச் சூட்டினார்.
 
==திருத்தந்தையின் பிலிப்பீன்சு பயணம் பற்றிய சில தகவல்கள்==
திருத்தந்தையின் பிலிப்பீன்சு பயணம் அவருடைய ஆசியப் பயணத்தின் இரண்டாம் கட்டம் ஆகும். இலங்கையில் பயணத்தை முடித்துக்கொண்டு நேரடியாக அவர் பிலிப்பீன்சு வந்தார். ஆசியாவில் கத்தோலிக்கர் மிகப் பெரும்பான்மையராக உள்ள நாடு இது. சுமார் 100 மில்லியன் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் சுமார் 80 மில்லியன் பேர் கத்தோலிக்கர்.
 
1521இல் இங்கு எசுப்பானியக் குடியேற்ற ஆதிக்கம் தொடங்கியது. அதோடு கத்தோலிக்கமும் பரவியது.
 
பிலிப்பீன்சு மக்களின் கத்தோலிக்க நம்பிக்கையை உறுதிப்படுத்துவதும், அந்நாட்டில் வாழ்கின்ற எண்ணிறந்த ஏழைமக்களுக்கு வளமான வாழ்வு அமைக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதும், 2013இல் கடும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதும் தமது பயணத்தின் நோக்கங்கள் என்று திருத்தந்தை கூறினார்.
 
பிலிப்பீன்ஸ், தென்கிழக்கு ஆசியாவில், மேற்கு பசிபிக் பெருங்கடலில் 7,107 தீவுகளைக் கொண்டுள்ள ஒரு நாடு. இந்நாடு, பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதாலும், நில நடுக்கோட்டுக்கு அண்மையில் உள்ளதாலும், நிலநடுக்கங்களும் கடும் புயல்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது. இந்த இயற்கையின் சீற்றத்தைத் திருத்தந்தையின் பயணத்தின்போது உணர முடிந்தது. பிலிப்பீன்சில் பயணம் செய்யும் திருத்தந்தை பிரான்சிசு சனிக்கிழமை, சனவரி 17ஆம் நாள் உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு மனிலாவிலிருந்து விமானத்தில் லெய்ட்டே (Leyte) தீவுக்குச் சென்றார். 650 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி 15 நிமிடங்கள் பயணம் செய்து அத்தீவின் முக்கிய நகரங்களில் ஒன்றான தக்லோபான் அடைந்தார். ஆனால் அந்நாட்டு வானிலை அறிக்கையின்படி இன்று இத்தீவில் கடும் புயல் அடிக்கும் என விமான ஓட்டுனர்கள் எச்சரித்தனர். அதிலும் மதியம் ஒரு மணிக்குமேல் புயலின் வேகம் அதிகரிக்கும், விமானப் பயணம் கடினம் என்று கூறியதால் இந்நகரில் திருப்பலியை நிறைவேற்றிய பின்னர் பிற்பகலில் மனிலா வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிசு.
 
திருத்தந்தை பிரான்சிசின் பயண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லவிருந்த ஆயிரக்கணக்கான மக்களாலும் அங்கு செல்ல இயலவில்லை. இச்சனிக்கிழமையன்று கன மழையுடன் மெக்கால (Mekkhala) புயல் வீசிய இதே லெய்ட்டே (Leyte) தீவும், தக்லோபான் நகரமும்தான் 2013ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஹையான் கடும் புயலால் கடுமையாய்த் தாக்கப்பட்டன. ஏழு மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி கடும் சேதத்தை விளைவித்தன. இப்பகுதியில் இதுவரை இடம்பெற்ற கடும் புயல் இது என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஹையான் கடும் புயலில் தக்லோபான் நகரின் ஏறக்குறைய 90 விழுக்காடு அழிந்தது. லெய்ட்டே தீவின் ஆறு மாநிலங்கள் மற்றும் 44 மாவட்டங்களில் ஒரு கோடியே 45 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டனர். ஏறக்குறைய பத்து இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.
வரி 287 ⟶ 283:
தக்லோபான் நகரில் நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், அம்மக்களுக்காகச் செபித்து ஆசீர் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
 
கன மழையையும் பொருட்படுத்தாது பல்லாயிரக் கணக்கில் இத்திருப்பலியில் மக்கள் கலந்துகொண்டனர். இத்திருப்பலிக்குப் பின்னர், அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாலோ பேராயர் இல்லத்தில் ஹையான் புயலில் கடுமையாய்ப் பாதிப்படைந்த 30 குடும்பங்களுடன் திருத்தந்தை மதிய உணவு அருந்துவதாகப் பயணத் திட்டத்தில் இருந்தது. கன மழை புயல் காரணமாக இந்நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது. இம்மக்களுக்கு பாலோவில் வத்திக்கானின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிசு மையத்தைத் திருத்தந்தை ஆசீர்வதிக்கவேண்டியிருந்தது. அந்நிகழ்வும் இரத்துச் செய்யப்பட்டது. மாலை 3.30 மணிக்கு பாலோ பேராலயத்தில் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குருத்துவ மாணவர்கள் மற்றும் ஹையான் புயலில் பாதிப்படைந்த குடும்பத்தினரைத் திருத்தந்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்நிகழ்வை இத்திருப்பலிக்குப் பின் சுருக்கமாக நடத்தினார் திருத்தந்தை. பாலோ பேராலயத்தில் அனைவரையும் ஆசீர்வதித்து, பாதுகாப்பாக மனிலா வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிசு.
 
===பிரான்சிசு ஆற்றிய மறையுரை===
"எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உரோமையில் இந்த ஹையான் புயலின் கடும் சேதங்களைப் பார்த்தபோது நான் இங்கு இருப்பதற்கு விரும்பினேன். அந்த நாள்களிலே இங்கு நான் வர விரும்பினேன். சிறிது தாமதமாக வந்தாலும் நான் இப்போது உங்களோடு இருக்கிறேன். இயேசுவே ஆண்டவர் என்பதைச் சொல்வதற்காக இங்கு வந்துள்ளேன். அவர் ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார், நம்மை விழத்தாட்டமாட்டார். ஆனால் தந்தையே, எனது வீடு, வாழ்வாதாரங்கள் என பல பொருள்களை நான் இழந்துவிட்டேன், அதனால் மனம் சோர்ந்துள்ளேன் என்று நீங்கள் சொல்லலாம். இப்படி நீங்கள் சொன்னால் அது உண்மையே, உங்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆயினும் சிலுவையில் அறையுண்ட இயேசு இங்கிருக்கிறார். இதிலிருந்து அவர் நம்மை சோர்வுறவிடமாட்டார். நாம் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களையும் அவர் அனுபவித்துள்ளார். இயேசுவே ஆண்டவர். நம் வாழ்வின் இன்னல் நிறைந்த நேரங்களில் நம்மோடு கண்ணீர் சிந்தி நம்மோடு நடக்கும் ஆண்டவரை நாம் கொண்டிருக்கிறோம்."
 
"உங்களில் பலர் எல்லாவற்றையும் இழந்துள்ளீர்கள். என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆயினும் உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமென்பதை இயேசு அறிந்திருக்கிறார். உங்களில் பலர் உங்கள் குடும்பங்களில் ஒரு பகுதியினரை இழந்துள்ளீர்கள். அமைதியாக இருந்து எனது அமைதியான இதயத்துடன் உங்களோடு இருப்பதை மட்டுமே என்னால் செய்ய முடியும். ஆண்டவரே, இத்துன்பம் ஏன் என உங்களில் பலர் கேட்கலாம். உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திடமும், கிறிஸ்து சிலுவையிலிருந்து தம் இதயத்தோடு பதில் சொல்கிறார். இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. கிறிஸ்துவை நோக்குவோம். அவர் ஆண்டவர்."
 
"அவரது சிலுவையருகில் அவரின் தாய் நிற்கிறார். நாம் அதிகத் துன்பங்களை அனுபவிக்கும் நேரங்களில் சிறு குழந்தைகள்போல் நாம் இருக்கிறோம். அச்சமயங்களில் நாம் எதையும் புரிந்துகொள்வதில்லை. “மம்மி” என்று தாயின் கரங்களை மட்டுமே நாம் பிடித்துக்கொண்டிருக்க முடியும். குழந்தை பயப்படும்போது மம்மி என்று சொல்கிறது. நம் துன்ப நேரங்களில் “மம்மி” என்ற வார்த்தையை மட்டுமே நம்மால் சொல்ல முடியும். சிலுவையடியில் மௌனமாக நின்ற தாயை உற்று நோக்குவோம். சிறு குழந்தை போல, அத்தாயிடம், அம்மா எனச் சொல்வோம். நமக்கு ஒரு தாய் இருக்கிறார். மாபெரும் சகோதரர் இயேசு இருக்கிறார். நாம் தனியாக இல்லை. பேரிடர் துன்ப நேரங்களில் பல சகோதரர்கள் உதவி செய்வதற்கு வந்தார்கள். ஏனெனில் நாம் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாக உணருகிறோம்."
 
"இதுவே எனது இதயத்தில் தோன்றியவை. வேறு எதுவும் சொல்லாமல் விட்டிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இயேசு ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார் என்பதை தயவுகூர்ந்து அறிந்திருங்கள். அன்னைமரியாவின் கனிவு உங்களைச் சோர்வுறவிடாது என்பதையும் அறிந்திருங்கள். அன்னைமரியாவையும், இயேசுவையும் பற்றிக்கொண்டு சகோதர சகோதரிகளாக ஆண்டவரில் ஒன்றிணைந்து நடப்போம்."
வரி 300 ⟶ 296:
==கியூபா, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான பயணம் - செப்டம்பர் 19-28, 2015==
===கியூபாவில் சமய சுதந்திரம் வளர வேண்டும் என்னும் கோரிக்கை===
திருத்தந்தை பிரான்சிசு, கியூபா நாட்டைச் சென்று சேர்ந்த உடனேயே, அலுவல்முறையில் இறைநம்பிக்கை இல்லா நாடு என்று தன்னை அறிமுகப்படுத்துகின்ற கியூபா நாட்டில் சமய சுதந்திரத்திற்குப் போதிய இடம், விரிவு, வகைமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பிரான்சிசு கேட்டுக் கொண்டார். கியூபா நாட்டு அதிபர் ராவுல் காஸ்ட்ரோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கியூபாவில் அமைத்துள்ள குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் தளத்தை உடனே மூட வேண்டும் என்று கேட்டார். மேலும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பு இன்றைய புவியுலகை மாசுறச் செய்கிறது என்றும் அந்நிலை மாற வேண்டும் என்றும் கூறினார். இருப்பினும், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் கியூபா நாட்டிற்கும் இடையே நல்லுறவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்த நல்லுறவை ஏற்படுத்துவதில் திருத்தந்தை பிரான்சிசு முக்கிய பங்காற்றுகிறார் என்பதும் தெரிகிறது. பிரான்சிசு தம் உரையில், “கியூபா நாட்டிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது உலகம் முழுவதற்கும் நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படுவதற்கு ஒரு சீரிய முன்னுதாரணமாக அமையட்டும்” என்று குறிப்பிட்டார். <ref>[http://www.bbc.com/news/world-latin-america-34303109 திருத்தந்தை பிரான்சிசின் கியூபா பயணம் பற்றி பிபிசி செய்தி]</ref>
 
===பிரான்சிசு கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார்===
திருத்தந்தை பிரான்சிசின் கியூபா பயணத்தின் ஒரு உச்சக்கட்டம் அவர் பிடெல் காஸ்ட்ரோவை சந்தித்தது ஆகும்.<ref>[http://www.nbcnews.com/storyline/pope-francis-visits-america/pope-francis-meets-fidel-castro-second-day-cuba-visit-n430641 திருத்தந்தை பிரான்சிசு - பிடெல் காஸ்ட்ரோ சந்திப்பு]</ref> இரு தலைவர்களும் உலக நடப்புப் பற்றியும், சுற்றுச் சூழல் சீரழிவு பற்றியும் பொதுவாக உரையாடியதாகத் தெரிகிறது. இரு தலைவர்களும் சில நூல்களைப் பரிசாகப் பரிமாறிக்கொண்டார்கள். பிரான்சிசு தாம் எழுதிய இரு சுற்றுமடல்களை (”மகிழ்ச்சிதரும் நற்செய்தி”, “சுற்றுச் சூழல் பாதுகாப்பு”) பரிசாகக் கொடுத்தார். மேலும் ஆன்மிக வாழ்வு பற்றிய ஒரு நூலையும் கொடுத்தார். பிடெல் காஸ்ட்ரோவுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பின் கியூபா பொதுவுடைமைக் கொள்கையைத் தழுவியபோது நாடுகடத்தப்பட்ட அமாந்தோ யொரேந்தே (Amando Llorente) என்ற இயேசு சபைக் குரு எழுதிய நூலையும் திருத்தந்தை பிரான்சிசு, பிடெல் காஸ்ட்ரோவுக்குப் பரிசாகக் கொடுத்தார்.<ref>[http://www.catholicnewsagency.com/news/pope-francis-gifts-fidel-castro-with-copy-of-laudato-si-13006/ திருத்தந்தை பிரான்சிசும் பிடெல் காஸ்ட்ரோவும் பரிசுகள் பரிமாறல்]</ref>
 
பிடெல் காஸ்ட்ரோ தாம் எழுதிய “பிடெலும் சமயமும்” (“Fidel and Religion”) என்ற நூலை பிரான்சிசுக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்நூல், பிடெல் காஸ்ட்ரோ, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டை சந்தித்ததின் சுருக்கம் ஆகும். அந்நூலின் முகப்புப் பக்கத்தில் “திருத்தந்தை பிரான்சிசுக்கு, கியூபா நாட்டிற்கு ஒரு சகோதரரைப் போன்று அவர் வருகை தந்ததை முன்னிட்டு, கியூபா மக்களின் பாசமிகு வாழ்த்துகளோடு, பிடெல் வழங்கும் அன்புப் பரிசு” (“For Pope Francis, on the occasion of your fraternal visit to Cuba, with the admiration and respect of the Cuban people. Fidel.”)
 
அவானா நகரின் புரட்சி வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிறைவேற்றினார். 200,000 மக்கள் குழுமியிருந்த வளாகத்தில் மறையுரை ஆற்றியபோது, ஏழை எளியோருக்கும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோருக்கும் ஆதரவு அளிப்பது தான் உண்மையான சமய நம்பிக்கை என்று பிரான்சிசு கூறினார். இளையோருக்கு உரையாற்றுகையில், “அன்புமிக்க இளையோரே, நீங்கள் ஒளிமயமானதோர் உலகம் உருவாகும் என்று கனவு காண வேண்டும்” என்று கூறினார். மேலும், “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுநன்மையை முன்னிறுத்தி அனைவரும் ஒத்துழைக்க முடியும், ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ”பண ஆசைக்கு அடிமைகள் ஆகிவிடாமலும், எளியோரை உதறித் தள்ளாமலும் நாம் செயல்பட வேண்டும்” என்றும் அவர் எடுத்துரைத்தார். <ref>[http://www.cnn.com/2015/09/20/world/pope-cuba-conflicts/ திருத்தந்தை இளையோருக்கு உரையாற்றுகிறார்]</ref>
 
===திருத்தந்தை பிரான்சிசின் ஐக்கிய அமெரிக்க நாடுகள் பயணம்===
வரி 313 ⟶ 309:
 
====அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகையில் வரவேற்கிறார்====
செப்டம்பர் 23, புதன் காலை 9 மணியளவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகைத் தோட்ட வளாகத்தில் வரவேற்றார். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஆதரவு அளிப்பதிலும், சுற்றுச் சூழல் மாசுறுவதைத் தடுத்து புவியுலகத்தை உலக மக்கள் அனைவரும் வாழ உகந்த இல்லமாக மாற்றுவதிலும், சமயச் சுதந்திரத்தை ஆதரிப்பதிலும் திருத்தந்தை தலைசிறந்த விதத்தில் உழைத்து வருகிறார் என்று தம் வரவேற்புரையில் கூறிய அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை அமெரிக்க மக்கள் பெயரால் வரவேற்றார். தமது ஏற்புரையின் போது, திருத்தந்தை இரு முக்கிய கருத்துக்களை வலியுறுத்தினார். அமெரிக்க நாடு வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறிய மக்களின் ஒத்துழைப்பால் உருவானது என்றும், இந்நாட்டில் குடியேற விரும்பும் மக்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதுபோலவே, சுற்றுச் சூழல் மற்றும் புவியுலகு பாதுகாப்பில் அமெரிக்கா எடுக்கின்ற முயற்சிகளைப் பாராட்டிய பிரான்சிசு, அம்முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் கூறினார். <ref>[http://www.nytimes.com/2015/09/24/us/politics/pope-francis-obama-white-house.html?_r=0 அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகையில் வரவேற்றல்]</ref>
 
====புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருவோரை வரவேற்றல் வேண்டும்====
வரி 319 ⟶ 315:
 
====ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிசு உரையாற்றுகின்றார்====
அரசியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற இந்த உரையின்போது திருத்தந்தை அமெரிக்கா என்பது ஒரு பெருநிலம். அதில் வடக்கு நோக்கிச் சென்று வேலை வாய்ப்புத் தேடுவோரை, புலம்பெயர்ந்து வருவோரை கைவிரித்து ஏற்கவேண்டும் என்றார் திருத்தந்தை.
 
அமெரிக்க வரலாற்றில் சிறப்பு மிக்க மனிதர்களாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லுத்தர் கிங், டோரதி டே, தாமஸ் மெர்ட்டன் ஆகிய நால்வரைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிசு, அந்த வரலாற்று உணர்வோடு ஐக்கிய அமெரிக்க நாட்டு மக்கள் செயல்படுவது உலக அமைதிக்கும், புவியுலகப் பாதுகாப்புக்கும் தேவை என்றார். ஆபிரகாம் லிங்கன் அடிமைமுறையை ஒழிக்க பாடுபட்டார். மார்ட்டின் லுத்தர் கிங் கருப்பு இன மக்களின் சம உரிமைக்காக உழைத்தார். டோரதி டே என்பவர் சமூக நீதிக்காகவும் உழைப்பாளர் வளர்ச்சிக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார். தாமஸ் மெர்ட்டன் என்பவர் வன்முறை களைந்து, பல்சமய உரையாடல் வழி மக்களிடையே நல்லிணக்கம் வளர வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய பெருமனிதர்களின் வழிவருகின்ற ஐக்கிய அமெரிக்க நாட்டு மக்கள் தங்கள் வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு வலியுறுத்தினார்.<ref>[http://wgntv.com/2015/09/24/read-the-full-transcript-of-pope-francis-address-to-congress/ ஐக்கிய அமெரிக்க நாட்டு நாடாளுமன்றத்தில் பிரான்சிசு உரை]</ref>
வரி 329 ⟶ 325:
ஐக்கிய நாடுகள் அவை 70ஆம் ஆண்டினைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில் திருத்தந்தை ஐ.நா. பொதுப்பேரவையில் உரையாற்றினார். செப்டம்பர் 25, வெள்ளி காலை 9 மணியளவில் வழங்கப்பட்ட உரைக்கு முன், பொதுச்செயலர் [[பான் கி மூன்]] திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தை ஐ.நா. அவை அலுவலர்களுக்கு உரையாற்றி, அவர்களது பொறுப்பை வலியுறுத்தினார். ஐ.நா. தரப்பில் உலகின் பல பகுதிகளில் அமைதிக் குழு, மக்கள் நல முன்னேற்றக் குழு போன்ற பணிகளை ஆற்றியபோது வன்முறைக்கு உள்ளாகி உயிரிழந்த ஐ.நா. உழைப்பாளர்களின் நினைவகத்தின் முன் சிறிது நேரம் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார்.
 
193 உலக நாடுகளை முழுநிலை உறுப்பினர்களாகவும், வத்திக்கான் (திருப்பீடம்) போன்ற சில பார்வைநிலை உறுப்பினர்களையும் கொண்ட மாபெரும் உலக நிறுவனமாகிய ஐ.நா. அவையின் பொதுப்பேரவை அமர்வுக்குத் தொடக்கவுரை ஆற்றும் பணி்யை ஒரு திருத்தந்தை ஆற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 
=====திருத்தந்தை பிரான்சிசு ஐ.நா. அவையில் ஆற்றிய உரையின் சில பகுதிகள்:=====
 
1. சுற்றுச் சூழல் பேணுதல் பற்றி:
 
”சுற்றுச் சூழலுக்கு நாம் ஊறு இழைக்கும் போதெல்லாம், மனித குலத்திற்கே ஊறு விளைவிக்கின்றோம்.”
வரி 359 ⟶ 355:
7. ஐ.நா. அமைப்பின் “சீரான வளர்ச்சிக்கு 2030 திட்டத்தொகுப்பு” (2030 Agenda for Sustainable Development) பற்றி:
 
”சீரான வளர்ச்சிக்கு ஐ.நா. அமைப்பு வகுத்துள்ள திட்டத்தொகுப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும். மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருள்சார்ந்த மற்றும் அருள்சார்ந்த நலன்கள் எல்லா மக்களுக்கும் தங்குதடையின்றி, நடைமுறையில் கிடைப்பதே அந்த வெற்றிக்கு அடையாளம். இத்தகைய நலன்களுள் கீழ்வருவன அடங்கும்: வீட்டு வசதி, போதிய ஊதியம் தருகின்ற வேலை வாய்ப்பு, போதிய உணவு, குடிநீர், சமயச் சுதந்திரம், மற்றும் பொதுவாக கல்வி போன்றவை.”
 
8. மனித மாண்பு பற்றி:
வரி 375 ⟶ 371:
*மக்களது செல்வத்தைச் சூறையாடி சொகுசாக வாழ்கின்ற அரசியல் தலைவர்களையும் திருத்தந்தை கடிந்துகொண்டார். கென்யா நாட்டில் அவர் சென்று சேர்ந்ததும், அவரை அரசு இல்லத்திற்குக் கொண்டுவர அரசு தரப்பில் சொகுசு வண்டிகளுக்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனால் திருத்தந்தையோ மிக சாதாரணமான ஒரு சிறு உந்து தமக்குப் போதும் என்று கூறிவிட்டார். இது நாட்டு மக்களிடையே ஒரு விவாதத்தையே கிளப்பிவிட்டிருக்கிறது. மக்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்க, அரசியல் தலைவர்கள் சொகுசு வாழ்க்கை நடத்துவது முறையல்ல என்றும், நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது நிற்கவேண்டும் என்றும் மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
*திருத்தந்தை பிரான்சிசு மக்களுக்குப் பொன்னும் வெள்ளியும் கொண்டு செல்லவில்லை. ஆனால் அவர் மக்களுடைய இதயத்தைத் தொட்டுப் பேசினார் என்றும், மக்கள் தம் நிலையை மாற்றமுடியும் என்ற உறுதிப்பாட்டை அளித்தார் என்றும் நாளேடுகள் கருத்துத் தெரிவிக்கின்றன.<ref>[http://www.dw.com/en/opinion-no-miracles-just-signs-as-pope-francis-ends-africa-visit/a-18884231 திருத்தந்தை பிரான்சிசின் ஆப்பிரிக்கப் பயணத்தின் தாக்கம்]</ref>
*ஆப்பிரிக்க நாடுகளிலும் பிற நாடுகளிலும் மக்கள் சமய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்று திருத்தந்தை உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, அவர் சந்திக்கச் சென்ற மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு என்னும் நாட்டில் கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் கடுமையாக மோதிக்கொண்டு வந்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிசு அந்த போர்ப்பகுதிகளுக்குச் சென்று அகதிகள் முகாம்களைச் சந்தித்து அங்கிருந்தோரிடம் உரையாடினார். அவர்களுடைய இழிநிலையை நேரடியாகக் கண்டுணர்ந்தார். “கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் போர்ச்செயல்களிலும் வன்முறையிலும், பழிவாங்கள் செயல்களிலும் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்னும் உணர்வோடு செயல்பட வேண்டும்” என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார். <ref>[http://www.bbc.com/news/world-africa-34960971 ”கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் சகோதரர்கள்” - திருத்தந்தை பிரான்சிசு - பிபிசி செய்தி]</ref>
 
==வெளி இணைப்புகள்==
வரி 381 ⟶ 377:
 
==குறிப்புகள்==
 
[[பகுப்பு:திருத்தந்தை பிரான்சிசு]]