ஐரோம் சர்மிளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox person
| name = ஐரோம் சானு சர்மிளா
வரி 15 ⟶ 14:
 
==உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு==
நவம்பர் 2, 2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பத்து குடிமக்கள் சுடப்பட்டு இறந்தனர். <ref name="NYT">{{cite web |url=http://www.nytimes.com/2011/02/09/world/asia/09iht-letter09.html |title=Torchbearers for Victims in a Violent Land |author=Nilanjana S. Roy |date=8 February 2011 |work= |publisher=''New York Times'' |accessdate=8 May 2011}}</ref><ref name="IE">{{cite web |url=http://www.indianexpress.com/oldStory/52530/ |title=Why Malom is a big reason for Manipur anger against Army Act |author=Rahul Pathak |date=6 August 2004 |work= |publisher=IndianExpress.com |accessdate=8 May 2011}}</ref> இந்த நிகழ்வு பின்னாளில் "மலோம் படுகொலை" என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படுகின்றது.<ref>[http://www.twocircles.net/2010nov03/afspa_and_unsolved_massacres_manipur.html Malom Massacre]</ref> 1988ஆம் ஆண்டின் [[தேசிய வீரதீர விருது|தேசிய சிறார் வீரதீர விருது]] பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணி லெய்சங்பம் இபெடோமி உட்பட கொலையுண்டவர்களின் படங்களை உள்ளூர் நாளேடுகள் விவரமாக பதிப்பித்திருந்தன.<ref name="IE"/>
 
நான்காம் நிலை கால்நடை ஊழியரொருவரின் மகளான 28 வயது சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு மற்றும் நீர் உண்ணாப் போராட்டத்தை மேற்கொண்டார்.<ref name="Tehelka"/> அவரது உடன்பிறப்பு இறோம் சிங்கஜித் சிங்கின் கூற்றுப்படி "சிறுவயது முதலே வியாழக்கிழமைகளில் உண்ணாதிருக்கும் விரதத்தை கடைபிடிக்கும் சர்மிளா கொலை நிகழ்ந்த நாள் வியாழக்கிழமையாக அமைந்திருந்த காரணத்தால் தனது உண்ணாநிலையை அப்படியே தொடர்ந்தார்". அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கிய நாள் நவம்பர் 4 என்றும் அதற்கு முந்தைய நாள் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கி அனுமதி பெற்றதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.<ref name="BBC">{{cite web |url=http://news.bbc.co.uk/2/hi/7932116.stm |title=Manipur fasting woman re-arrested |author= |date=9 March 2009 |work= |publisher=BBC News |accessdate=8 May 2011}}</ref> போராளி என ஐயுறும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாகும். <ref name="NYT" /> சித்திரவதை, வலிய காணாமல் போவது, நீதித்துறைசாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்த சட்டமே காரணமாக மனித உரிமை தன்னார்வலர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.<ref name="NYT" /><ref name="Tehelka">{{cite web |url=http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne051209irom_and.asp |title=Irom And The Iron In India’s Soul |author=Shoma Chaudhury |date=5 December 2009 |work= |publisher=''Tehelka'' |accessdate=8 May 2011}}</ref>
 
உண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய மூன்றாம் நாளே சர்மிளா ''தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக'' காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார். <ref name="BBC"/> அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், காவல்துறையினர் அவருக்கு வலுக்கட்டாயமாக, [[நாசி இரையக குழாய் செலுத்தல்|மூக்கு குழாய் வழியே உணவு]] வழங்கத் துவங்கினர்.<ref name="Independent">{{cite web |url=http://www.independent.co.uk/news/world/asia/a-decade-of-starvation-for-irom-sharmila-2124608.html |title=A decade of starvation for Irom Sharmila |author=Andrew Buncombe |date=4 November 2010 |work= |publisher=''The Independent'' |accessdate=8 May 2011}}</ref> இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து இறோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.<ref name="BBC"/><ref>[http://www.indiankanoon.org/doc/1501595/ Section 309 in The Indian Penal Code, 1860]</ref>
 
==தேர்தல்==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோம்_சர்மிளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது