இராஜாதிராஜ சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 14:
| year of death= கி.பி. 1054}}
 
'''இராஜாதிராஜ சோழன்''' முதலாம் [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] பேரனும், [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திர சோழனின்]] மகனும் ஆவான். [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திர சோழனின்]] காலத்திலேயே மன்னனுடைய மூத்த மகனாக இல்லாவிடினும்<ref>சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பாகம் ஒன்று. பக்கம் 268.</ref> இவனுடைய திறமையைப் பாராட்டி இவனுக்கு இளவரசுப் பட்டம் வழங்கப் பட்டது. மேலும் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே தனக்கென்று மெய்க்கீர்த்திகளையும் பட்டங்களையும் பெறும் தனிச் சிறப்பும் இராஜாதிராஜ சோழனுக்கு அளிக்கப்பட்டது. இராஜாதிராஜன் தன் [[இராஜேந்திர சோழன்|தந்தை]]யுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பதவிக்காலத்தில் சோழப் பேரரசின் தெற்கில் ஈழத்திலும், சேர பாண்டிய நாடுகளிலும், கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராஜாதிராஜன் [[சேரர்|சேர]], [[பாண்டியர்|பாண்டிய]] நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டான். எனினும், வடக்கில் [[மேலைச் சாளுக்கியர்]]கள் இடைவிடாது தொல்லை கொடுத்தனர். இதனால், இராஜாதிராஜனுக்குப் பல தடவைகள் சாளுக்கியருடன் போரிட வேண்டியேற்பட்டது. இவ்வாறான ஒரு போரின்போது, துங்கபத்திரை ஆற்றை அண்டிய கொப்பத்தில் மேலைச்சாளுக்கிய மன்னன் [[முதலாம் சோமேசுவரன்|முதலாம் சோமேசுவரனுடன்]] நடைபெற்ற போரில் இறந்தான்.
 
==முதலாம் இராஜேந்திரனின் மக்கள்==
வரிசை 32:
===இராசமகேந்திரன்===
 
[[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]] அரியணையேரும் முன் இராஜகேசரி இராஜமகேந்திரன் அரியனையேறினான். இவனுடைய மூன்றாம் ஆண்டு வரையிலான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இம்மன்னன் மனுநீதிப்படி ஆட்சி செய்ததாக இவனுடைய மெய்க்கீர்த்தி கூறுகிறது, இதையே கலிங்கத்துப் பரணியும் உறுதிப்படுத்துகிறது. கொப்பம் போரில் முடிசூடின மன்னனுக்கும்([[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரன்]]) கூடல் சங்கமத்தில் வெற்றி பெற்ற மன்னனுக்குமிடையில்([[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]]) 'முடி சூடியவன்' என்று [[கலிங்கத்துப் பரணி]] இம்மன்னனைப் பற்றி கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் இராஜமகேந்திரனின் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளதூ.
 
'போர் யானையின் மூலம் ஆகவமல்லன் ஆற்றங்கரையிலிருந்து புறமுதுகிட்டு ஓடச் செய்தான்' என்று இக்கல்வெட்டுக் கூறுகிறது.
 
இவன் [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திர சோழன்]] புதல்வனாதல் கூடும், [[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரனின்]] 9ம் ஆண்டு கல்வெட்டில் கூறப்படும் இராஜேந்திரன் என்பது இவனது இயற்பெயராகும். இதன் பின்னர் இவன் இளவரசப் பட்டம் பெற்ற பொழுது இராஜமகேந்திரன் என்ற பெயரைப் பெற்றிருக்கக்கூடும். தன் தந்தை [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திர சோழன்]], தன் பாட்டனார் [[இராஜேந்திர சோழன்]] ஆகியோரிடமிருந்து தன்னைத் தனித்துக் காட்டும் வகையில் இவன் இப்பெயரை ஏற்றிருக்க வேண்டும். இராஜமகேந்திரன், [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திரன்]] இருவருமே வீரராஜகேசரிப் பட்டம் பெற்றவராயிருந்தும் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்தனர். இளவரசுப் பட்டம் பெற்ற போதே ஒருவன் இறந்ததால் இந்நிலை ஏற்பட்டது.
வரிசை 68:
== மேற்கோள்கள் ==
<references/>
{{வார்ப்புரு:சோழர்}}
 
[[பகுப்பு:சோழ அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராஜாதிராஜ_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது