ஸ்ரீரங்க தேவ ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
 
'''ஸ்ரீரங்க தேவ ராயன்''' (கி.பி. 1572-1586) அல்லது '''முதலாம் ஸ்ரீரங்கா''' என அழைக்கப்பட்டவன், [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசை]] ஆண்ட அரசர்களில் ஒருவன்.<ref>[https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.41]</ref> [[அரவிடு மரபு|அரவிடு மரபைச்]] சேர்ந்த இவன், அம் மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் சிதைந்து போயிருந்த பேரரசைச் சீர்செய்ய முயன்றான் எனினும், இவனது ஆட்சிக் காலத்தில் [[முஸ்லிம்]] படையெடுப்புக்கள் அடிக்கடி நிகழ்ந்ததுடன் நாட்டின் சில நிலப்பகுதிகளை அவர்களிடம் இழக்கவும்வேண்டி ஏற்பட்டது.
 
1576 ஆம் ஆண்டில், சுல்தான் [[அலி ஆதில் ஷா]] பெனுகொண்டாவில் இருந்த ஸ்ரீரங்காவின் கோட்டையை மூன்று மாதங்களாக முற்றுகை இட்டிருந்தான். இறுதியில் ஆதில் ஷாவின் இந்துத் தளபதிகளின் உதவியினால். ஸ்ரீரங்காவின் படைகள் சுல்தானின் படைகளை முறியடித்தன.
 
1579 ஆம் ஆண்டில், சுல்தானின் தளபதியும், மராட்டாப் பிராமணனும் ஆகிய [[முராரி ராவ்]] என்பவன் பெரிய முஸ்லிம் படையுடன் வந்து [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்றுக்குத்]] தெற்கிலுள்ள பகுதிகளைத் தாக்கி அழித்தான். 1579 இன் இறுதிப் பகுதியில், அவன், அஹோபிலாம் கோயிலைத் தாக்கினான். அதனை அழித்தபின், அங்கிருந்த மணிகள் பதித்த [[திருமால்|திருமாலின்]] தங்கச் சிலையைப் பெயர்த்து சுல்தானுக்குப் பரிசாக அனுப்பினான். ஸ்ரீரங்கா முராரி ராவையும், அவனுடைய [[கோல்கொண்டா]] படைகளையும் தாக்கித் தோற்கடித்தான். அவன் அப்படைகளை வடக்கே துரத்திவிட்டு, அவர்களிடம் இழந்த பகுதிகளையும் மீட்டான். இச் சண்டையில் முராரி ராவ் பிடிபட்டான் ஆயினும் அவன் [[பிராமணன்]] ஆனதால் அவன் கொல்லப்படாமல் தப்பினான்.
 
புதிய சுல்தான் [[இப்ராஹிம் குதுப் ஷா]] [[கொண்டவிடு]]வைத் தாக்கி, [[உதயகிரி]]க் கோட்டையைக் கைப்பற்றினான். பின்னர் பெருந்தாக்குதல் ஒன்றை நடத்திப் பல உள்ளூர் மக்களைக் கொன்றான். எனினும் ஸ்ரீரங்கா சளைக்காமல் போராடி சுல்தானை உதயகிரியிலிருந்து துரத்தினான். சுல்தான் வினுகொண்டாவைத் தாக்கி அக் கோட்டையைக் கைப்பற்றினான். ஸ்ரீரங்கா, [[சென்னப்பா]]வுடன் வினுகொண்டாவுக்குச் சென்று கடும் சண்டையின் பின்னர் சுல்தானைத் தோற்கடித்தான். எனினும் சென்னப்பா போரில் இறந்தான்.
 
வெளியிலிருந்து வந்த பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, இவனது சகோதரர்களும் இவனுடன் ஒத்துழைக்காது பிரச்சினை கொடுத்தனர். [[மதுரை நாயக்கர்|மதுரை]] மற்றும் செஞ்சி நாயக்கர்களும் [[திறை]] கொடுக்காது தட்டிக் கழித்தனர். ஸ்ரீரங்கா குறைவான வளங்களுடன் தொடர்ந்தும் எதிரிகளைச் சமாளித்து வந்தான்.
 
ஸ்ரீரங்கா 1586 ஆம் ஆண்டில் [[வாரிசு]] இல்லாமல் காலமானான். இவனைத் தொடர்ந்து இவனது தம்பியான [[வெங்கடபதி ராயன்]] ஆட்சிக்கு வந்தான்.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீரங்க_தேவ_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது