வின்சென்ட் வான் கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 20:
}}
 
'''வின்சென்ட் வில்லியம் வான் கோ''' அல்லது '''வின்செண்ட் வான்கா''' ({{IPA-nl|ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx|lang|Vincent_willem_van_gogh.ogg}}; (''Vincent Van Gogh'', மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு [[டச்சு]] [[பின்-உணர்வுப்பதிவுவாதம்|பின்-உணர்வுப்பதிவுவாத]] [[ஓவியக் கலை|ஓவியர்]]. இவரது [[ஓவியம்|ஓவியங்களில்]] சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது.
 
இவர் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். வான் கோக் குழந்தைப்பருவத்திலிருந்து தீவிரமான அதே சமயம் அமைதியான சிந்தனையாளராக வளர்ந்தார். இவர் இளைஞராக இருந்தபோது முதலில் [[கலைப் பொருள்|கலைப் பொருட்களை]] விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார், வேலை நிமித்தமாகப் பயணங்களை மேற்கொண்டார், ஆனால் அவர் லண்டனுக்கு மாற்றப்பட்ட பின்னர் மனச்சோர்வடைந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், அவர் மதப்பணிக்கு வந்து, தெற்கு பெல்ஜியத்தில் ஒரு புராட்டஸ்டன்ட் மிஷனரியாக நேரத்தைச் செலவிட்டார். அங்கு மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களைப் பார்த்து இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். 1881 ஆம் ஆண்டில் ஓவியம் வரைவதற்கு முன், அவர் உடல் நலமின்றியும் தனிமையிலும் இருந்தார், பின் அவரது பெற்றோருடைய வீட்டிற்குச் சென்றார். அவரது தம்பி தியோ அவருக்கு நிதி உதவி செய்துவந்தார். அவரது முந்தைய படைப்புகள், பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் காட்டும் சித்திரங்கள் ஆகியனவாக இருந்தன. 1886 இல், அவர் பாரிஸ் நகருக்குச் சென்றார், அங்கு அவர் எமிலி பெர்னார்ட் மற்றும் பால் கவுஜின் உட்பட அங்கத்துவ கலை இயக்க உறுப்பினர்களைச் சந்தித்தார், இவர்கள் [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுப்பதிவுவாத]] கலை இயக்கத்துக்கு எதிராகப் பேசினர்.
 
வான் கோக் மனநோய் மற்றும் மருட்சிகளால் அவதிப்பட்டார், மேலும் அவரது மன உறுதியற்ற தன்மையக் குறித்து அவர் கவலையடைந்தபோதிலும், அவர் அவரது உடல் ஆரோக்கியத்தைப் புறக்கணித்தார், ஒழுங்காகச் சாப்பிடாமல், பெரிதும் குடித்தார். வறுமையால் அவருக்குக் கோபம் அதிகரித்தது. ஒரு சமயம் கோபத்தில் அவர் தனது இடது காது பகுதியைத் துண்டித்துக்கொண்டார். அவர் ஒரு காலக்கட்டத்தில் செயிண்ட்-ரெமியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்றார். அவர் மருத்துவமனையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பாரிஸ் அருகிலுள்ள ஆவெர்ஸ்-சூர்-ஓஸ்ஸில் உள்ள ஆபுர்கெ ரவொக்ஸிற்கு குடிபெயர்ந்த பிறகு, ஹோமியோபதி மருத்துவரான பால் காகேட்டையின் கவனிப்பில் இருந்தார். அவரது மன அழுத்தம் தொடர்ந்து, சூலை 27, 1890 இல், வான் கோக் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். காயமுற்ற இரண்டு நாட்களுக்கு பின்னர் இறந்தார்.
 
இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.
"https://ta.wikipedia.org/wiki/வின்சென்ட்_வான்_கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது