இழான் இழாக்கு உரூசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
குழந்தைகள் இயற்கையோடு இயைந்து வளர அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் இயற்கையின் போக்கில் இயற்கையின் நியதிகளின் படி வாழவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் ரூஸோ. இதுவே அவரின் தலையாய குறிக்கோளாக அமைந்திருந்தது. இவர் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது கல்வியே என்றார். அதேவேளை வாழ்க்கைக்குக் குழந்தைகளைத் தயாரிப்பது கல்வியின் பணியன்று; வாழ்க்கையே கல்வி ஆகுமென்று வலியுறுத்தினார்.
 
குழந்தைகளுக்குக் கல்வியை வழங்குவதைக் காட்டிலும் கல்வியைப் பெறுவதற்கான நிலைக்கு அவர்களை ஆயத்தப்படுத்துதல் அவசியம். வாழ்வியல் சூழலில் காணப்படும் பல்வேறு சிக்கல்களுக்கான தீர்வுகளைக் குழந்தைகள் தாமே தீர்க்க வழிகாட்டுதல் வேண்டும் என்றார். இதற்காகக் கல்வியில் [[சிக்கலைத் தீர்க்கும் முறை]], [[விளையாட்டு முறை]], [[தாமே கண்டறி முறை]] முதலான கற்பித்தல் முறைகளை ரூசோ முன்மொழிந்தார்.
 
கல்வி முறையில் நினைவாற்றல் திறனை விட செயல் வழிக் கற்றல் மூலம் கற்றலை நிலைப்படுத்திட வேண்டும். அதற்கு கற்றல் கற்பித்தல் நிகழ்வில் குழந்தை மைய கற்றல் (Child Centered Learning Approach) அணுகுமுறையை வலியுறுத்தினார். மேலும் கற்பித்தலின்போது கற்றல் உபகரணங்களின் பயன்பாட்டின் இன்றியமையாத தன்மையைக் குறிப்பிட்டார். கற்போரின் விருப்பு, வெறுப்புகள் மற்றும் திறன்கள் ஆகியவற்றிற்கேற்ப கல்வியின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டும் என்றார் ரூசோ.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/08/25/%3Ffn%3Df13082510%26p%3D1&ved=0ahUKEwjPpu2708bUAhUHLo8KHXnyBa4QFggcMAA&usg=AFQjCNEGrmSNjZusACAU5HFZ9jYYdp28Zg&sig2=Fi5tzCtUcexuzvzAHqPkSA">{{cite web | url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/08/25/?fn=f13082510&p=1 | title=ரூஸோவின் தத்துவக் கருத்துக்களும் தற்காலக் கல்வி முறையும் | accessdate=18 சூன் 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இழான்_இழாக்கு_உரூசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது