'''சரத்சந்திர சட்டோபாத்யாயா''' (''Sarat Chandra Chattopadhyay'' <ref>alternatively spelt as '''Sarat Chandra Chatterjee'''</ref>, [[வங்காள மொழி|வங்காளம்]]: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது '''சரத்சந்திர சட்டர்ஜீ''' (''Sarat Chandra Chatterjee'', 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் [[வங்காள மொழி]] இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தன்னை [[ரவீந்திரநாத் தாகூர்|ரவீந்திர நாத்தாகூரின்]] சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாகப் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் [[மகாத்மா காந்தி]]யை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். கேரளா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.