எஸ். ஏ. டாங்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
| spouse = }}
 
'''எஸ். ஏ. டாங்கே''' (Shripad Amrit Dange 10 அக்டோபர் 1899--221899–22 மே 1991) இந்திய அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர் ஆவார். [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைத் தொடங்கியவர்களில் முன்னணியாளரும் ஆவார். <ref>http://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses1/0411079105.htm</ref>
 
==இளமைக்காலம்==
 
மகாராட்டிய மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் கரஞ்சிகான் என்னும் சிற்றுரில் பிறந்த டாங்கே கல்லூரியில் பயிலும்போதே போராட்டங்களில் கலந்து கொண்டார். புனேயில் கல்வி பயின்றார்
 
==அரசியல் பணிகள்==
 
1920 ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் லோக மான்ய திலகர், மகாத்மா காந்தி, சுபாசு சந்திரபோசு, சவகர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் இணைந்து போராடினார். <ref>http://connection.ebscohost.com/c/articles/89562950/comrade-s-a-danges-role-indian-freedom-struggle</ref> கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, போருக்கு எதிரான நடவடிக்கைகள் என பலவாறு குற்றங்கள் சுமத்தப்பட்டு மொத்தம் 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பிறகும் இந்திய அரசியலில் முக்கியப் பங்கு ஆற்றினார்.
 
பாம்பே சட்ட மன்ற உறுப்பினராகவும் (1946-1951) நாடாளுமன்ற உறுப்பினராக 1957 ஆம் ஆண்டிலும் 1967 ஆம் ஆண்டிலும் பதவி வகித்தார். 1978 வரை இந்தியப் பொதுவுடைமைக் கடசியின் தலைவர் பதவியில் இருந்தார். 1981 இல் அக்கட்சி யிலிருந்து வெளியேற்றப் பட்டார். பின்னர் அனைத்திந்திய பொதுவுடைமைக் கட்சியிலும், அதிலிருந்து விலகி ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சியிலும் சேர்ந்தார். மகாராட்டிய மாநிலம் உருவாவதில் முன்னிலையில் இருந்து வெற்றி பெற்றார்.
[[இந்திரா காந்தி]] பிரகடனம் செய்த நெருக்கடி நிலைமைச் சட்டத்தை ஆதரித்தார்.
 
==எழுத்தாளராக==
 
சோசலிஸ்ட் என்னும் வார பத்திரிகையைத் தொடங்கினார். நூல்களும் எழுதியுள்ளார். அவற்றில் காந்தியும் லெனினும், இலக்கியமும் மக்களும், இந்தியா-அடிப்படை பொதுவுடைமை முதல் அடிமைத்தனம் வரை என்பன குறிப்பிடத் தக்கவை.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2715654" இருந்து மீள்விக்கப்பட்டது