பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி பராமரிப்பு using AWB
வரிசை 20:
|spouse 3 = சீனத் மகால்
|spouse 4 = தாஜ் மகால்
|successor = முகலாயப் பேரரசு இல்லாது ஒழிக்கப்பட்டது<br />வழிவந்தோர்: 22 மகன்கள், குறைந்தது 32 மகள்கள்</br />
}}
 
'''அபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர்''' (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் '''பகதூர் ஷா''', '''இரண்டாம் பகதூர் ஷா''' என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான '''பகதூர் ஷா ஜாபர்''' (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசரும்]], [[தைமூரிய வம்சம்|தைமூரிய வம்சத்தின்]] கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் [[இரண்டாம் அக்பர் ஷா|இரண்டாம் அக்பர் ஷா சானி]] என்பவருக்கு, அவரது இந்து [[ராஜ்புத்|ராசபுத்திர]] மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர்.
 
இரண்டாம் அக்பர் ஷா 1838 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் ஷா ஜாபர் முகலாயப் பேரரசர் ஆனார். ஜாபர் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட [[புனைபெயர்]] ஆகும். இவரது தந்தையார் "இரண்டாம் அக்பர் ஷா சானி" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.
 
இரண்டாம் அக்பர் ஷா சானி, அவரது வாரிசாக பகதூர் ஷா ஜாபரை தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் [[மிர்சா ஜஹாகாங்கீர்|மிர்சா ஜஹாங்கீரை]] வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் ஷா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா ஜஹாகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.
வரிசை 38:
[[படிமம்:The capture of the king of delhi by Captain Hodson.jpg|right|220px|thumb|20 செப்டம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் ஷா ஜாபரும், மகன்களும் ஹுமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஹட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.]]
[[படிமம்:Bahadur Shah Zafar.jpg|thumb|300px|left|1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.]]
[[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857]] விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர்.
 
இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், ஜாபரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக ஜாபரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.<ref>http://www.tribuneindia.com/2007/20070510/1857/main1.htm</ref> ஜாபர் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.
 
இக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது ஜாபர் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த [[ஹுமாயூனின் சமாதி]]க் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டம்பர் 20 ஆம் தேதி தளபதி [[வில்லியம் ஹட்சன்]] தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு ஜாபரை சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஹட்சன், ஜாபரின் மகன்ளான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை [[தில்லி நுழைவாயில்|தில்லி நுழைவாயிலுக்கு]] அருகின் உள்ள [[கூனி தர்வாசா]] என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.
 
[[படிமம்:Zinat Mahal Begum.png|thumb|பேகம் சீனத் மகல், பகதூர் சா சஃபாரின் மனைவி]]
ஜாபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண் உறுப்பினர்கள் பிரித்தானியரால் கொல்லப்பட்டனர். தப்பியிருந்த முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பலர் [[சிறை]]யில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1858 ஆம் ஆண்டில், ஜாபரும், அவரது மனைவி ஜீனத் மகாலுடனும், குடும்பத்தின் எஞ்சியவர்களுடனும் [[பர்மா]]வில் (இப்போது மியன்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இது, இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்ட முகலாய வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 
பகதூர் ஷா நாடு கடத்தப்பட்ட நிலையில் 1862 நவம்பர் 7 ஆம் நாள், தனது 87வது வயதில் [[ரங்கூன்| ரங்கூனில்]] காலமானார்.<ref>[http://www.bbc.com/tamil/india-41931090 முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்]</ref> இவரது உடல் ரங்கூனில் உள்ள [[சுவேதாகன் பகோடா]]வுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது இப்போது [[பகதூர் சா தர்கா]] என அழைக்கப்படுகின்றது.<ref>[http://www.kapadia.com/Dargah/zafrdarg.html The Dargah of Bahadur Shah Zafar in Rangoon.]</ref> இவரது மனைவி ஜீனத் மகல் 1886 ஆம் ஆண்டு காலமானார்.<ref>[http://www.kapadia.com/zeenatmahal.html Nawab Zeenat Mahal]</ref>
 
நாடுகடத்தப்பட்டு இருந்தபோது பகதூர் ஷா ஜாபர் அவரது புகழ் பெற்ற "இரண்டு யார்டு நிலம்" (ஆறடி நிலம்) எனத் தலைப்பிட்ட இருவரிப் பாடலை எழுதினார். உருது மொழியில் எழுதப்பட்ட இப் பாடலில் தனது சொந்த நாட்டில் தன்னைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட இல்லாத நிலையையிட்டு மனம் வருந்தியுள்ளார்.
வரிசை 106:
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[சஃபார் மகால்]]
* [[பகதூர் சா சஃபார்]]
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பகதூர்_சா_சஃபார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது