ஈ. வெ. கி. சம்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 25:
| website = பாரியூர்
}}
'''ஈ. வெ. கி. சம்பத்''' எனப்படும் '''ஈரோடு வெங்கட நாயகர் கிருஷ்ணசாமி சம்பத்''' (1926 - பெப்ரவரி 23, 1977) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் பெரியார் [[ஈ. வெ. ராமசாமி]]யின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன்.
 
== கல்வி ==
சம்பத் [[சென்னை]]யில் உள்ள [[பச்சையப்பன் கல்லூரி]]யில் படித்தார்.
 
== தி.மு.க.வில் ==
வரிசை 34:
 
=== நாடாளுமன்ற உறுப்பினர் ===
[[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957|1957]] நாடாளுமன்றத் தேர்தலில், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]யில் திமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
 
== தமிழ் தேசியக் கட்சி ==
1961ல் [[திராவிட நாடு]] கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று [[தமிழ் தேசியக் கட்சி]] என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். [[கண்ணதாசன்]], [[சிவாஜி கணேசன்]], [[பழ. நெடுமாறன்]] ஆகியோர் இக்கட்சியின் மற்ற முக்கிய தலைவர்கள். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது - போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் தோற்றது.
 
== இந்திய தேசிய காங்கிரஸில் ==
1964ல் சம்பத் தன் கட்சியை [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசுடன்]] இணைத்து விட்டார். பின்னர் 1969ல் காங்கிரசு பிளவுபட்ட போது [[காமராஜர்]] தலைமையில் உருவான [[நிறுவன காங்கிரசு|நிறுவன காங்கிரசில்]] இணைந்து விட்டார். [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1971|1971]] நாடாளுமன்றத் தேர்தலில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே [[கோபிசெட்டிபாளையம் ]] தொகுதியில் இவருடைய மகன் [[ஈ. வெ. கி. ச. இளங்கோவன்]] 2004ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
== குடும்பம் ==
சம்பத் 15-9-1946ஆம் நாள் வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருபத்தூரில் [[சுலோச்சனா சம்பத்| சுலோச்சனாவை | ]] மணந்தார்.<ref> உதயம், 1-9-1946, பக்.6</ref> அத்திருமணத்தில் [[பெரியார் ஈ. வெ. ரா]] ஆற்றிய உரை '''பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?''' என்னும் தலைப்பில் குடிஅரசு பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டது.<ref>குடிஅரசு, 18-1-1947, பக்.2</ref> சம்பத்தின் மறைவிற்குப் பின்னர் சுலோசனா [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்து அதன் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தார். இவர் மகன் [[ஈ.வெ.கி.ச.இளங்கோவன்|ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்]] முன்னாள் இந்திய மத்திய அரசு அமைச்சர் மற்றும் காங்கிரசின் மாநிலத் தலைவர்களுள் ஒருவர். இன்னொரு மகன் இனியன் சம்பத்தும் காங்கிரசின் உறுப்பினர்; முன்னாளில் [[தூர்தர்ஷன்|தூர்தர்ஷனில்]] செய்தி வாசிப்பவராக இருந்தார்.
 
== நூல்கள் ==
# ஈ.வே.கி.சம்பத் பேசுகிறார், 1951, பரிதி பதிப்பகம், திருத்தணி <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:11-11-1951, பக்கம் 10</ref>
 
== இதழ் ==
இவர் தி.மு.க.விலிருந்தபொழுது "Sunday Times" என்னும் ஆங்கில வார இதழுக்கு ஆசிரியராகவும் உரிமையாளராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார்.<ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:12-3-1961, பக்கம் 9</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._கி._சம்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது