ராம. அழகப்பச் செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 23:
| footnotes =
}}
'''ராம.அழகப்பச் செட்டியார்''' (6 ஏப்ரல் 1909 - 5 ஏப்ரல் 1957) ஓர் [[இந்தியா|இந்திய]]த் தொழிலதிபரும் வள்ளலும் ஆவார். விடுதலை அடைந்த நேரத்தில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளையும் ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவி தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர்.<ref>[http://www.winentrance.com/general_knowledge/dr-rm-alagappa-chettiar.html winentrance.com|Biography Of Dr RM Alagappa Chettiar|வலை காணல்: 23/04/2016]</ref>
 
==இளமையும் கல்வியும்==
வரிசை 37:
==கல்வி புரவலர்==
 
இவரது கல்விப்பணி [[திருவாங்கூர் பல்கலைக்கழகம்|திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில்]] [[தமிழ்|தமிழ் மொழிக்கான]] துறையை ஏற்படுத்த 1943ஆம் ஆண்டு ஒரு இலக்கம் ரூபாய்கள் நன்கொடை வழங்கியதுடன் துவங்கியது.
 
1947ஆம் ஆண்டு நடந்த [[அன்னி பெசண்ட்]] நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இந்தியாவில் கல்வியை வளர்க்க தொழிலதிபர்களுக்கு விடுத்த அழைப்பினை ஏற்று [[காரைக்குடி]]யில் காந்திமாளிகையில் அழகப்பா கலைக்கல்லூரியை மூன்று நாட்களுக்குள் நிறுவினார்.<ref>[http://www.engineering.careers360.com/colleges/alagappa-chettiar-college-of-engineering-and-technology-karaikudi engineering.careers360.com|Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi|வலைக் காணல்: 23/04/2016]</ref>
 
அப்போதைய [[இந்தியப் பிரதமர்]] [[ஜவகர்லால் நேரு]]வை காரைக்குடியில் அழகப்பா வளாகத்தில் 15 இலக்கம் ரூபாய் மதிப்புள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பினை நன்கொடை அளித்து நடுவண் அரசின் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ இணங்கச் செய்தார்.இவரது இந்த நன்கொடையைப் பாராட்டி நேரு இவரை ''சோசலிச முதலாளி'' என்று புகழ்ந்தார்.1953ஆம் ஆண்டுசனவரி 14 அன்று இந்நிலப்பரப்பில் [[மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்|மத்திய மின் வேதியியல் ஆய்வுக் கழகத்தை]] (CECRI) [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.<ref>[http://www.accet.edu.in/50/our-founder-dr-r-m-alagappa-chettiar accet.edu.in|OUR FOUNDER - DR. R. M. ALAGAPPA CHETTIAR|வலைக் காணல்: 23/04/2016]</ref>
 
தமது அரண்மனை போன்ற கோட்டையூர் இல்லத்தையே ஓர் பெண்கள் கல்லூரி நிறுவ வழங்கியது இவரது வள்ளல்தன்மைக்கு சிகரமாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ராம._அழகப்பச்_செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது