சைத் நுர்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 23:
}}
 
'''சைத் நுர்சி''' (1877- 23 மார்ச் 1960) '''ஸஈத் இ நுர்ஸி''' எனவும் அழைக்கப்படுகின்றார். உத்தியோகபூர்வப் பெயர் '''சைத் ஒக்ர்'''.<ref>[http://www.risalesohbet.net/genel/bediuzzaman-ve-risale-i-nur-hizmeti.html Bediüzzaman ve Risale-i Nur Hizmeti]</ref> பொதுவாக சிறப்புப்பெயரான பதியுஸ்ஸமான்<ref>[http://www.nur.org/treatise/biography/from_Bediuzzamans_life09.htm From Said Nursi's Life: Birth and Early Childhood]</ref> என அறியப்படுகிறார்.இவர் ஒரு குர்திய சுன்னி முஸ்லிம் இறையியலாளர். 20ஆம் நுாற்றாண்டில் மிகவும் செல்வாக்குச் செலுத்திய முஸ்லிம்களின் ஒருவராக '''சைத் நுர்சி''' தரப்படுத்தப்பட்டிருக்கின்றார். இவர் ரிசாலா யே நூர் என்ற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புனித அல்-குர்ஆனுக்கான விளக்கவுரைத் தொகுப்பை எழுதினார்.<ref name="Gerhard Böwering p. 482">Gerhard Böwering, Patricia Crone, Mahan Mirza, The Princeton Encyclopedia of Islamic Political Thought, p. 482. {{ISBN|0-691-13484-7}}</ref><ref name="Ian S. Markham 2011 p 194">Ian S. Markham; Suendam Birinci; Suendam Birinci Pirim (2011). An Introduction to Said Nursi: Life, Thought and Writings. Ashgate Publishing, Ltd, p 194. {{ISBN|978-1-4094-0770-6}}.</ref> சைத் நுர்சி காதிரிய்யா மற்றும் நக்ஷபந்தியா போன்ற சூபி வழியைமப்புக்களின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார்.அவர் தனது எழுத்துக்களில், காதிரிய்யா வழியமைப்பின் நிறுவனர் செய்க் அப்துல் காதிர் அல்-ஜீலானி மற்றும் நக்ஷபந்தியா தரீக்காவின் பெரும் செய்காக கருதப்படும் செய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தி போன்றவர்களின் கருத்துகளை பல இடங்களின் குறிப்பிடுகின்றார்.<ref>Ibrahim M. Abu-Rabi, Islam at the Crossroads: On the Life and Thought of Bediuzzaman Said Nursi, p. 66. {{ISBN|0791457001}}, 9780791457009</ref> ஆன்மிகம், நவீன விஞ்ஞானம் மற்றும் தருக்கவியலுமே எதிர்காலத்துக்கான வழி என நம்பினார். மதச்சார்பற்ற பாடசாலைகளில் சமய விஞ்ஞானங்களை கற்பிக்குமாறும், மதரீதியான பாடசலைகளில் நவீன விஞ்ஞானத்தைக் கற்பிக்குமாறும் வாதிட்டார்.<ref name="Gerhard Böwering p. 482" /><ref name="Ian S. Markham 2011 p 194" /><ref>Said Nursi, ''Munazarat'', p. 86 "The religious sciences are the light of the conscience; the modern sciences are the light of the mind; only on the combining of the two does the truth emerge. The students’ aspiration will take flight with those two wings. When they are parted, it gives rise to bigotry in the one, and skepticism and trickery in the other."</ref>
 
நுர்சியால் ஈர்க்கப்பட்டவர்கள், அவரது சீடர்கள் துருக்கியில் இஸ்லாத்தின் மறுமலர்ச்சியில் பெரும் பங்காற்றினர். தற்போது பல மில்லியன் கணக்கான அவரது சீடர்கள் உலகம் பூராகவும் உள்ளனர்.<ref>Sukran Vahide, Islam in Modern Turkey: An Intellectual Biography of Bediuzzaman Said Nursi, p. 425. {{ISBN|0-7914-8297-9}}</ref><ref>[http://www.firstthings.com/article/2007/02/render-unto-atatuumlrk-48 An article from First Things]</ref> அவரது ரிசாலா யே நூர் புத்தகத்தை வாசிப்பவர்கள் நுார் மாணவர்கள் (தாலிபுன் நுார்)என அறியப்படுகின்றனர். அவரது சீடர்கள் அவரை "உஸ்தாத்" (தலைவர்) என்ற கௌரவப் பெயரால் அழைக்கின்றனர்.
வரிசை 30:
 
== ஆரம்ப வாழ்க்கை ==
பதியுஸ்ஸமான் சைத் நுர்சி உதுமானிய பேரரசின் கிழக்குப்பகுதி அநதோலியாவில் நுர்ஸ் என்ற கிராமத்தில் பிறந்தார்.<ref name="intellectual bio">{{cite book |title=Islam in modern Turkey: an intellectual biography of Bediuzzaman Said Nursi|first=Sükran|last=Vahide|publisher=SUNY Press |year=2005 |isbn= 978-0-7914-6515-8 |page=3 |quote=They [Said Nursî's parents] were among the settled Kurdish population of the geographical region the Ottomans called Kurdistan.}}</ref> அவர் தனது ஆரம்பக்கல்வியை சொந்த ஊரிலே பெற்றுக்ககொண்டார். அங்கு அவர் இறையியல் தொடர்பான விவாதத்தில் நிபுணத்துவமுடையவராக விளங்கினார்.இஸ்லாமிய அறிவுத்துறையில் முன்னேற்றமடைந்தவராக காணப்பட்ட பின்னர், பதியுஸ்ஸமான் என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டார்.பதியுஸ்ஸமான் என்றால் தனித்துவம்மிக்க சிறந்தவர் என்பது பொருளாகும்.விலயத் பகுதியின் கவர்னரால் அவரது இல்லத்தில் தங்குவதற்கு பதியுஸ்ஸமான் அழைக்கப்பட்டார்.கவர்னரின் வாசிகசாலையில், சைத் நுர்சிக்கு விஞ்ஞான அறிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக வாய்ப்புக்கிட்டியது.அங்கு சைத் நுர்சி உதுமானிய துருக்கி மொழியைக் கற்றார்.உதுமானிய பேரரசின் கிழக்குப் பகுதியில் பல்கலைக்கழகக் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு திட்டமிட்டார்.விஞ்ஞானம் மற்றும் இஸ்லாம் சமயத்தையும் இணைத்து, உயர்தரத்திலான தர'க்கவியல் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகத்தை பிராந்தியத்தில் அமைப்பதே அவரது இலக்காக இருந்தது.எனினும், 1909ஆம் ஆண்டு உதுமானிய பேரரசை ஆட்சி கவிழ்கச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டார். பின்னர், அக்குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டார்.<ref>David Livingstone, Black Terror White Soldiers: Islam, Fascism and the New Age, p. 568-569. {{ISBN|1-4812-2650-9}}</ref> உதுமானிய பேரரசின் இறுதிக்காலப்பகுதியில் கல்விசீர்திருத்தவாதியாகவும், கிலாபத்தின் மக்களிடையே ஒற்றுமை கொண்டுவருவதற்கான அதிகாரியாகவும் மும்முரமாக பதியுஸ்ஸமான் செயற்பட்டார். பராம்பரிய மத்ரஸாக்களில் பயிற்சி, தஸவ்வுப் (சூபிசம்) மற்றும் நவீன விஞ்ஞானம் போன்ற கல்வி சீர்த்திருத்தங்களை கொண்டுவருவதற்கான ஒர் முன்மொழிவை,சுல்தான் அப்துல் ஹமீத்திடம் பிரேரித்தார்.<ref name="Gerhard Böwering p482" /><ref name="David Tittensor p 35">David Tittensor, The House of Service: The Gulen Movement and Islam's Third Way, p 35. {{ISBN|0-19-933641-5}}</ref>
 
முதலாம் உலகப்போர் காலப்பகுதயில் உதுமானியப் பேரரசின் முக்கிய அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.<ref>Hakan Özoglu, ''Osmanli Devleti ve Kürt Milliyetçiligi'', Kitap Yayinevi Ltd., 2005, {{ISBN|978-975-6051-02-3}}, [https://books.google.com/books?id=IA4z1ryrhNQC&pg=PA146&dq=Said-Nursi+%22Te%C5%9Fkilat-%C4%B1+Mahsusa%27da+yer+ald%C4%B1%22&hl=en&ei=bE4VTqioLqKGmQXogOUd&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCgQ6AEwAA#v=onepage&q=Said-Nursi%20%22Te%C5%9Fkilat-%C4%B1%20Mahsusa%27da%20yer%20ald%C4%B1%22&f=false p. 146.]</ref> ரஷ்யாவின் இராணுவத்தின் கைதியாக ரஷ்யாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட நுர்சி இரண்டு வருடங்கள் சிறையில் கழித்தார்.1918இல் ரஷ்யாவின் முகாமில் இருந்து தப்பித்த அவர் இஸதான்பூலைசென்றடைந்தார்.<ref name="David Tittensor p 35" /><ref>Andrew Rippin and Zeki Saritoprak, The Islamic World, Chapter 33, p. 398</ref> நுர்ஸி இஸ்தான்பூலில் வரவேற்கப்பட்டார்.மேலும், அவர் தாருல் ஹிக்மத் அல்-இஸ்லாமியின் உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.<ref name="MarkhamBirinci2011">{{cite book|author1=Ian S. Markham|author2=Suendam Birinci|author3=Suendam Birinci Pirim|title=An Introduction to Said Nursi: Life, Thought and Writings|url=https://books.google.com/books?id=xtpM-ae-P6QC&pg=PA46|year=2011|publisher=Ashgate Publishing, Ltd.|isbn=978-1-4094-0770-6|page=46}}</ref>
 
== ஆக்கம் மற்றும் விநியோகம் ==
சைத் நுர்சி அரபுமொழியில் பாங்கு சொல்லி தொழுகைக்கு அழைத்தல் மற்றும் ஏனைய சில விடயங்களுக்குமாக ஸ்பார்த்தா மாகாணத்துக்கு நாடுகடத்தப்பட்டார்.<ref name="McDowall2004">{{cite book|author=David McDowall|title=A Modern History of the Kurds: Third Edition|url=https://books.google.com/books?id=dgDi9qFT41oC&pg=PA210|date=14 May 2004|publisher=I.B.Tauris|isbn=978-1-85043-416-0|pages=210–211}}</ref> அப்பகுதியில் உள்ள மக்கள் சைத் நுர்சியின் போதனைகளால் கவரப்பட்டனர், அதனால் ஸ்பார்த்தா கவர்னர் சைத் நுர்சியை பர்லா எனும் கிராமத்துக்கு அனுப்பினார்.<ref>Sükran Vahide, Bediuzzaman Said Nursi, p. 230. {{ISBN|967506286X}}</ref> அங்கு சைத் நுர்சி அவரது ரிஸாலே யே நூர் தொகுப்பின் மூன்றில் இரண்டு பகுதியை எழுதிமுடித்தார்.<ref name="EI2">{{cite book |last1=Bosworth |first1=C.E. |last2=van Donzel |first2=E. |last3=Heinrichs |first3=W.P. |last4=Lecomte |first4=G. |title=Encyclopaedia of Islam (New Edition) |volume=Volume VIII (Ned-Sam) |publisher=Brill |location=Leiden, Netherlands|date=1995 |isbn=9004098348 |page=144}}</ref> ரிஸாலே யே நூர் புத்தகத்தை முற்றாக எழுதிமுடித்த பின்னர், அவை துருக்கியின் பல பகுதிகளிலுள்ள நுர்சியின் ஆதரவாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டன.
 
{{cquote|
வரிசை 48:
நுர்சியின் இறுதி தசாப்த காலத்தில், அவர் ஸ்பார்த்த நகரத்தில் குடியேறினார் என கூறப்படுகின்றது.பல் கட்சி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், நுர்சி தனது ஆதரவாளர்களுக்கு அத்னான் மென்டர்ஸின் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு ஆலோசனை வழங்கினார். அக்கட்சி சில மதரீதியான உரிமைகளை மீள வழங்கியது.<ref name="EI2" /> சைத் நுர்சி கம்யூனிசத்திற்கு எதிரானவராக இருந்தார். தற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து கம்யூனிசம் என அதனை எதிர்த்தார்.1956இல் அவரது எழுத்துக்கள் அச்சிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவரது புத்தகங்கள் "ரிஸாலே யே நூர்" (தெய்விக ஒளியின் கடிதங்கள்) என்ற பெயரில் ஒன்றுதிரட்டப்பட்டது.
 
உர்பாவுக்கு பயணம் செய்த பின்னர் களைப்பின் காரணமாக நுர்சி மரணமடைந்தார்.<ref>Ibrahim M. Abu-Rabi, Islam at the Crossroads: On the Life and Thought of Bediuzzaman Said Nursi, p. xxiv. {{ISBN|0-7914-5700-1}}</ref> அவர்கள் நபி இப்ராஹீம் அவர்களின் கல்லறை போன்ற கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.<ref>Ibrahim M. Abu-Rabi, Islam at the Crossroads: On the Life and Thought of Bediuzzaman Said Nursi, p. xxiii. {{ISBN|0-7914-5700-1}}</ref><ref>Ian S. Markham; Suendam Birinci; Suendam Birinci Pirim (2011). An Introduction to Said Nursi: Life, Thought and Writings. Ashgate Publishing, Ltd, p 17. {{ISBN|978-1-4094-0770-6}}.</ref> 1960 இல் துருக்கியின் இராணுவ பதவிகவிழ்ப்பின் பின்னர்,தீவர வலதுசாரி அரசயில்வாதி அல்பார் துர்க் தலமையிலான இராணுவ வீரர்களால் சைத் நுர்சியின் கல்லறை தோண்டப்பட்டு, ஸ்பார்த்தாவில் அறியப்படாத ஓர் இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.<ref>[http://www.zaman.com/?bl=1960militarycoup&alt=&hn=36483 Nursi's Letters Found in Yassiada Archives], [[Zaman (newspaper)|Zaman]]</ref><ref>[http://yenisafak.com.tr/arsiv/2003/agustos/16/turkes03.html Yes to 27 May No to 28th] (in Turkish), [[Yeni Şafak|Turkish Newspaper Yeni Şafak]], 16 August 2003, last accessed 17 June 2014</ref> பல வருடங்களின் பின்னர் சைத் நுர்சி அடக்கப்பட்ட இடம் அவரது ஆதரவாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதுடன,அவரது உடலை பாதுக்கும் நோக்குடன் மீண்டும் ஓர் இரகசிய இடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சைத்_நுர்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது