ஜே. பி. சந்திரபாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:தமிழ்நாட்டுப் பாடகர்கள் using HotCat |
சி →சுவையான தகவல்கள்: பராமரிப்பு using AWB |
||
வரிசை 82:
== சுவையான தகவல்கள் ==
* [[சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்|எஸ். ராதாகிருஷ்ணன்]] இந்தியக் குடியரசு தலைவராக இருக்கையில் அவரைச் சந்திக்கச் சென்ற தமிழ்த் திரைக் கலைஞர்கள் குழுவில் பங்கேற்றிருந்த சந்திரபாபு "பிறக்கும்போதும் அழுகின்றான்" என்ற தமது பாடலைப் பாடிக் காட்டினார். அதை வெகுவாகப் பாராட்டிய குடியரசுத் தலைவரின் மடிமீது பாய்ந்து அமர்ந்து, அவரது கன்னத்தை வருடி "நீ ரசிகன்" என்றார் சந்திரபாபு! சுற்றியிருந்தவர்கள் பதறினும், குடியரசுத் தலைவர் கோபிக்காது சிரித்தார்.
* சந்திரபாபு தன்னுடைய படங்களில் தன் சொந்தக் குரலில் பாடுவது தான் வழக்கம் எனினும், [[பறக்கும் பாவை]] என்னும் படத்தில் ''சுகமெதிலே இதயத்திலா'' என்னும் படத்தில் கே.ஜே.ஏசுதாஸின் பாடலுக்கு இவர் வாயசைத்தார். இதைப்போலவே, [[சபாஷ் மீனா]] திரைப்படத்தில் ''ஆசைக்கிளியே கோபமா'' என்ற பாடலை இவருக்காகப் பாடியவர் [[சீர்காழி கோவிந்தராஜன்]].
* தாம் நடிக்காவிடினும் [[பெண் (திரைப்படம்)|பெண்]] என்னும் திரைப்படத்தில், நகைச்சுவை வேடம் ஏற்றிருந்த [[எஸ்.பாலசந்தர்|எஸ்.பாலசந்தருக்காக]] ''கல்யாணம் வேணும் வாழ்வில்'' என்னும் பாடலைப் பாடினார். [[கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி]] என்ற படத்தில், 'ஜாலி லைஃப்" என்னும் இவரது பின்னணிப் பாடலுக்குக்குத் திரையில் நடித்தவர், நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]]!
* [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரை]] வைத்து "மாடி வீட்டு ஏழை" என்னும் திரைப்படத்தை இயக்க சந்திரபாபு முயன்றார். இரண்டாம் நாள் படப்பிடிப்புடன் இது முடிவுற்றது. இந்த முயற்சியின் தோல்விக்கு இரு தரப்பினரையுமே இன்று வரை காரணமாகச் சொல்வதும் தொடர்கிறது.
* புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!<ref>http://www.vikatan.com/anandavikatan/2010-jun-09/exclusive/37732.art</ref>
|