வெங்கல் சக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் சக்கரைச் செட்டியார் என்பதை கே. சக்கரை என்பதற்கு நகர்த்தினார்
சி பராமரிப்பு using AWB
வரிசை 6:
 
==இந்திய விடுதலைப் போராட்டம்==
சூரத்தில் 1907ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், [[வ.உ.சி]], [[மகாகவி பாரதியார்]], சுப்பிரமணிய அய்யர் ஆகியோரோடு சென்று கலந்து கொண்டார். இந்த மாநாட்டில்தான், காங்கிரசின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மிதவாதிகளுக்கும், தீவரவாதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, திலகரின் தலைமையில் அணிதிரண்ட தீவரவாதிகள் பிரிவினரோடு, சக்கரை செட்டியார் சேர்ந்தார். [[காந்தியடிகள்|காந்தியடிகளின்]] ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தும் பணியாற்றினார். ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம், வேல்ஸ் இளவரசர் வருகையைப் புறக்கணிப்பதற்கான போராட்டம் ஆகியவற்றைச் சென்னையில் நடத்துவதில் முக்கிய பங்காற்றினார் சக்கரை செட்டியார். தொழிற்சங்கத் தலைவராகவும் அவர் இருந்ததால், ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாகத் தொழிலாளர்களை அணிதிரட்டினார்<ref name = 'Keetru'>< /ref>.
 
==தொழிற்சங்கப் பணிகள்==
'சென்னை தொழிலாளர் சங்கம்' 27-04-1918 அன்று துவக்கப்பட்டது. பி.பி. வாடியா தலைவராகவும், [[திரு.வி.க.]], சக்கரை செட்டியார் இருவரும் துணை தலைவர்களாகவும், செல்வபதி செட்டியார், ராமானுஜூலு ஆகியோர் செயலாளர்களாகவும் பொறுப்பேற்றனர்<ref>{{cite web
| title = Unite To Defeat Neo-Liberal Policies | date = December 14, 2003 | url = http://pd.cpim.org/2003/1214/12142003_citu%20inaugural.htm | accessdate = 19 அக்டோபர் 2013}}</ref>. பர்மா ஆயில் கம்பெனியைச் சார்ந்த [[மண்ணெண்ணை]] தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 1927 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போராட்டத்தில் பதினொரு தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். அப்போது, [[சென்னை மாநகராட்சி]] உறுப்பினராக சக்கரை செட்டியார் இருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநகராட்சி நிதியிருந்து உதவிகள் வழங்கிட ஏற்பாடு செய்தார்<ref name = 'Keetru'>< /ref>. சக்கரை செட்டியார், முதல் மத்திய தொழிற்சங்க அமைப்பான ‘அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸ் (ஏ. ஐ. டி. யு. சி) யின் தமிழ் மாநிலத் தலைவராக 1943 முதல் 1945 வரையிலும், மீண்டும் 1951 முதல் 1956 வரையிலும் பொறுப்பு வகித்தார். 1948-1949 ஆம் ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் தடைசெய்யப்பட்டன.
 
==பிற சிறப்பு அம்சங்கள்==
1922 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாரதியின் பாடல் தொகுப்பான ‘சுதேச கீதங்கள்’ என்னும் நூலுக்கு, சக்கரை செட்டியார் முன்னுரை எழுதியுள்ளார்<ref name = 'Keetru'>< /ref><ref>{{cite web| title = பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( 'மகாகவி பாரதி வரலாறு ' நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்)| url = http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=604120918&format=print&edition_id=20041209| accessdate = 19 அக்டோபர் 2013}}</ref>.
 
==இறப்பு==
சக்கரை செட்டியார் 1958 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி மறைந்தார்<ref name = 'Keetru'>< /ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கல்_சக்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது