எமிலி டேவிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[File:Emily Wilding Davison.jpg|thumb|எமிலி டேவிசன், {{circa}} 1910–1912]]
 
'''எமிலி வைல்டிங் டேவிசன்''' (''Emily Wilding Davison'', 11 அக்டோபர் 1872 – 8 சூன் 1913) [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடிய [[மகளிர் வாக்குரிமைப் போராட்டம்|மகளிர் வாக்குரிமைப் போராளி]]. மகளிர் சமூக அரசியல் ஒன்றியத்தின் உறுப்பினரான எமிலி அவரது போராட்டத்திற்காக ஒன்பது முறை கைது செய்யப்பட்டார்; ஏழுமுறை [[உண்ணாநிலைப் போராட்டம்]] மேற்கொண்டிருந்தார். 49 முறை அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு வழங்கப்பட்டது. 1913ஆம் ஆண்டு எப்சம் டெர்பியின் போது குதிரைப்பந்தய மைதானத்தில் அவர் அத்துமீறி நுழைந்தபோது [[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்|ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின்]] குதிரையால் அடிபட்டு இறந்தார்.
 
டேவிசன் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். [[இலண்டன்|இலண்டனிலுள்ள]] இலண்டன் பல்கலைக்கழகத்தின் ரோயல் ஓல்லோவே கல்லூரியிலும் ஆக்சுபோர்டின் புனித இஃயூ கல்லூரியிலும் படித்தார். பின்னர் ஆசிரியையாகவும் ஆயாவாகவும் பணி புரிந்தார். நவம்பர் 1906இல் மகளிர் சமூக அரசியல் ஒன்றியத்தில் இணைந்தார். இயக்கத்தின் அணிவகுப்புகளில் முதன்மை அதிகாரியாக முன்னேறினார். அவரது துணிச்சலான செயற்பாடுகளுக்காக அவ்வியக்கத்தில் பெரிதும் அறியப்பட்டார். போராட்டங்களின் போது சன்னல்களை உடைத்தல், கல்லெறிதல், அஞ்சற்பெட்டிகளுக்கு தீ வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்; மூன்று முறை [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் ஒளிந்து கொண்டு போராடினார். சூன் 14, 1913 அன்று நடந்த அவரது இறுதிச் சடங்கை இந்த இயக்கமே முன் நடத்தியது. அவரது சவப்பெட்டியுடன் 5,000 போராளிகள் அணியாக நடந்தனர்; 50,000 மக்கள் அந்த ஊர்வலம் சென்ற வழியில் நின்றுகொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது சவப்பெட்டி தொடர்வண்டி மூலமாக குடும்ப நிலமிருந்த நார்த் உம்பர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
 
டேவிசன் தீவிரமான [[பெண்ணியம்|பெண்ணியவாதியாகவும்]] ஆர்வமிக்க [[கிறித்துவம்|கிறித்தவராகவும்]] விளங்கினார். [[சமூகவுடைமை]] சமயத்தின்படியும் அரசியல் இயக்கத்திற்கும் தேவையானதாகக் கருதினார். அவரது மரணம் நிகழ்ந்த விதமே அவரது வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. டெர்பியின்போது தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை முன்னரே அறிவிக்கவில்லை; அவரது நோக்கங்களும் இலக்குகளும் தெளிவின்றி இருந்தது வரலாற்றுப் பக்கங்களில் அவரை தவறாகச் சித்தரித்துள்ளது. அந்த நிகழ்வு குறித்து விபத்து, தற்கொலை, மன்னர் குதிரை மீது வாக்குரிமை கோரல் பதாகையை இணைப்பது எனப் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன; எதுவே மெய்யென நிரூபிக்கப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/எமிலி_டேவிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது