அ. வரதராஜப் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி →‎வாழ்க்கைச் சுருக்கம்: பராமரிப்பு using AWB
வரிசை 39:
1983 செப்டம்பரில் [[மட்டக்களப்பு]] சிறை போராளிகளால் தாக்கப்பட்ட போது, வரதராஜப் பெருமாள் சிறையில் இருந்து தப்பி [[இந்தியா]]விற்குத் தப்பிச் சென்றார். சென்னையில் இவர் ஈபிஆர்எல்எஃப் அமைப்புடன் இணைந்து அரசியலில் ஈடுபடலானார். அதன் பேச்சாளராகவும் பணியாற்றினார். விடுதலைப் போராளி அமைப்புகள் 1985 ஆம் ஆண்டில் இலங்கை அரசுடன் நடத்திய [[திம்புப் பேச்சுவார்த்தைகள்|திம்புப் பேச்சுவார்த்தைகளில்]] பெருமாளும் கலந்து கொண்டார்.
 
1987 ஆம் ஆண்டில் இந்திய இலங்கை உடன்பாட்டை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட [[வடகிழக்கு மாகாண சபை]]க்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈபிஆர்எல்எஃப் இத்தேர்தலில் வெற்றி பெற்றது. [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை வரதராஜப் பெருமாள் ஏற்றுக் கொண்டார். இவர் டிசம்பர் 1988 முதல் மார்ச் 1990 வரை இப்பதவியை வகித்து வந்தார்.
 
1990, மார்ச்சு 1 அன்று, [[இந்திய அமைதி காக்கும் படை]]யினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், முதலமைச்சர் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் [[தமிழீழம்|தமிழீழத்தை]]ப் பிரகடனப்படுத்தி விட்டு இந்தியப் படையினருடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்.<ref>{{cite news|url=http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm|title=I'm no traitor, says Perumal|last=Ferdinando|first=Shamindra|date=10 செப்டம்பர் 2000|publisher=ஐலண்டு}}</ref> இதனை அடுத்து அரசுத்தலைவர் [[ரணசிங்க பிரேமதாசா|பிரேமதாசா]] மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அ._வரதராஜப்_பெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது