பாண்டியதலையாலங்கானத்துச் வேந்தன்செருவென்ற ஆரியப்படைபாண்டியன் கடந்த நெடுஞ்செழியனைப்நெடுஞ்செழியன் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு [[மதுரை]]யைச் சேர்ந்த [[நக்கீரர்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டதே '''நெடுநல்வாடை''' என்னும் நூல். இது [[சங்க இலக்கியம்|சங்கத் தமிழ் இலக்கிய]]த் தொகுப்பான [[பத்துப்பாட்டு]] நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் [[வாடை]]க்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட '''(நெடு)''' வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு '''நல்'''ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் '''நெடுநல்வாடை''' எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.