2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 1822 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தைப் பொதுச்சின்னமாக வழங்கியது. இந்தக் கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கியபோதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/tamilnadu/article26671902.ece | title=டிடிவி தினகரன் அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு: 59 தொகுதிகளில் ஒரே சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம் | publisher=இந்து தமிழ் திசை | date=29 மார்ச் 2019 | accessdate=9 ஏப்ரல் 2019}}</ref>