சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
'''சங்கம்''' என்னும் சொல் புலவர் குழுவைக் குறிக்கும் வகையில் சங்கநூல்களில் காணப்படவில்லை.
* மேலும் காண்க - [[சங்கம்-முச்சங்கம்]]
எட்டுத் தொகை, பத்துப் பாட்டு நூல்கள், பின்பு தொகுக்கப்பட்டவை; அதிலுள்ள கவிதைகளைத் தனித் தனியாகத் தான் கவிஞர்கள் பாடினர். யாரும் சங்கத்தில் வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாடவில்லை;<br/>
இன்று கூட, எழுத்தாளர்கள் எழுதும் புதினங்களில், பதிப்பகத்தின் பேரை, புதினத்தின் ஊடே குறிப்பிடுகிறார்களா என்ன?<br/>
அதே போல் தான், அன்றும், எந்தக் கவிஞரும், "சங்கம்" என்று தன் கவிதையில் சொல்லாடவில்லை!
மேலும், "சங்கம்" என்பது ஊதும் சங்கையும் குறிக்கும்; தலைச் "சங்க" நாண் மதியம் என்ற தொன்மையான ஊரே உண்டு<br/>
"விளக்கு" என்னும் சொல்லில் இருந்து, எப்படி "விளக்கம்" (தெளிவு) பிறந்ததோ, அப்படியே,<br/>
"சங்கு" என்பதனின் இருந்து, "சங்கம்" பிறந்தது; சங்கு ஒலித்து ஒழுங்குறும் அவை சங்கம் எனவும் கொள்ளலாம்
"சங்கம்" என்ற தமிழ்ச் சொல்லும், "ஸங்கமம்" என்ற வடசொல்லும் வெவ்வேறானவை;<br/>
பெளத்த ஸங்கம் என்பது வேறு; தமிழில் சங்கம் என்பது வேறு; தமிழில் அது "புணர்கூட்டு" அவையைக் குறிக்கும்!
==புணர்கூட்டு==
# நெடுஞ்செழியன் தன் அவையில் மாங்குடி மருதனாரைத் தலைவராகக் கொண்டு புலவர்கள் பாடியதைக் குறிப்பிடுகிறான் “மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர்” பாடல் – பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் <ref>
# இந்த மாங்குடி மருதனார் இந்த நெடுஞ்செழியனை வாழ்த்தும்போது அவனது முன்னோர்களாகிய பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி போலவும், நிலந்தரு திருவின் நெடியோன் போலவும் இனிது வாழவேண்டும் என வாழ்த்துகிறார். பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி நல்லாசிரியர்களைக் கூட்டி அவர்களுக்கு உணவளிக்கும் நல்வேள்வி செய்தவன் என்றும், நிலந்தரு திருவின் நெடியோன் என்பவன் நல்லாசிரியர்களைக் கூட்டி ‘புணர்கூட்டு’ அவையை நடத்தினான் எனவும் குறிப்பிடுகிறார்.<ref>
# மாங்குடி மருதனாரின் மகன் மருதன் இளநாகனார் மதுரையில் புலவர்கள் கூடிச் ‘செதுமொழி’ (செம்மொழி)யைப் புதுமொழியாகப் படைத்ததைக் குறிப்பிடுகிறார்.
# சேர அரசன் பாலைபாடிய பெருங்கடுங்கோ கூடல் எனப்பட்ட மதுரையில் புலவர்கள் புலன் நாவால் புதிய சொற்களை வழங்கும் வேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று பொருள் தேடச் சென்ற தலைவன் தலைவிக்கு வாக்குத் தந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.<ref>
# மதுரையில் நெடியோன் புலவர்களைப் ‘புணர்கூட்டு’ என்னும் அமைப்பின் கீழ் ஒன்று திரட்டி தமிழைப் பாடவைத்தான். அது போன்றதொரு ஒருங்கிணைப்பைப் புகாரில் கரிகாலன் உருவாக்கிப் புலவர்கள் தமிழைத் திறனாய்வு செய்து வளர்க்கும் பணியை மேற்கொண்டான்.<ref>
# காவிரிப்பூம் பட்டினத்தில் மொழி வளர ஒன்றுகூடிய புலவர்களுக்குச் சோழன் கரிகாற் பெருவளத்தான் சோறு வழங்கிய செய்தி பாராட்டப்படுகிறது <ref>“புகழ் நிலைய மொழிவளர --- சோறு வாக்கிய பெருங்கஞ்சி” – பட்டினப்பாலை – 42-44</ref>
# சேர அரசன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பகைநாடுகளிலிருந்து தான் கொண்டுவந்த ‘கொண்டி’ச் செல்வத்தைக்கொண்டு ‘தண்டமிழைச் செறியச் செய்தான் என்று கபிலர் குறிப்பிடுகிறார் <ref>“கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து” (செல்வக்கடுங்கோ வாழியாதன் – கபிலர் - பதிற்றுப்பத்து 63</ref>
வரிசை 29:
==பௌத்த சங்கம்==
1. புகார் நகரத்தில் சமைய உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் சங்கம் இருந்ததாக உணரமுடிகிறது. “வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க” <ref>
சமையத்தைக் குறிக்கும் இந்தச் ‘சங்கம்’ என்னும் சொல்லைத் தமிழ்ச்சங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட காலம் பௌத்த சமையம் தமிழகத்தில் வேரூன்றிய மணிமேகலை நூலுக்குப் பிற்பட்டது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
==சங்கம் என்னும் அல்பெயர் எண் (வரம்பில்லாத எண்ணைக் குறிக்கும் குறியீடு) ==
வரிசை 40:
# பெயல் ஊழி – சங்கம் ஆண்டு,
# பனி ஊழி – கமலம் ஆண்டு,
# வெள்ள ஊழி – வெள்ளம் ஆண்டு நிலவின.<ref>
==தொல்காப்பியர் குறிப்பிடும் அல்பெயர் எண்==
இப்படி எண்ணலளவையில் அடங்காத சொற்கள் எனத் தொல்காப்பியம் மூன்று சொற்களைக் குறிப்பிடுகிறது. <br />
அவை ஐ, அம், பல் என்னும் இறுதிகளைக் கொண்டு முடியும் என்கிறது.
இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர். <br />
சகரம் மொழிமுதல் ஆகாதோ என்னும் ஐயத்தால், "சங்கம்" என்ற எண்ணை அவர்கள் குறிப்பிடவில்லை.<br />
"ச" எழுத்து தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வராது எனத் தொல்காப்பியம் சொல்கிறதே? என்பர் ஒரு சாரார்!
ஆனால் பாவாணர் முதலான அறிஞர்கள் இதில் மாறுபடுவர்; இது ஏடு எடுக்கும் போது அறியாதவர்களால் விளைந்த பாடபேதம் என்பர்; தொல்காப்பியம் குறிப்பிடுவது இதுவே:
:க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
:எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
:சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
:அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே
இதன் பொருள்:
க, த, ந, ப, ம என்னும் ஐஞ்சு எழுத்தும், எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதலாக வரும்<br />
ச எனும் கிளவியும் அப்படியே<br />
ஆனா ஔ என்ற சொல்லோடு மட்டும் மொழி முதலாய் வாராது; கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல் வராது (காட்டு: கெளமாரம், செளரம், தெளலத் போன்ற வடசொற்கள்)
இதற்கு ஆதாரமாக, பாவாணர், நன்னூல் மயிலைநாதர் உரையிலே ஒரு வெண்பாவையும் மேற்கோள் காட்டுவார்.<br />
அதில் ஆணித்தரமாகச், சகரம் மொழி முதல் வரும் என்றுள்ளது.
:சரி சமழ்ப்புச் சட்டி சருகு சவடி
:சளிசகடு சட்டை சவளி - சவிசரடு
:சத்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும்
:வந்தனவாற் சம்முதலும் வை
இன்னும், ஒப்பியன் மொழிநூல் - 1 (தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 143-144), தமிழர் வரலாறு - 2 (தமிழ் மண் பதிப்பகம், பக்கம் 42-44) பல்வேறு சகரச் சொற்களை பாவாணர் எடுத்துக் காட்டுவார்.<br />
"சகரம்", மொழி முதல் வரும் நற்றமிழ்ச் சொல்லே என்று அறிஞர் முடிபு.
==எண்ணுவோம்==
:புணர்கூட்டு = சங்கம்
:புணர்கூட்டு என்னும் சொல்லின் ஒப்புமை விளக்கச் சொல்லே சங்கம்.
:புணர்தல் என்பது கூடுதல்.
:கூட்டு என்பது கூம்பு போல் கூடுவது.
:சங்கின் உருவம் கூடிக் கூம்பிய உருளைதானே?
:சங்கைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ‘புரிவளை’தானே?
வரிசை 83:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]▼
[[பகுப்பு:தமிழ்ச் சொற்கள்]]▼
===சங்க இலக்கியக் கட்டுரைகள்===
வரி 91 ⟶ 88:
ஐ , ஔ, ஃ போன்ற ஓசைகள் உயிர் ஓசைகள் அல்ல. இவை உயிர்மெய் ஓசைகள். அய், அவ், அக் என்றே எழுதப்பட வேண்டும்.
▲[[பகுப்பு:சங்க இலக்கியம்]]
▲[[பகுப்பு:தமிழ்ச் சொற்கள்]]
|