==சோழர் கால மருத்துவமனைகள்==
[[சோழர்|சோழர்]] ஆட்சியில் மருத்துவமனைகள் “ஆதுலர் சாலைகள்” என்ற பெயரால் நிர்வகிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் திருமுக்கூடல் என்ற ஊரில், வீர இராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் வெங்கடேச பெருமாள் கோயில் நிர்வாகத்தின் கீழ் “வீரசோழன் ஆதுலா; சாலை” என்ற மருத்துவமனை செயல்பட்டுள்ளது. அங்கு மருத்துவ விடுதியும் இருந்துள்ளது.
==குந்தவை மருத்துவமனை==
முதலாம்இராசராசனின் தமக்கையார் [[குந்தவை பிராட்டியார்|குந்தவை பிராட்டியார்]] தனது தந்தை சுந்தரசோழனின் பெயரால் “சுந்தரசோழ விண்ணகர் ஆதுலார் சாலை” என்ற மருத்துவமனையை ஏற்படுத்தி அதனை நிர்வகிக்க நிலக்கொடையும் அளித்துள்ளாள்.
==இலவச மருத்துவமனை==
சோழர் கால மருத்துவக் கல்லூரிகள்.
விக்கிரம சோழனின் ஆட்சிக் காலத்தில் திருவாடுதுறையில் மருத்துவக் கல்லூரி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் [[விழுப்புரம்|விழுப்புரம்]] மாவட்டம், பெருவல்லூரில் மருத்துவக்கல்லூரி ஒன்று செயல்பட்டுள்ளது. இக்கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு சரகசம்ஹிதை, அஷ்டாங்க கிருதம் போன்ற மருத்துவ நூல்கள் கற்ப்பிக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரி மாணவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதியும் (மடம்) இருந்துள்ளது. இவ்விடுதியில் மருத்துவ மாணவர்களுக்கு உணவளிக்கப்பட்டுள்ளது. அதற்காக நிலக்கொடையும் அளிக்கப்பட்டுள்ளது.
==மருந்து வகைகள்==
# ''''இராசராசன் துணுக்குகள் நூறு'''' வெளியீடு தமிழ்நாடு தொல்லியல் துறை பக்கம் எண்: 23,24,25.
{{Reflist}}
[[பகுப்பு:சோழர்]]
[[பகுப்பு:மருத்துவ வரலாறு]]
|