உதுமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 58:
|footnotes = <Big><center>'''உதுமானியப் பேரரசின் காலக்கோடு'''</center></Big>
}}
'''உதுமானியப் பேரரசு''' (ஒத்தமான் பேரரசு, ''Ottoman Empire'', 1299–1922, [[துருக்கி மொழி|துருக்கி]]: ''Osmanlı Devleti'' 'உஸ்மான்லி தவ்லத்தி' அல்லது ''Osmanlı İmparatorluğu'') என்பது [[துருக்கி]]யர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும்.
 
இது ''துருக்கியப் பேரரசு'' எனவும் அழைக்கப்பட்டது. இப்பேரரசு கி.பி. 1299ஆம் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த [[உஸ்மான் பே]] என்பவரின் தலைமையின் கீழ் வடமேற்கு [[அனத்தோலியா]]வில் உருவாக்கப்பட்டது. சுல்தான் [[இரண்டாம் முஹம்மது|இரண்டாம் முஹம்மதால்]] கி.பி.1453இல் கைப்பற்றப்பட்ட பின்னர் ஒத்தமான் இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது.<ref>The A to Z of the Ottoman Empire, by Selcuk Aksin Somel, 2010, p.179</ref><ref>The Ottoman Empire, 1700-1922, Donald Quataert, 2005, p.4</ref><ref>The Grove Encyclopedia of Islamic Art and Architecture: Delhi to Mosque, Jonathan M. Bloom, Sheila Blair, 2009. p.82</ref>
வரிசை 75:
முதலாம் உஸ்மான், துருக்கியக் குடியிருப்புக்களை [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] (Byzantine Empire) முனைப்பகுதியை நோக்கி விரிவுபடுத்தினார்.
 
முதலாம் உஸ்மானின் மறைவுக்குப் பின் வந்த நூற்றாண்டில் உதுமானிய ஆட்சி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் ஃபல்கேன் வழியாக விரிவடைய ஆரம்பித்தது. உஸ்மானின் மகன் உர்ஹான் 1324இல் பூர்சா நகரைக் கைப்பற்றியதுடன் அதை உதுமானிய மாநிலத்தின் புதிய தலைநகராக மாற்றினார். அதாவது பூர்சா நகரின் வீழ்ச்சியினால் வடமேற்கு [[அனத்தோலியா]] பகுதியின் கட்டுப்பாட்டை [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசிடம்]] (Byzantine Empire) இழந்தது. முக்கிய நகரான தெஸ்சாலுன்கி 1387இல் வெனேடியன்ஸ்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. 1389இல் [[கொசோவோ]] உதுமானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் பிராந்தியத்தின் மீதான செர்பியர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் இது உதுமானியர்கள் ஐரோப்பாவில் தடம் பதிப்பதற்கும் காரணமாக அமைந்தது.
 
1396இல் நிகழ்ந்த நிகோபொலிஸ் போரில் மத்திய காலத்தின் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப்படை]] எனக் கருதப்படும் பெரும் படையினரால் துருக்கிய உதுமானியர்களின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை.
வரிசை 82:
 
=== விரிவாக்கம் மற்றும் உச்சநிலை (1453–1566) ===
இரண்டாம் முராத் என்பவரின் மகனான [[இரண்டாம் முகம்மத்|இரண்டாம் முகம்மத்]] ஆடசிப் பிரதேசத்தையும் இராணுவத்தையும் மறுசீரமைத்ததுடன் 29 மே 1453 அன்று [[கான்ஸ்டண்டினோப்பிள்]] நகரைக் கைப்பற்றினார். உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு பரிமாற்றாக மரபுவழி கிறிஸ்தவ தேவாலயங்களை அவற்றின் நிலங்களில் தன்னாட்சியாக இயங்குவதற்கு [[இரண்டாம் முகம்மத்|இரண்டாம் முகம்மத்]] அனுமதி வழங்கினார். ஏனெனில் ஐரோப்பிய ஆட்சி மாநிலங்களுக்கும் இறுதி பைசாந்திய இராச்சியத்துக்கும் (Byzantine Empire) இடையே மோசமான உறவு நிலவிவந்தது. பெரும்பான்மையான மரபுவழி மக்கள் வெனேடியன் அரசை விடவும் விருப்பத்துடன் உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.<ref name="books.google">{{cite book|last=Stone|first=Norman|editor=Mark Erickson, Ljubica Erickson|title=Russia War, Peace And Diplomacy: Essays in Honour of John Erickson|url=http://books.google.com/books?id=xM9wQgAACAAJ|accessdate=11 February 2013|year=2005|publisher=Weidenfeld & Nicolson|isbn=978-0-297-84913-1|page=94|chapter=Turkey in the Russian Mirror}}</ref>
 
15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உதுமானியப் பேரரசு ஒரு விரிவடையும் காலத்தினுள் நுழைந்தது. இக்காலப்பகுதயில் பேரரசு மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டதுடன் ஆடசிப் பொறுப்புத் திறமையுள்ள உறுதியான சுல்தான்களிடம் வந்தது. உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதைகள் வழியாகவே ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த பேரரசு பொருளாதாரத்திலும் தழைத்தோங்கியது.<ref>{{cite book |author=Karpat, Kemal H. |title=The Ottoman state and its place in world history |publisher=Brill |location=Leiden |year=1974 |page=111 |isbn=90-04-03945-7 |oclc= }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/உதுமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது