முதல் தாரைன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
 
== பின்னணி ==
[[ஆப்கானிசுத்தான்|ஆப்கானிசுத்தானில்]] இருந்த கோர் என்னும் சிறிய நாடு ஒன்றின் ஆட்சியாளராக இருந்த [[கோரி முகமது]] இன்றைய ஆப்கனிசுத்தானின் பெரும்பகுதியைக் கைப்பற்றியபின்னர், இன்றைய [[பாகிசுத்தான்|பாகிசுத்தானின்]] பெரும் பகுதியையும் கைப்பற்றிக்கொண்டு [[வட இந்தியா]]வுக்குள் நுழைந்தார். அக் காலத்தில் வட இந்தியாவின் இராசசுத்தான், அரியானா ஆகியவற்றுள் உள்ளடங்கிய பகுதிகளை ஆண்டு வந்தவர் [[பிரித்திவிராசு சௌகான்]]. இராசபுத்திர சௌகான் மரபினரான இவர் அக்காலத்து வட இந்திய மன்னர்களுள் பலம் பொருந்தியவராக இருந்தார். [[டில்லி]], [[அஜ்மேர்]] ஆகிய நகரங்களை இரட்டைத் [[தலைநகர்]]களாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தார்.
 
முகம்மத் கோரியின் படையெடுப்புக்கள் அவரது படைகளைப் பிரித்திவிராசின் எல்லைவரை கொண்டுவந்தன. 1191 ஆம் ஆண்டில் பிரித்திவிராசின் நாட்டின் வடமேற்கு எல்லையில் இன்றைய [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலத்தைச் சேர்ந்த பகுதியில் இருந்த [[கோட்டை]]யொன்றை முகம்மத்தின் படைகள் கைப்பற்றின. பிரித்திவிராசின் படைகள், சிற்றரசனான டில்லியைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் தலைமையில் எல்லைக்கு விரைந்தன. இரண்டு படைகளும் தாரைனில் சந்தித்துக் கொண்டன.
 
== போர் ==
முகம்மத் கோரியின் படைகள் எல்லையில் இருந்த [[பதிண்டா]] கோட்டையை முற்றுகையிட்டன. பிரித்திவிராசு தனது மாமனாரான [[ஜெயச்சந்திரன்| செயச்சந்திர ராத்தோரிடம்]] உதவி கோரினார். ராத்தோர் உதவி வழங்க மறுத்துவிட்டார். அனாலும் பிரித்துவிராசு தானே படைநடத்திச் சென்று தாரைன் என்னுமிடத்தில் எதிரிப்படைகளுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தார். முதலாம் தாரைன் போர் பிரித்திவிராசுக்கு வெற்றியாக முடிந்தது.
 
எனினும், இது நிலைக்கவில்லை அடுத்த ஆண்டே முகம்மத் கோரியின் படைகள் மீண்டும் தாக்கிப் பிருத்திவிராசின் படைகளைத் தோற்கடித்தன.
"https://ta.wikipedia.org/wiki/முதல்_தாரைன்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது